GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2013

General Studies Questions 1 to 25

1.  கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
(i) ஏட்ரியோ வென்டிரிகுலார் வால்வுகள் மூடுவதால் “லப்” என்ற ஒலி தோன்றுகிறது.
(ii) அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் "டப்" என்ற ஒலி தோன்றுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Answer: D.   (i) மற்றும் (ii) சரி
2.  இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
Answer: C.   வைட்டமின் K மற்றும் கால்சியம்
3.  கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
பரிமாற்ற ஆர்என்ஏ அமைப்பு வரைபடம்
Answer: A.   (1) டி.யு.சி. வளையம் (2) எதிர்கோடான் வளையம் (3) டி.எச்.யு. வளையம்
4.  ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
Answer: D.   ஆக்சிஜன்
5.  பொருத்துக:
(a) ஆகஸ்ட் சலுகை 1. 1944
(b) C.R. திட்டம் 2. 1945
(c) வேவல் திட்டம் 3. 1946
(d) இடைக்கால அரசாங்கம் 4. 1940
Answer: C.   4 1 2 3
6.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) நேரு அறிக்கை 1. 1940
(b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 2. 1928
(c) தனிநபர் சத்யாகிரகம் 3. 1946
(d) அட்லி பிரபுவின் அறிவிப்பு 4. 1931
Answer: A.   2 4 1 3
7.  கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A): 1910-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R): கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
Answer: D.   (A) தவறானவை (R) உண்மையானவை
8.  கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும்:

(i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
(ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
(iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
(iv) சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
Answer: D.   (i), (ii) மற்றும் (iii)
9.  பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Answer: B.   முட்டை மற்றும் கோழிவளர்ப்பு - வெண்மை புரட்சி
10.  கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?

I. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.
II. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது.
III. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.
IV. இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும்.
Answer: C.   III மற்றும் IV தவறானது
11.  கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
வருடம் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)
1973-74 321
1987-88 307
1993-94 320
1999-2000 260

எந்த வருடம், அதன் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது?
Answer: C.   1993-94
12.  கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக்காலம் பின்பற்றப்பட்டது.
காரணம் (R): மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா-பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
Answer: D.   (A) மற்றும் (R) சரியானவை
13.  கூற்று (A): புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம் (R): எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக் குறைவு. அலையின் சீற்றத்தைக் குறைக்கும்.
Answer: B.   A மற்றும் R சரி
14.  பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?
Answer: B.   நிலைமின் வண்ணம் தெளித்தல்
15.  இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2: 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே
Answer: A.   4:1
16.  தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக.

I. ஐ.ஆர்.எஸ்
II. ஸ்பாட்
III. டிரையோஸ்
IV. லாண்ட்சாட்
Answer: B.   III, IV, II, I
17.  பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க.

உயிர் கோளம் — மாநிலம்
I. கான்கா — மத்திய பிரதேசம்
II. நந்தா தேவி — உத்தராஞ்சல்
III. மானஸ் — அசாம்
IV. நாம்தாப்பா — அருணாசல பிரதேசம்
Answer: B.   II
18.  கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்:

தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது.
Answer: A.   நிலச்சரிவும் வெள்ளமும்
19.  உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.
II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
III. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.
Answer: A.   I மற்றும் II
20.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி:

BHC, DDT, 2,4-D, யூரியா
Answer: D.   யூரியா
21.  உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
Answer: D.   பாத்திமா பீவி
22.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
காரணம் (R): 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி
23.  இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.

I. ஆர். வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
Answer: A.   I, II, III, IV
24.  போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு
Answer: D.   1984
25.  'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer: B.   A.P.J. அப்துல் கலாம்
;