GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

General Tamil Questions 76 to 100

1.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
A.   இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
B.   இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
C.   இரட்டிற் பிரிந்திசையாதது எது?
D.   இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
Answer: C.  இரட்டிற் பிரிந்திசையாதது எது?
2.  "சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" -இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
A.   கண்ணதாசன்
B.   தஞ்சை இராமையாதாஸ்
C.   மருதகாசி
D.   பட்டுக்கோட்டைய கல்யாணசுந்தரனார்
Answer: C.  மருதகாசி
3.  கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
A.   ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
B.   இராஜ தண்டனை
C.   மாங்கனி
D.   கொய்யாக்கனி
Answer: D.  கொய்யாக்கனி
4.  உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
A.   நிலவுப் பூ
B.   சூரியகாந்தி
C.   தேன்மழை
D.   பூங்கொடி
Answer: C.  தேன்மழை
5.  தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
A.   பொய்கையாழ்வார்
B.   நம்மாழ்வார்
C.   குலசேகர ஆழ்வார்
D.   பெரியாழ்வார்
Answer: B.  நம்மாழ்வார்
6.  உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
A.   எட்டடிச் செய்யுள்
B.   இரண்டடிச் செய்யுள்
C.   நான்கடிச் செய்யுள்
D.   இவை எல்லாம் தவறானவை
Answer: C.  நான்கடிச் செய்யுள்
7.  கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
A.   அழுகை
B.   தொல்லை
C.   போக்கு
D.   தொழுகை
Answer: B.  தொல்லை
8.  செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
A.   வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
B.   தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
C.   பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
D.   வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Answer: B.  தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
9.  'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
A.   குணமென்னும் — குன்றேறி
B.   குன்றேறி — நின்றார்
C.   குணமென்னும் — கணமேயும்
D.   கணமேயும் — காத்தல்
Answer: C.  குணமென்னும் — கணமேயும்
10.  வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   தனி வாக்கியம்
B.   கலவை வாக்கியம்
C.   செயப்பாட்டு வினை வாக்கியம்
D.   பிறவினை வாக்கியம்
Answer: A.  தனி வாக்கியம்
11.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
A.   மென்கண்
B.   செய்வினை
C.   நன்கலம்
D.   அருவிலை
Answer: B.  செய்வினை
12.  'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
A.   ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
B.   வினையாலணையும் பெயர்
C.   வியக்கோள் வினைமுற்று
D.   இரண்டாம் வேற்றுமைத்தொகை
Answer: D.  இரண்டாம் வேற்றுமைத்தொகை
13.  சரியானவற்றைத் தேர்க.
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
A.   1ம், 2ம் சரி
B.   2ம், 3ம் சரி
C.   3ம், 4ம் சரி
D.   1ம், 4ம் சரி
Answer: C.  3ம், 4ம் சரி
14.  பிரித்தெழுதுக
நெடுநாவாய்
A.   நெடு + நாவாய்
B.   நெடுமை + நா+ வாய்
C.   நெடுமை + நாவாய்
D.   நெடுநா + வாய்
Answer: C.  நெடுமை + நாவாய்
15.  'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
A.   நற்றிணை
B.   குறுந்தொகை
C.   அகநானூறு
D.   ஐங்குறுநூறு
Answer: B.  குறுந்தொகை
16.  'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
A.   பகர்தல்
B.   கலத்தல்
C.   வீணாதல்
D.   ஏமாறல்
Answer: C.  வீணாதல்
17.  தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
A.   நோயின்றி வாழ்கிறான்
B.   மெல்ல நடந்தான்
C.   நடந்து வந்தான்
D.   நன்கு பாடினான்
Answer: C.  நடந்து வந்தான்
18.  பொருத்துக:
(a) கை 1. துன்பம்
(b) நோ 2. கைப்பற்றுதல்
(c) யா 3. ஒழுக்கம்
(d) வௌ 4. ஒருவகை மரம்
A.   2 4 3 1
B.   3 4 1 2
C.   3 2 4 1
D.   3 1 4 2
Answer: D.  3 1 4 2
19.  ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
A.   நேரிசைச் சிந்தியல் வெண்பா
B.   இன்னிசைச் சிந்தியல் வெண்பா
C.   நிலைமண்டில ஆசிரியப்பா
D.   நேரிசை ஆசிரியப்பா
Answer: D.  நேரிசை ஆசிரியப்பா
20.  "சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
A.   பேரறிஞர் அண்ணா
B.   பண்டித ஜவஹர்லால் நேரு
C.   காந்தியடிகள்
D.   ஜி.யு. போப்
Answer: C.  காந்தியடிகள்
21.  'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
A.   சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
B.   சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
C.   வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
D.   வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
Answer: C.  வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
22.  உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.   இந்தியா
B.   குயில்
C.   தமிழ்ச்சிட்டு
D.   மணிக்கொடி
Answer: C.  தமிழ்ச்சிட்டு
23.  மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
A.   கற்றது மறவாமை
B.   ஒழுக்கம் உடைமை
C.   கண்ணஞ்சப் படுதல்
D.   வாய்மை உடைமை
Answer: A.  கற்றது மறவாமை
24.  இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(a) வழிக்கரை 1. வினைத்தொகை
(b) கரகமலம் 2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல் 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில் 4. உருவகம்
A.   3 2 4 1
B.   3 1 2 4
C.   3 4 1 2
D.   2 3 4 1
Answer: C.  3 4 1 2
;