TNPSC Group 2 2014 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில, தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து, நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
கூற்று (கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில, தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து, நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
A.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா) - (கூ) வின் சரியான விளக்கமாகும்
B.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தவறானவை
C.
(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை ஆனால் (கா) - (கூ) வின் சரியான விளக்கமல்ல
D.
(கூ) தவறு, (கா) சரி
Answer:
A.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா) - (கூ) வின் சரியான விளக்கமாகும்
2.
இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
“.... நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்கு புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு இதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்.....”
“.... நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்கு புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு இதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்.....”
A.
கோபால கிருஷ்ண கோகலே
B.
பாலகங்காதர திலகர்
C.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
D.
ஜவஹர்லால் நேரு
Answer:
C.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
3.
பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
“நான் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழ செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வைப்பேன்”.
“நான் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழ செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வைப்பேன்”.
A.
பாலகங்காதர திலகர்
B.
கோபால கிருஷ்ண கோகலே
C.
அன்னிபெசண்ட்
D.
ஜவஹர்லால் நேரு
Answer:
C.
அன்னிபெசண்ட்
4.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
I. சுவாமி விவேகானந்தா — 1893 ஆம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம்
II. எம்.எஸ். சுப்புலட்சுமி — கலை மற்றும் கட்டிடக்கலை
III. அன்னை தெரசா — மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்
IV. ராஜா ரவிவர்மா — பழமையான ஓவியங்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
I. சுவாமி விவேகானந்தா — 1893 ஆம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம்
II. எம்.எஸ். சுப்புலட்சுமி — கலை மற்றும் கட்டிடக்கலை
III. அன்னை தெரசா — மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்
IV. ராஜா ரவிவர்மா — பழமையான ஓவியங்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A.
I மட்டும்
B.
II மட்டும்
C.
III மட்டும்
D.
IV மட்டும்
Answer:
B.
II மட்டும்
5.
எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல?
A.
செங்குந்தர் மாலை
B.
சரஸ்வதி அந்தாதி
C.
யாப்பருங்கலம்
D.
அரும்பைத் தொள்ளாயிரம்
Answer:
C.
யாப்பருங்கலம்
6.
கிசான் மஸ்தூர் பிரஜ்ஜா கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?
A.
ஆச்சார்யா மேனன்
B.
J.B. கிருபாளனி மேனன்
C.
ஆச்சார்யா J.B. கிருபாளனி
D.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
Answer:
C.
ஆச்சார்யா J.B. கிருபாளனி
7.
1923 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்?
A.
ராமராயநிங்கர்
B.
கே.வி. ரெட்டி
C.
டி.என். சிவஞானம் பிள்ளை
D.
ஏ.வி. பாத்ரோ
Answer:
A.
ராமராயநிங்கர்
8.
“ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?
A.
மகாத்மா காந்தி
B.
அன்னை தெரசா
C.
சுவாமி விவேகானந்தா
D.
ராமகிருஷ்ணர் பரமஹம்சர்
Answer:
C.
சுவாமி விவேகானந்தா
9.
கீழ்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
கருத்துகள்:
I. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடத்தை புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது.
II. டோர்னடோ புயல் “S” வடிவத்துடன் இருக்கும்.
III. ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்கு பகுதியில் வீசுகின்றது.
IV. இக்னியஸ் என்ற வார்த்தையானது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
கருத்துகள்:
I. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடத்தை புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது.
II. டோர்னடோ புயல் “S” வடிவத்துடன் இருக்கும்.
III. ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்கு பகுதியில் வீசுகின்றது.
IV. இக்னியஸ் என்ற வார்த்தையானது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
A.
III
B.
IV
C.
II
D.
I
Answer:
C.
II
10.
