நீதி மற்றும் அறம் பற்றிய பழமொழிகள்
நீதி மற்றும் அறம் தொடர்பான தமிழ் பழமொழிகளை இப்பக்கத்தில் காணலாம்.
1.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
பொருள்
நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் நமக்கே வந்து சேரும்.
2.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
பொருள்
நாம் அடுத்தவருக்குச் செய்யும் நன்மையோ தீமையோ, அது நமக்கே பிற்காலத்தில் திரும்பக் கிடைக்கும்.
3.
தர்மம் தலைகாக்கும்.
பொருள்
நாம் பிறருக்குச் செய்யும் தர்ம காரியங்கள் ஆபத்தான நேரத்தில் நம் உயிரைக் காப்பாற்ற உதவும்.
4.
அடாது செய்தவன் படாது படுவான்.
பொருள்
தகாத செயல்களைச் செய்பவர்கள் தாங்க முடியாத துயரங்களை அனுபவிப்பார்கள்.