TNPSC Group 2 2016 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
1.
கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'துள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் 'தண்டலம்' என்றழைக்கப்படுகிறது
III. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் 'தமிழ்த் தென்றல்' என்று சிறப்பிக்கப்படுகிறார்
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'துள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் 'தண்டலம்' என்றழைக்கப்படுகிறது
III. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் 'தமிழ்த் தென்றல்' என்று சிறப்பிக்கப்படுகிறார்
A.
I மற்றும் IV பொருத்தமற்றவை
B.
II மற்றும் IV பொருத்தமற்றவை
C.
IV மற்றும் III பொருத்தமற்றவை
D.
II மற்றும் III பொருத்தமற்றவை
Answer:
D.
II மற்றும் III பொருத்தமற்றவை
2.
பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
A.
பஃறி
B.
திமில்
C.
ஓடை
D.
வங்கம்
Answer:
C.
ஓடை
3.
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
A.
பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
B.
பாரதிதாசன் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர்
C.
பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்
D.
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்
Answer:
D.
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்
4.
பொருத்துக
| I | II |
|---|---|
| (a) இமயம் | 1. சந்தனம் |
| (b) குடகு | 2. பவளம் |
| (c) கொற்கை | 3. மணிகள் |
| (d) கீழ்க்கடல் | 4. முத்து |
A.
3 1 4 2
B.
2 4 3 1
C.
4 3 1 2
D.
1 4 2 3
Answer:
A.
3 1 4 2
5.
பொருந்தா இணையைக் கண்டறிக
A.
பரவை – கடல்
B.
கரி – நரி
C.
பரி – குதிரை
D.
கணை – அம்பு
Answer:
B.
கரி – நரி
6.
கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்
A.
சந்திரோதயம்
B.
ஓர் இரவு
C.
தூக்குமேடை
D.
வேலைக்காரி
Answer:
C.
தூக்குமேடை
7.
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
A.
ஆங்கில மொழி
B.
இலத்தீன் மொழி
C.
வட மொழி
D.
பிரெஞ்சு மொழி
Answer:
B.
இலத்தீன் மொழி
8.
“பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கைவீதி மருங்கில் போகி” – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் :
சுருங்கைவீதி மருங்கில் போகி” – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் :
A.
கோட்டைவாயில்
B.
அந்தப்புரம்
C.
சுரங்கப்பாதை
D.
வேனிற்பள்ளி
Answer:
C.
சுரங்கப்பாதை
9.
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
A.
தேம்பாவணி’யில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை
B.
தேம்பாவணியை, ‘புறநிலைக் காப்பியம்’ என்று, தன்னை, புறநிலைக் காப்பியம் என்னும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்
C.
சீறாப்புராணத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன
D.
அரபுச்சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது
Answer:
D.
அரபுச்சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது
10.
பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
A.
தேசிகப்பாவை
B.
மர வட்டிகை
C.
புனையா ஓவியம்
D.
கண்ணுள் வினைஞர்
Answer:
A.
தேசிகப்பாவை
11.
பொருத்துக:
| வள்ளல்கள் | சிறப்பு |
|---|---|
| (a) பேகன் | 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன் |
| (b) காரி | 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் |
| (c) ஆய் அண்டிரன் | 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன் |
| (d) ஓரி | 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் |
A.
2 4 1 3
B.
1 3 4 2
C.
3 4 1 2
D.
2 3 1 4
Answer:
A.
2 4 1 3
12.
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| (a) ஆகாறு | 1. செலவழியும் வழி |
| (b) போகாறு | 2. திருமணம் |
| (c) தகர் | 3. பொருள் வரும் வழி |
| (d) வதுவை | 4. ஆட்டுக்கிடாய் |
A.
3 1 4 2
B.
4 3 2 1
C.
2 4 1 3
D.
3 4 2 1
Answer:
A.
3 1 4 2
13.
