தமிழ் பழமொழி
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.
பொருள்
ஒரு குடும்பம் அல்லது சமூகம் நல்வழியில் சிறப்பதும் சீரழிந்து போவதும் அங்குள்ள பெண்களின் வழிகாட்டுதலில் உள்ளது.
விளக்கம்
ஒரு குடும்பம் மிக உயர்ந்த நிலைக்குப் பொருளாதார ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் முன்னேறுவது அந்த வீட்டில் உள்ள பெண்ணின் நிர்வாகத் திறமையிலும் நற்குணத்திலும் தான் உள்ளது. அதேபோல, ஒரு குடும்பமோ அல்லது நாடோ தவறான வழியில் சென்று அழிந்து போவதற்கும் பெண்களின் தவறான வழிகாட்டுதலே காரணமாகும்.