தமிழ் பழமொழி
காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல.
பொருள்
யதேச்சையாக நடக்கும் ஒரு நிகழ்வை ஒருவரின் செயலால் நடந்தது எனத் தவறாகக் கருதுதல்.
விளக்கம்
பழுத்த பனம்பழம் தானாக விழும் நிலையில் இருக்கும்போது காக்கை அதன் மேல் அமர, பழம் கீழே விழுகிறது. காக்கை அமர்ந்ததால் தான் பழம் விழுந்தது என்று கூறுவது போன்ற தற்செயலான நிகழ்வுகளை இது குறிக்கும்.