தமிழ் பழமொழி
இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
பொருள்
சிறு வயதில் கற்கும் கல்வி மனதில் பசுமையாக என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.
விளக்கம்
பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் பல ஆண்டுகள் கடந்தாலும் அழியாமல் இருக்கும். அதுபோல, மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்கும் நல்ல பாடங்களும் ஒழுக்கங்களும் அவனது வாழ்நாள் முழுவதும் மாறாமல் நினைவில் இருக்கும்.