தமிழ் பழமொழி
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
பொருள்
உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
விளக்கம்
நாம் உண்ணும் உணவை அவசரமாக விழுங்காமல், வாயில் வைத்து பற்களால் நன்றாக அரைத்து, கூழ்மமாக்கிச் சாப்பிட்டால் செரிமான உறுப்புகளுக்கு வேலை குறையும். இதனால் உடலில் நோய்கள் வராமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.