கீழ்க்காணும் மாசுபடுத்துபவர்களை பொருத்துக.
| (a) காற்று மாசுபடுத்தி | 1. ஆந்த்ராக்ஸ் |
| (b) உலோக மாசுபடுத்தி | 2. குளோரின் |
| (c) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி | 3. காட்மீயம் |
| (d) உயிர் மாசுபடுத்தி | 4. தார் |
A.
2 3 4 1
B.
1 2 3 4
C.
4 3 2 1
D.
3 1 2 4
Answer:
A.
2 3 4 1
11.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I. எரிகற்கள் — எரி நட்சத்திரம்
II. வால் நட்சத்திரம் — பூமியை சுற்றி வருகிறது
III. ஹேலிஸ் வால் நட்சத்திரம் — 100 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும்
IV. பால்வழி மண்டலம் — நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்
I. எரிகற்கள் — எரி நட்சத்திரம்
II. வால் நட்சத்திரம் — பூமியை சுற்றி வருகிறது
III. ஹேலிஸ் வால் நட்சத்திரம் — 100 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும்
IV. பால்வழி மண்டலம் — நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்
A.
I
B.
II
C.
III
D.
IV
Answer:
A.
I
12.
கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I-உடன் வரிசை II-ஐ பொருத்துக. வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) மனிதன் | 1. காலரா |
| (b) கால்நடைகள் | 2. வளைய புழு |
| (c) கொறிப்பவை | 3. பிளேக் |
| (d) நாய் மற்றும் பூனை | 4. ஆந்த்ராக்ஸ் |
A.
1 2 3 4
B.
3 4 2 1
C.
1 4 3 2
D.
2 3 1 4
Answer:
C.
1 4 3 2
13.
சூழ்நிலை மண்டலத்தில் வெளிப்படும் சக்தி ஓட்டமானது
A.
ஒரேதிசை நோக்கி
B.
பலதிசை நோக்கி
C.
இருதிசை நோக்கி
D.
திசையற்ற
Answer:
A.
ஒரேதிசை நோக்கி
14.
கீழ்வரும் தொடர்களில் எது சரியானது?
I. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் தனது தேவைக்காக குளுக்கோஸைப் பயன்படுத்துவதையும் தடுக்கின்றது.
II. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது.
III. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அதிக அளவில் கிளைகோஜென் மற்றும் டிரைஅசைல் கிளிசரcolumnலைத் தயாரித்து சேமிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
IV. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின், கிளைகோஜென் மற்றும் டிரை அசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
I. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் தனது தேவைக்காக குளுக்கோஸைப் பயன்படுத்துவதையும் தடுக்கின்றது.
II. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது.
III. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அதிக அளவில் கிளைகோஜென் மற்றும் டிரைஅசைல் கிளிசரcolumnலைத் தயாரித்து சேமிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
IV. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின், கிளைகோஜென் மற்றும் டிரை அசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
A.
I மற்றும் III
B.
I மற்றும் IV
C.
II மற்றும் III
D.
II மற்றும் IV
Answer:
A.
I மற்றும் III
15.
2013-14 மத்திய அரசு வரவு செலவு கணக்கில் ரூ. 1,000 கோடி நிதி பெண்கள் அதிகாரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் பெயர்
A.
அபயா நிதி
B.
நிர்பயா நிதி
C.
சௌபாக்கியா நிதி
D.
சுமங்கலி நிதி
Answer:
B.
நிர்பயா நிதி
16.
தனியார்மயமாக்குதல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. திறமையினை அதிகரிக்க.
II. அரசின் தலையீட்டினை குறைக்க.
III. சுதந்திரமாகவும், விரைந்தும் முடிவு எடுப்பதினை அதிகரிக்க.
IV. அரசு தன் பொறுப்புகளை கை கழுவ.
V. போட்டியினை அறிமுகப்படுத்தி, தனியார் துறைக்குரிய பண்புகளை வளர்க்க.
I. திறமையினை அதிகரிக்க.
II. அரசின் தலையீட்டினை குறைக்க.
III. சுதந்திரமாகவும், விரைந்தும் முடிவு எடுப்பதினை அதிகரிக்க.
IV. அரசு தன் பொறுப்புகளை கை கழுவ.
V. போட்டியினை அறிமுகப்படுத்தி, தனியார் துறைக்குரிய பண்புகளை வளர்க்க.
A.
