GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  'துறவை மேல் நெறி' என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?
Answer: B.   அற இலக்கியங்கள்
77.  சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல் எது?
Answer: C.   பன்னிரு பாட்டியல்
78.  “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து”
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
Answer: A.   ஆட்டுக்கடா
79.  "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்
Answer: A.   இராமலிங்க அடிகளார்
80.  பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(a) இகல் 1. செல்வம்
(b) திரு 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் 3. துன்பம்
(d) இடும்பை 4. பகை
Answer: A.   4 1 2 3
81.  'பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இரு நூறாக உயர்த்தியவர் யார்?
Answer: A.   காமராசர்
82.  சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
Answer: A.   திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது
83.  பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
Answer: D.   அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் கூடாது
84.  மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
Answer: D.   குயில் கூவியது; மயில் அகவியது
85.  'அயர்ந்தவன்'-இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Answer: B.   அயர்
86.  பட்டியல் I ஐ பட்டியல் II இல் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) ஊண் 1. மகிழ்வு
(b) ஊன் 2. சனி
(c) கலி 3. உணவு
(d) களி 4. இறைச்சி
Answer: C.   3 4 2 1
87.  மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி
Answer: B.   காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்
88.  DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Answer: C.   ஒலிச் சேர்க்கை
89.  'உரைநடை எழுதுவது தனது தொழில்' என்ற வகையில் உழைத்தவர்
Answer: C.   திரு.வி.கலியாணசுந்தரனார்
90.  இவற்றுள் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?
Answer: D.   காளிங்கர்
91.  கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன,
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
Answer: B.   (II) மற்றும் (IV) சரி
92.  “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
Answer: C.   OVATION
93.  பொருத்துக.
சொல் தளை
(a) பாரி பாரி 1. இயற்சீர் வெண்டளை
(b) பலர்புகழ் கபிலர் 2. நேரொன்றியத்தளை
(c) தாமரைப்பூ குளத்தினிலே 3. நிரையொன்றாசிரியத்தளை
(d) அகர முதல 4. கலித்தளை
Answer: C.   2 3 4 1
94.  “ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், 'தாய்', 'தாய்', 'தாய்' என்று போற்றுகிறான்” என்னும் கூற்று யாருடையது?
Answer: C.   திரு.வி.க.
95.  விடைத் தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
Answer: B.   டாக்டர். அம்பேத்கர்
96.  தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
Answer: C.   கூந்தன்குளம்
97.  இந்தியா மிகப்பெரிய நாடு -எவ்வகை வாக்கியம்?
Answer: B.   தனிநிலை வாக்கியம்
98.  பொருத்துக.
(a) நடந்தான் 1. தொழிற்பெயர்
(b) நடந்த 2. வினையெச்சம்
(c) நடந்து 3. பெயரெச்சம்
(d) நடத்தல் 4. வினைமுற்று
Answer: A.   4 3 2 1
99.  “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?
Answer: D.   தொல்காப்பியர்
100.  பிரித்தெழுதுக.
பரித்தியாகம்
Answer: C.   பரி + தியாகம்
;