GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2012

General Tamil Questions 51 to 75

1.  'துற' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
A.   துறப்ப
B.   துறந்து
C.   துறத்தல்
D.   துறந்தான்.
Answer: C.  துறத்தல்
2.  Mole என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   அணுத்திரண்மம்
B.   நுண்கூறு
C.   அலைதாங்கி
D.   சிறுதுணுக்கு.
Answer: C.  அலைதாங்கி
3.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. தொழிற்பெயர்
4. பண்புப்பெயர்
பட்டியல் II
அ. கொங்கன்
ஆ. ஈவான்
இ. அந்தணன்
ஈ. அத்திகோசத்தான்.
A.   அ ஆ இ ஈ
B.   ஈ அ ஆ இ
C.   ஈ ஆ இ அ
D.   இ அ ஆ ஈ.
Answer: B.  ஈ அ ஆ இ
4.  'வினைத்தொகை' என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
A.   மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
B.   இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
C.   எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
D.   காலத்தை உணர்த்தாது வரும்.
Answer: A.  மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
5.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :
கருநிறம், குருநிறம்
A.   பண்புத்தொகை, பண்புத்தொகை
B.   பண்புத்தொகை, வினைத்தொகை
C.   பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
D.   வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
Answer: C.  பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
6.  'கல்' என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
A.   கல்-கற்றான் — வினையெச்சம்
B.   கல்-கற்றான் — வினைமுற்று
C.   கல்-கற்றான் — தொழிற்பெயர்
D.   கல்-கற்றான் — பெயரெச்சம்.
Answer: B.  கல்-கற்றான் — வினைமுற்று
7.  'பார்குலாம்' என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?
A.   குணப்பெயர்
B.   இடப்பெயர்
C.   தொழிற்பெயர்
D.   சினைப்பெயர்.
Answer: B.  இடப்பெயர்
8.  மருத நிலமக்களின் 'நந்தா விளக்கம்' எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
A.   உலா
B.   பள்ளு
C.   பிள்ளைத்தமிழ்
D.   கலம்பகம்.
Answer: B.  பள்ளு
9.  குறிஞ்சிக்கு ____________________ என இவரைக் கூறுவர்.
A.   பரணர்
B.   கம்பர்
C.   கபிலர்
D.   குமரகுருபரர்.
Answer: C.  கபிலர்
10.  'செல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க:
A.   சென்ற
B.   சென்று
C.   சென்றவன்
D.   சென்றான்.
Answer: B.  சென்று
11.  குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
A.   பிரயோக விவேகம்
B.   தொன்னூல் விளக்கம்
C.   இலக்கண விளக்கம்
D.   பிரபந்த தீபிகை.
Answer: C.  இலக்கண விளக்கம்
12.  சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :
நீர்வேலி, ஒரு தனி
A.   வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
B.   உருவகம், ஒருபொருட் பன்மொழி
C.   பண் புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
D.   பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி.
Answer: B.  உருவகம், ஒருபொருட் பன்மொழி
13.  'மாட்சி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
A.   தொழிற்பெயர்
B.   பண்புப்பெயர்
C.   வினையாலணையும் பெயர்
D.   காலப்பெயர்.
Answer: B.  பண்புப்பெயர்
14.  பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I ஆசிரியர்கள்
1. ஒட்டக்கூத்தர்
2. திருநாவுக்கரசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
4. வாணிதாசன்
பட்டியல் II சிறப்புப் பெயர்கள்
அ. திவ்விய கவி
ஆ. பாவலர் மணி
இ. கவிராட்சசன்
ஈ. வாகீசர்.
A.   ஆ இ ஈ அ
B.   இ ஈ அ ஆ
C.   ஈ அ ஆ இ
D.   அ இ ஈ ஆ.
Answer: B.  இ ஈ அ ஆ
15.  இராமாயணத்தில் 'சுந்தரன்' என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
A.   இராமன்
B.   அனுமன்
C.   இலக்குவன்
D.   விபீடணன்.
Answer: B.  அனுமன்
16.  இவற்றுள் எத்தொடர் சரியானது ?
A.   உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
B.   உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
C.   உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
D.   உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
Answer: D.  உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
17.  Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   கபட நாடகம்
B.   கபாடம்
C.   கபடம்
D.   பாசாங்கு.
Answer: B.  கபாடம்
18.  'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?
A.   ஆசாரக் கோவை
B.   நான்மணிக்கடிகை
C.   இனியவை நாற்பது
D.   சீவகசிந்தாமணி.
Answer: B.  நான்மணிக்கடிகை
19.  'ஒங்கு' எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?
A.   கலித்தொகை
B.   பரிபாடல்
C.   அகநானூறு
D.   குறுந்தொகை.
Answer: B.  பரிபாடல்
20.  Cellphone என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   தொலைபேசி
B.   அலைபேசி
C.   கைபேசி
D.   செல்பேசி.
Answer: A.  தொலைபேசி
21.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
A.   கணவனை இழந்தோர் யார் ?
B.   கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
C.   யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
D.   இல் என்பதன் பொருள் யாது ?
Answer: C.  யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
22.  'அண்ணி' — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
A.   குடிப்பெயர்
B.   கிளைப்பெயர்
C.   காலப்பெயர்
D.   சுட்டுப்பெயர்.
Answer: B.  கிளைப்பெயர்
23.  உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
A.   கதிரேசச் செட்டியார்
B.   மறைமலை அடிகள்
C.   எஸ். வையாபுரிப்பிள்ளை
D.   மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
Answer: D.  மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
24.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. ஒழி
2. கழி
3. ஒளி
4. களி
பட்டியல் II
அ. தடி
ஆ. நீக்கு
இ. மகிழ்ச்சி
ஈ. வெளிச்சம்.
A.   ஆ அ ஈ இ
B.   இ ஆ அ ஈ
C.   ஆ அ இ ஈ
D.   அ இ ஆ ஈ.
Answer: A.  ஆ அ ஈ இ
25.  பட்டியல் I ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I தாவரம்
1. தாழை
2. மா
3. வேப்பம்
4. தென்னை
பட்டியல் II உறுப்பு
அ. ஓலை
ஆ. மடல்
இ. இலை
ஈ. தழை.
A.   ஆ இ ஈ அ
B.   இ ஈ அ ஆ
C.   ஆ ஈ இ அ
D.   அ ஆ ஈ இ.
Answer: A.  ஆ இ ஈ அ
;