I, II மற்றும் V சரியானவை
B.
I, II, III மற்றும் V சரியானவை
C.
I, III, IV மற்றும் V சரியானவை
D.
I, III மற்றும் IV சரியானவை
Answer:
B.
I, II, III மற்றும் V சரியானவை
17.
2007 ஆம் ஆண்டு, இந்தியாவில் தனிநபர் எரிசக்தி நுகர்வின் அளவு _________ கிலோகிராம் எண்ணெய் பதிலீட்டுக்கு சமம்.
A.
529
B.
592
C.
295
D.
925
Answer:
A.
529
18.
K₂MnO₄-ல் Mn-ன் ஆக்சிஜனேற்ற எண்
A.
+2
B.
+4
C.
+6
D.
0
Answer:
C.
+6
19.
கீழ்கண்ட நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது?
A.
N₂O
B.
N₂O₅
C.
NO
D.
NO₂
Answer:
D.
NO₂
20.
கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிமமாகும்
A.
போரான்
B.
அலுமினியம்
C.
கேலியம்
D.
இண்டியம்
Answer:
A.
போரான்
21.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
I. X கதிர்கள் — ரூதர்போர்டு
II. அணுக்கரு — ராண்ட்ஜன்
III. செயற்கை கதிரியக்கம் — கியூரி மற்றும் ஜோலியட்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது/எவை சரி
I. X கதிர்கள் — ரூதர்போர்டு
II. அணுக்கரு — ராண்ட்ஜன்
III. செயற்கை கதிரியக்கம் — கியூரி மற்றும் ஜோலியட்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது/எவை சரி
A.
I மட்டும்
B.
II மற்றும் III மட்டும்
C.
I மற்றும் II மட்டும்
D.
III மட்டும்
Answer:
D.
III மட்டும்
22.
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
I. எறிபொருள் ஒன்றின் பாதை பரவளைய ஆகும்.
II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.
III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.
I. எறிபொருள் ஒன்றின் பாதை பரவளைய ஆகும்.
II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.
III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.
A.
I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு
B.
I மற்றும் III சரியானவை ஆனால் II தவறு
C.
I, II, III ஆகிய அனைத்தும் சரியானவை
D.
II மற்றும் III சரியானவை ஆனால் I தவறு
Answer:
A.
I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு
23.
R எனும் மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம் ‘I’ க்கும் அதன் குறுக்கே அமைந்துள்ள மின்னழுத்தத்திற்கிடையிலான (V) தொடர்பு என்ன?
A.
V = I² / R
B.
I = VR
C.
I = V / R
D.
V = I²R
Answer:
C.
I = V / R
24.
கீழ்க்கண்ட தொடர்களில் கொடுக்கப்பட்டுள்ள, வைட்டமின்களில், எந்த தொடர் தண்ணீரில் கரையக் கூடியவை?
A.
தையமின், ரைபோபிளாவின், வைட்டமின்-D மற்றும் வைட்டமின்-E
B.
நையாசின், வைட்டமின்-B₁₂, வைட்டமின்-K மற்றும் வைட்டமின்-D
C.
தையமின், ரைபோபிளாவின், நையாசின் மற்றும் வைட்டமின்-B₁₂
D.
வைட்டமின்-C, வைட்டமின்-E, வைட்டமின்-K மற்றும் ஃபோலிக் அமிலம்
Answer:
C.
தையமின், ரைபோபிளாவின், நையாசின் மற்றும் வைட்டமின்-B₁₂
25.
உலகளவிலான தட்பவெப்ப மையத்தின் தலைமையகம் உள்ள இடம்
A.
ஜெனிவா
B.
தைவான்
C.
பென்டகன்
D.
மணிலா
Answer:
A.
ஜெனிவா