GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2025 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  கூற்று [A]: மண்டல மன்றங்கள் அவற்றின் தோற்றத்திற்கு அரசியலமைப்பிற்குக் கடமைப்பட்டுள்ளது.
காரணம் [R]: மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.
Answer: D.   [A] தவறு; ஆனால் [R] சரி
27.  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் (தடுப்பு மற்றும் சட்டத்தடுப்பு, துயர் துடைப்பு) தடைசட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Answer: A.   2013
28.  கீழ்கண்டவற்றை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
1. கோலக்நாத் v/s பஞ்சாப் மாநிலம்
2. கேசவானந்த பாரதி v/s கேரளா மாநிலம்
3. மினர்வா மில்ஸ் லிமிட் V/s இந்திய அரசு
4. A.K. கோபாலன் v/S மதராஸ் அரசு
Answer: C.   4, 1, 2, 3
29.  சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க.
(a) இந்திய தடுப்பு காவல் சட்டம் 1. 1971
(b) தேசிய அவசரகால சட்டத்திற்கு ஜெரால்ட் ஃபோர்டு கையெழுத்திட்ட ஆண்டு 2. 1974
(c) இந்தோ-பாகிஸ்தான் போர் 3. 1950
(d) வெளிநாட்டு பரிவர்த்தனை பாதுகாப்பு மற்றும் கடத்தல் செயல்பாடுகள் தடுப்பு சட்டம் 4. 1976
Answer: C.   3 4 1 2
30.  கீழ்கண்ட வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க.
(i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
(ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
(iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
(iv) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
Answer: D.   (i), (ii), (iii) மட்டும் சரி
31.  கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
கூற்று [A]: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்ககூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.
காரணம் [R]: காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.
Answer: A.   [A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
32.  கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்?
(i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
(ii) வெளிப்படையான தரவுகள், தரவு மாதிரிகள் மற்றும் இணையவழி ஆதாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல்
(iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஈர்த்தல்
Answer: B.   (i) மற்றும் (iii) மட்டும்
33.  பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் நோக்கங்களை தெரிவு செய்க.
(i) இது குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பது ஆகும்.
(ii) அரசின் செயல்பாடுகள் குறித்து குடிமக்களுக்கு தெரியப்படுத்துவது.
(iii) இது அரசமைப்பின் உறுப்பு 13-ன் கீழ் உறுதியளிக்கப்பட்ட குடிமக்களுக்கு, பொது அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அளிக்கிறது.
Answer: C.   (i) மற்றும் (ii) மட்டும்
34.  இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
Answer: C.   மகாராஷ்டிரா
35.  பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
(i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோர்கட்கு தேர்தல்கள் நடத்துவது.
(ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ரமாதேவி ஆவார்.
(iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென்வர்மா ஆவார்.
Answer: C.   (i) மற்றும் (ii) மட்டும்
36.  பொருத்துக.
(a) சரத்து 257(A) 1. மானிய உதவி
(b) சரத்து 131 2. நீதித்துறை நடவடிக்கைகள்
(c) சரத்து 245(1) 3. உச்ச நீதிமன்றம்
(d) சரத்து 275 4. மாநில அதிகார வரம்பு
5. 42வது திருத்தச் சட்டம்
Answer: A.   5 3 4 1
37.  சரியான இணையை தேர்வு செய்க.
(i) நான்காம் நிதி குழு - ஏ.கே.சந்தா
(ii) பத்தாம் நிதி குழு - திரு. கே.சி.பந்த்
(iii) ஆறாம் நிதி குழு - டாக்டர். ராஜ மன்னார்
(iv) ஒன்பதாம் நிதி குழு - திரு. என்.கே.பி. சால்வே
Answer: B.   (ii) மற்றும் (iv) சரி
38.  ஊராட்சிகளின் நிதி நிலைமைகளை சீராய்வு செய்யும் அதிகாரம் இந்த அரசியல் சாசன விதியின் கீழ் செய்யப்படுகிறது.
Answer: A.   அரசியல் சாசன விதி 243-I
39.  மாநில சட்டமன்ற உறுப்பினர் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) 25 வயது நிரம்பியவர்கள் சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
(ii) 30வயது நிரம்பியவர்கள் சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
(ii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
Answer: B.   (i) மற்றும் (ii) மட்டும்
40.  சென்னை மாகாண சட்டப் பேரவை _______________ சட்டப்படி உருவாக்கப்பட்டது.
Answer: C.   இந்திய கவுன்சில் சட்டம் 1861
41.  கீழ்க்காணும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குப்படுத்துக.
1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
2. நிதி மசோதா நிறைவேற்றம்
3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
4. துறைகள் குழுக்களின் ஆய்வு
Answer: C.   4, 1, 3, 2
42.  பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவருக்கான "வாக்காளர் குழாம்" குறித்தவற்றுள் சரியானது எது?
Answer: C.   மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
43.  கூற்று [A]: உறுப்பு 51-A ஆனது வெளிப்படையாக அரசிற்கு அடிப்படை கடமைகளை விதிக்கவில்லை.
காரணம் [R]: குடிமக்கள் ஒவ்வொருவருக்குமுள்ள கடமைகளின் தொகுப்பே அரசின் கடமைகளாகும்.
Answer: B.   [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி; மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி
44.  கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
1. அரசமைப்பு விதி 12 - அரசின் வரையறை
2. அரசமைப்பு விதி 21 - கல்வி உரிமை
3. அரசமைப்பு விதி 34 - அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
4. அரசமைப்பு விதி 35 - அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்
Answer: C.   2 மற்றும் 3 மட்டும்
45.  ‘மாநிலங்களின் ஒன்றியம்' என்ற சொற்றொடரில் இடம்பெற்றுள்ள 'ஒன்றியம்' என்ற சொல் ____________ நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது.
Answer: A.   கனடா அரசியலமைப்பு
46.  பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்க:
1. உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் - விதி 226
2. குறிப்பிட்ட வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுதல் - விதி 178
3. இரண்டு அல்லது அதிக மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் அமைத்தல் - விதி 231
4. உயர்நீதிமன்றங்களின் அதிகாரப் பரப்பை ஒன்றியப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தல் - விதி 320
Answer: C.   1 மற்றும் 3 மட்டும்
47.  கீழ்கண்ட கூற்றுக்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
(i) "முகப்புரையுடன்” துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும்.
(ii) "இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார்.
(iii) நீதிபதி M. இதயத்துல்லா, முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார்.
(iv) குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்.
Answer: B.   (i) மற்றும் (iv) மட்டும் சரி
48.  தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது
(i) கனரகத் தொழிற்சாலை
(ii) நடுத்தரத் தொழிற்சாலை
(iii) சிறு தொழில் தொழிற்சாலை
Answer: A.   (i) மற்றும் (ii) மட்டும்
49.  பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் நோக்கமானது
(i) பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
(ii) பழங்குடி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்
(iii) பழங்குடி குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குதல்
Answer: A.   (1) மட்டும்
50.  பின்வருவனவற்றுள் 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பை அடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
(i) பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
(ii) குடியேற்றத் தடுப்புச் சட்டம்
(iii) கடத்தல் தடுப்புச் சட்டம்
Answer: A.   (i) மட்டும்
;