தமிழ் பழமொழி
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
பொருள்
ஒரு காரியம் கைமீறிப் போனதற்குப் பிறகு அல்லது காலம் கடந்த பிறகு அதற்கான பரிகாரம் தேடுவதால் பலனில்லை.
விளக்கம்
ஒருவனுக்குக் கண் பார்வை முழுமையாகப் போனதற்குப் பிறகு, கண் ஒளி பெற வேண்டிச் சூரியனை நோக்கி கும்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல, ஒரு வாய்ப்பு இருக்கும்போதே அதைப் பயன்படுத்தாமல், எல்லாவற்றையும் இழந்த பிறகு வருந்துவது வீணாகும்.