GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  “உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்று கூறியவர்
Answer: B.   அறிஞர் அண்ணா
77.  "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
Answer: C.   தேவநேயப் பாவாணர்
78.  “சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்” என்று உரை நிகழ்த்தியவர்
Answer: D.   ரா.பி. சேதுப்பிள்ளை
79.  கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.
Answer: A.   கூற்று 1, 2 சரி, 3 தவறு
80.  மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
Answer: B.   ஐவகை
81.  தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
Answer: A.   முதல் தலைமுறை
82.  கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?
Answer: A.   மயிலாட்டம்
83.  கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
Answer: C.   மனுமுறை கண்ட வாசகம்
84.  'விளக்குகள் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
Answer: B.   லிலியன் வாட்சன்
85.  உலகளாவிய தமிழர்கள் - சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
Answer: B.   புயலிலே ஒரு தோணி
86.  'தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா' என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?
Answer: C.   கல்கி
87.  புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
Answer: B.   முதுமொழிக்காஞ்சி
88.  வெண்குடை - இலக்கணக் குறிப்பு தருக.
Answer: D.   பண்புத்தொகை
89.  திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
Answer: C.   நல்லாதனார்
90.  சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
Answer: B.   குகன்
91.  'அனகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
Answer: B.   இராமன்
92.  யாழின் வகைகள் யாவை?
Answer: A.   4
93.  "குடிமக்கள் காப்பியம்" - எனப்படுவது
Answer: A.   சிலப்பதிகாரம்
94.  'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
இப்பாடலில் பயின்று வரும் அணி
Answer: C.   தற்குறிப்பேற்ற அணி
95.  உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்
Answer: B.   முதுமொழிமாலை
96.  பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
Answer: D.   குலசேகராழ்வார்
97.  இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்
Answer: B.   சிலேடை அணி
98.  மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
Answer: A.   சிவகாமியின் சரிதம்
99.  இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு
Answer: A.   1891
100.  'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
Answer: B.   குதம்பைச் சித்தர்
;