தமிழ் பழமொழி
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
பொருள்
ஒரு குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ ஒற்றுமை குலைந்தால், அதை வெளியில் இருப்பவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
விளக்கம்
ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குள் சண்டையும் பிரிவினையும் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி மூன்றாவது நபரான கூத்தாடி (அன்னியர்கள்) ஆதாயம் அடைவான். ஒற்றுமையின்மையால் சண்டையிடுபவர்களுக்கு நஷ்டமே தவிர, அதை வேடிக்கை பார்ப்பவர்களுக்கே லாபம்.