GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.


சொல் பொருள்

குணம் - நல்ல பண்பு
என்னும் - என்று சொல்லப்படும்
குன்றேறி நின்றார் - நல்ல பண்புகளின் உயர்ந்த நிலையில் நிற்பவர்கள்
வெகுளி - சினம்
கணமேயும் - ஒரு கணம்கூட
காத்தல் - தாங்குதல்
அரிது - கடினம்

விளக்கம்

நற்பண்புகளின் சிகரமாக விளங்கும் பெரியோர்கள் சினம் கொண்டால், அச்சினத்தை ஒரு கணம்கூடத் தாங்குவது இயலாது.

கருத்து

நற்குணம் நிறைந்த பெரியோரின் சினத்தை ஒரு கணம்கூடத் தாங்குவது கடினம்.
;