GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

வாழ்க்கை ஞானம் பற்றிய பழமொழிகள்

வாழ்க்கை ஞானம் தொடர்பான தமிழ் பழமொழிகளை இப்பக்கத்தில் காணலாம்.

26.

அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?

பொருள் எப்போதோ ஒருமுறை கிடைக்கும் சிறப்பு வாய்ப்பு எந்நாளும் கிடைக்காது.
27.

அம்மணமும் இன்னலும் ஆயுசுபரியந்தமா?

பொருள் வறுமையும் துன்பமும் வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை.
28.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல.

பொருள் ஏற்கனவே பெரிய கோபத்திலோ அல்லது துன்பத்திலோ இருப்பவர்களை மேலும் தூண்டிவிட்டு நிலைமையைக் மோசமாக்குவது.
29.

விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

பொருள் மிகவும் மலிவான அல்லது தகுதியற்ற ஒரு பொருளுக்கு ஆடம்பரமாக அலங்காரம் செய்து அழகு பார்ப்பது போன்ற வீண் செயல்.
30.

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

பொருள் அதிகமாக வெளிப்படையாகக் கோபப்படுபவர்களிடம் தூய்மையான நல்ல குணங்களும் மறைந்திருக்கும்.
;