GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · கடவுள் வாழ்த்து குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


சொல் பொருள்

கற்றதனால் - கற்ற கல்வியால்
ஆய பயன் - பெற்ற பயன்
என்கொல் - என்ன பயன்?
வாலறிவன் - தூய அறிவுடைய இறைவன்
நற்றாள் - நல்ல திருவடிகளை
தொழாஅர் - வணங்காதவர்
எனின் - என்றால்

விளக்கம்

ஒருவர் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், தூய அறிவுடைய இறைவனின் திருவடிகளை வணங்கவில்லை என்றால், அவர் கற்ற கல்வியால் என்ன பயன்?

கருத்து

இறைவனின் திருவடிகளை வணங்காதவருக்குக் கற்ற கல்வியால் பயன் இல்லை.
;