GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 76 to 100

76.  1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது?
Answer: C.   நீதிக்கட்சி
77.  எந்த அரசியல் குழு நீதிகட்சியாக மாறியது?
Answer: C.   சவுத்இண்டியன் லிபரேசன் பிரண்ட்
78.  முதன் முதலில் கருத்துப்படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Answer: C.   C. சுப்பிரமண்ய பாரதி
79.  நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது?
Answer: A.   அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
80.  திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
Answer: A.   டி.ஜான் ரத்தினம்
81.  தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (தியாகி) -
Answer: B.   பத்மாசானி அம்மாள்
82.  கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று/கூற்றுகள் எவை?
1. இவர் திருவாங்கூர் அரசில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்.
2. இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை தோற்றுவித்தார்.
3. இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931 ல் திருமணம் செய்து கொண்டார்.
4. இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
Answer: D.   1,2,3,4 சரியானது
83.  எந்த விடுதலைப் போராட்ட பெண்மணி மெட்ராஸ் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?
Answer: C.   செல்வி துர்க்காபாய்
84.  கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது?
(i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்
(ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகபடியான வரி விதிப்பு
(iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்
(iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்
Answer: D.   (i), (ii), (iii), (iv)
85.  “___________, ___________, ___________ இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு.”
மேற்காணும் திருக்குறளில் இடம்பெறும் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பவை
Answer: C.   தூங்காமை, கல்வி, துணிவு
86.  பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answer: B.   உலகத்தோடு ஒத்து நடக்காதவரை
87.  “___________ நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி”, என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார்?
Answer: C.   கொடை, கருணை, நீதி, தளர்ந்த குடிகளைக்காத்தல்
88.  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் - இதில் வலியுறுத்தப்படுவது எது?
Answer: C.   போலி ஒழுக்கம்
89.  கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) தொடர்பான உண்மைகளைத் தேர்வு செய்யவும் :
(a) பெரும்பாலானவை அமில அடிப்படை சார்ந்தவை, ஆல்கஹால் அடிப்படை சார்ந்தவை அல்ல.
(b) அவை நன்றாக எரியக்கூடியவை.
(c) அவை சிதல்விதைகளுக்கு எதிரான செயலூக்கம் கொண்டவை.
(d) கைகளில் உள்ள ‘கைசுத்திகரிப்பான்' உலரும் முன்பே அதனை நன்றாக கைகளிலிருந்து துடைப்பது சரியானதொரு செயல் ஆகும்.
Answer: B.   (b) மட்டும்
90.  துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்?
Answer: C.   துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்
91.  “___________ இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்”
மேற்காணும் திருக்குறள் எவ்வினைகள் நடைபெறாது என்று கூறுகிறது?
Answer: B.   தானம், தவம்
92.  கீழ்காணும் அறிகுறிகளில் கோவிட்-19 தொடர்பானவை எவை?
(a) காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு
(b) சுவை அறியும் திறன் இல்லாமல் போவது
(c) தொண்டை வலி
(d) மூச்சு விடுவதில் சிரமம்
Answer: D.   (a), (b), (c) மற்றும் (d)
93.  பூகம்ப பாதிப்புகளோடு தொடர்பற்ற விளைவை தெரிவு செய்க.
Answer: D.   தாழ்வுமண்டலம் உருவாதல்
94.  “அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்”
மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?
Answer: B.   மக்கள் பண்பு இல்லாதவர்
95.  பயில்தொறும் பண்புடையாளர்தொடர்பு எதைப் போன்றது என திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer: B.   நவில்தொறும் நூல் நயம் போன்றது
96.  'சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்
1. எல்லாச் சமயத்தவரும் இது எம் நூல் என்று கூறும் சிறப்புப் பெற்றதால்
2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப் பெற்றதால்
3. இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
4. மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
Answer: D.   அனைத்தும் சரி
97.  'மணல் வீடு' என்ற நாவலின் ஆசிரியர் யார்?
Answer: A.   அனுத்தமா
98.  மேலாண்மை பொன்னுச்சாமியின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றபடைப்பு எது?
Answer: A.   மின்சாரப்பூ
99.  'அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலார்'
- எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Answer: D.   திருமூலர்
100.  தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது?
Answer: A.   சிலப்பதிகாரம்
;