பொருத்துக
| பதிற்றுப்பத்து | பாடியவர் |
|---|---|
| (a) மூன்றாம் பத்து | 1. பெருங்குன்றூர்க் கிழார் |
| (b) ஆறாம்பத்து | 2. அரிசில்கிழார் |
| (c) எட்டாம் பத்து | 3. காக்கை பாடினியார் |
| (d) ஒன்பதாம் பத்து | 4. பாலைக் கௌதமனார் |
A.
4 3 2 1
B.
2 3 1 4
C.
1 3 4 2
D.
2 3 4 1
Answer:
A.
4 3 2 1
14.
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
A.
மதுரைக் கலம்பகம்
B.
நந்திக் கலம்பகம்
C.
கந்தர் கலிவெண்பா
D.
நீதிநெறி விளக்கம்
Answer:
B.
நந்திக் கலம்பகம்
15.
தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
A.
சுரதா
B.
வாணிதாசன்
C.
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
D.
பாரதிதாசன்
Answer:
B.
வாணிதாசன்
16.
சரியான விடையைத் தெரிவு செய்க
'கிறித்தவக் கம்பர்' எனப் புகழ்பெறுபவர்
'கிறித்தவக் கம்பர்' எனப் புகழ்பெறுபவர்
A.
வீரமாமுனிவர்
B.
ஜி.யூ. போப்
C.
எல்லீஸ்
D.
ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார்
Answer:
D.
ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார்
17.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
A.
மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்
B.
இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
C.
இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்க சொக்கநாதன்
D.
பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்
Answer:
D.
பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்
18.
கீழே தரப்பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக
I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்
III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, 'மகாத்மா' எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு
I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்
III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, 'மகாத்மா' எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு
A.
I, III, IV சரியானவை
B.
I, II, IV சரியானவை
C.
II, III, IV சரியானவை
D.
II, I, III சரியானவை
Answer:
A.
I, III, IV சரியானவை
19.
பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயணி
A.
தாலமி
B.
பிளினி
C.
யுவான் சுவாங்
D.
மார்க்கோ போலோ
Answer:
D.
மார்க்கோ போலோ
20.
“பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை” என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?
A.
நாமக்கல் கவிஞர்
B.
பாரதிதாசன்
C.
கவிமணி
D.
ச.து.சு. யோகியார்
Answer:
A.
நாமக்கல் கவிஞர்
21.
பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக
A.
ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
B.
ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
C.
ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
D.
ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்
Answer:
D.
ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்
22.
பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்
A.
புளியமரத்தின் கதை
B.
பஞ்சும் பசியும்
C.
ஜே.ஜே. சில குறிப்புகள்
D.
குழந்தைகள் ஆண்கள் பெண்கள்
Answer:
B.
பஞ்சும் பசியும்
23.
பட்டியல் I-இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
| கவிதை நூல் | கவிஞர் |
|---|---|
| (a) புலரி | 1. கலாப்ரியா |
| (b) சுயம்வரம் | 2. பசுவய்யா |
| (c) மின்னற்பொழுதே தூரம் | 3. கல்யாண்ஜி |
| (d) யாரோ ஒருவனுக்காக | 4. தேவதேவன் |
A.
2 3 4 1
B.
3 4 1 2
C.
4 2 3 1
D.
3 1 4 2
Answer:
D.
3 1 4 2
24.
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மொழி ஞாயிறு | 1. பாரதிதாசன் |
| (b) மகா கவி | 2. பெருஞ்சித்திரனார் |
| (c) புரட்சிக் கவி | 3. தேவநேயப் பாவாணர் |
| (d) பாவலரேறு | 4. பாரதியார் |
A.
1 3 4 2
B.
3 4 1 2
C.
4 1 2 3
D.
2 4 1 3
Answer:
B.
3 4 1 2
25.
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்ட்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் | 1. கவிமணி தேசிக விநாயகனார் |
| (b) தேன்மழை | 2. சயங்கொண்டார் |
| (c) குழந்தைச் செல்வம் | 3. திரு. வி. க. |
| (d) இசையாயிரம் | 4. சுரதா |
A.
3 2 1 4
B.
3 4 1 2
C.
3 1 2 4
D.
4 2 1 3
Answer:
B.
3 4 1 2