GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  ‘புனையா ஓவியம்' என்பதன் பொருள்
Answer: D.   கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
27.  கிருஷ்ணகிரி, கோத்தகிரி - இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
Answer: C.   மலை
28.  திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் 'திருவிளையாடல் புராணம்'
II. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
Answer: B.   II மற்றும் III சரியானவை
29.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரௌல்
(c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம்
Answer: C.   3 4 1 2
30.  பொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்
Answer: B.   2 4 1 3
31.  வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று வரிசை இரண்டு
(a) Internet 1. மின் இதழ்
(b) Search Engine 2. மின் நூல்
(c) E. Journal 3. இணையம்
(d) E-Book 4. தேடுபொறி
Answer: C.   3 4 1 2
32.  கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
Answer: C.   ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
33.  பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை திணை
(a) 10, 20, 30, 40... 1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36... 2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34... 3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18... 4. மருதத் திணை
Answer: D.   2 4 1 3
34.  ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
(a) வலை 1. பொந்து
(b) வளை 2. மீன்வகை
(c) வாளை 3. மரவகை
(d) வாழை 4. மீன்பிடி வலை
Answer: C.   4 1 2 3
35.  கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
Answer: A.   I, II சரியானவை
36.  நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
Answer: A.   பனூ அகமது மரைக்காயர்
37.  பொருந்தா ஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்
Answer: B.   'சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'
38.  'இராசராச சோழனுலா'வைப் பாடியவர்
Answer: A.   ஒட்டக்கூத்தர்
39.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி
Answer: A.   3 4 1 2
40.  "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
Answer: A.   தொல்காப்பியர்
41.  கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
Answer: C.   நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்
42.  “இருட்டறையில் உள்ளதடா உலகம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Answer: B.   பாரதிதாசன்
43.  மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
Answer: B.   திருப்பெருந்துறை
44.  ‘கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்
Answer: A.   ந.மு. வேங்கடசாமி நாட்டார்
45.  "மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்"
என்று பாராட்டப்படுபவர்
Answer: D.   அப்துல் ரகுமான்
46.  மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
Answer: D.   ஆகாயத்துக்கு அடுத்த வீடு
47.  'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்' என எடுத்துரைத்தவர்
Answer: D.   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
48.  'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
Answer: B.   வாணிதாசன்
49.  பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
புனைபெயர் இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன் 1. செகதீசன்
(b) ஈரோடு தமிழன்பன் 2. எத்திராஜ்
(c) வாணிதாசன் 3. முத்தையா
(d) கண்ணதாசன் 4. சொ. விருத்தாசலம்
Answer: B.   4 1 2 3
50.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
Answer: C.   வெற்பு
;