அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
வான்சிறப்பு
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
சொல் பொருள்
ஏரின் - ஏரால்
உழாஅர் - உழமாட்டார்கள்
உழவர் - உழவர்கள்
புயல் - மழை
வாரி - வருவாய்
வளங்குன்றிக் கால் - வளம் குறைந்தால்
உழாஅர் - உழமாட்டார்கள்
உழவர் - உழவர்கள்
புயல் - மழை
வாரி - வருவாய்
வளங்குன்றிக் கால் - வளம் குறைந்தால்
விளக்கம்
மழை என்னும் வருவாய் குறைந்துவிட்டால், பயிர்களை விளைவிக்கும் உழவர்களும் ஏரால் நிலத்தை உழமாட்டார்கள்.
கருத்து
மழை வளம் குறைந்தால் உழவர்களால் உழவு செய்ய முடியாது.