GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025

General Studies Questions 26 to 50

1.  நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ._______ ஆகும்.
A.   1.00 லட்சம்
B.   2.00 லட்சம்
C.   2.50 லட்சம்
D.   3.00 லட்சம்
Answer: B.  2.00 லட்சம்
2.  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்
A.   சேப்பாக்கம்
B.   மைசூர்
C.   கிளாம்பாக்கம்
D.   பெரும்பாக்கம்
Answer: D.  பெரும்பாக்கம்
3.  தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
(ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
(iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
A.   (i) மட்டும்
B.   (ii) மற்றும் (iii) மட்டுமே
C.   (i) மற்றும் (ii) மட்டுமே
D.   (i) மற்றும் (iii) மட்டுமே
Answer: C.  (i) மற்றும் (ii) மட்டுமே
4.  பொருத்துக:
(a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை
(b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை
(c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை
(d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர்
A.   3 4 1 2
B.   2 4 1 3
C.   4 2 1 3
D.   1 4 3 2
Answer: B.  2 4 1 3
5.  கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) அலாவுதின் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லிம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
(ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
(iii) "அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".
A.   (i) மட்டும்
B.   (i) மற்றும் (ii) மட்டும்
C.   (i) மற்றும் (iii) மட்டும்
D.   (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: C.  (i) மற்றும் (iii) மட்டும்
6.  பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) கோபால நாயக் - திண்டுக்கல்
(ii) தூண்டாஜி வாக் - மதுரை
(iii) மருதுபாண்டியர்கள் - எட்டயபுரம்
(iv) புலித்தேவன் - நெற்கட்டாஞ்செவல்
A.   (i) மற்றும் (ii) மட்டும்
B.   (ii) மற்றும் (iii) மட்டும்
C.   (iii) மற்றும் (iv) மட்டும்
D.   (iv) மட்டும்
Answer: B.  (ii) மற்றும் (iii) மட்டும்
7.  பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி முறைப்படுத்துக.
(1) சட்ட மறுப்பு இயக்கம்
(2) சிப்பாய் கலகம்
(3) வேலூர் கலகம்
(4) தென்னிந்தியப் புரட்சி
A.   (2), (3), (1), (4)
B.   (1), (2), (4), (3)
C.   (4), (2), (3), (1)
D.   (4), (3), (2), (1)
Answer: D.  (4), (3), (2), (1)
8.  திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
A.   ஆடவர்
B.   மகளிர்
C.   குடிமக்கள்
D.   அரசன்
Answer: B.  மகளிர்
9.  புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்தவும்:
(a) திருக்குறள் உரைவளம் 1. வ.செ. குழந்தை சாமி
(b) திருக்குறள் நுண்பொருள் மாலை 2. கி.வா. ஜெகந்நாதன்
(c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 3. காரிரத்தினக் கவிராயர்
(d) வாழும் வள்ளுவம் 4. தண்டபாணி தேசிகர்
A.   4 3 2 1
B.   1 2 3 4
C.   4 2 1 3
D.   1 3 4 2
Answer: A.  4 3 2 1
10.  உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
A.   ஊக்கம் உடையோர்
B.   வீரம் உடையோர்
C.   செல்வம் உடையோர்
D.   கல்வி உடையோர்
Answer: A.  ஊக்கம் உடையோர்
11.  காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து:
1. சிம்மவிஷ்ணு - 555 லிருந்து 590 СЕ
2. மகேந்திரவர்மன் I - 590 லிருந்து 630 СЕ
3. நரசிம்மவர்மன் I - 630 லிருந்து 668 СЕ
4. ராஜசிம்மா - 695 லிருந்து 728 СЕ
A.   1, 2, 3, 4
B.   3, 1, 2, 4
C.   4, 2, 3, 1
D.   2, 4, 1, 3
Answer: A.  1, 2, 3, 4
12.  பொருத்துக:
(a) தலைச் சங்கப் புலவனார் தம்முள் 1. கம்பர்
(b) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் 2. சேக்கிழார்
(c) கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழ் 3. திருஞானசம்பந்தர்
(d) மதுரைத் தொகையாக்கினான் 4. மாணிக்கவாசகர்
A.   2 3 1 4
B.   3 4 2 1
C.   1 3 4 2
D.   2 1 4 3
Answer: D.  2 1 4 3
13.  சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே'- என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?
A.   ஒக்கூர் மாசாத்தியார்
B.   காவல் பெண்டு
C.   வெள்ளிவீதியார்
D.   ஔவையார்
Answer: B.  காவல் பெண்டு
14.  உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?
(1) இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
(2) இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
(3) இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
A.   (1) மட்டும் சரி
B.   (2) மட்டும் சரி
C.   (3) மட்டும் சரி
D.   (1), (2) மற்றும் (3)
Answer: D.  (1), (2) மற்றும் (3)
15.  இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
(1) டவுனின் குறைபாட்டு நோய் - 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
(2) ஹீமோபிலியா - பால் இணைந்த தலைமுறை
(3) கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் - XO நிலை
(4) டர்னரின் குறைபாட்டு நோய் - வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
A.   (3) மட்டும்
B.   (1) மற்றும் (3) மட்டும்
C.   (2) மட்டும்
D.   (1) மற்றும் (2) மட்டும்
Answer: A.  (3) மட்டும்
16.  சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்
A.   I மட்டும் சரி
B.   II மற்றும் III சரி
C.   II, III மற்றும் IV சரி
D.   I, II மற்றும் IV சரி
Answer: D.  I, II மற்றும் IV சரி
17.  கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) நிலையான வளர்ச்சி இலக்கு - 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள்
(b) நிலையான வளர்ச்சி இலக்கு - 11 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
(c) நிலையான வளர்ச்சி இலக்கு - 14 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(d) நிலையான வளர்ச்சி இலக்கு - 15 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
A.   3 4 1 2
B.   4 3 2 1
C.   1 3 4 2
D.   3 4 2 1
Answer: D.  3 4 2 1
18.  மண் பற்றிய கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு:
(1) வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
(2) கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது.
(3) தக்காணப் பீடபூமியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.
A.   (1) மட்டும் சரியானது
B.   (1) மற்றும் (3) சரியானது
C.   (2) மற்றும் (3) சரியானது
D.   (1) மற்றும் (2) சரியானது
Answer: B.  (1) மற்றும் (3) சரியானது
19.  கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?
A.   தீன்- இலாஹியை பின்பற்றியவர்கள் அதிகம்
B.   இது ஒரு அரசு மதம்
C.   முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்
D.   பிரதேசங்களை விரிவுபடுத்துவதற்கும் சுதந்திர நாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும்
Answer: C.  முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்
20.  சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம் _________
A.   அன்பில் பட்டயம்
B.   திருவாலங்காடு பட்டயம்
C.   பாகூர் பட்டயம்
D.   வேள்விக்குடி பட்டயம்
Answer: B.  திருவாலங்காடு பட்டயம்
21.  சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்திடுக:
(1) நிரந்தர நிலவரித் திட்டம் - கர்சன் பிரபு
(2) வங்கப் பிரிவினை - காரன்வாலிஸ்
(3) இரயத்துவாரி முறை - மன்றோ
(4) இருப்புப்பாதை இணைப்பு - டல்ஹௌசி
A.   (1) மற்றும் (3) சரி
B.   (1) மற்றும் (2) சரி
C.   (2) மற்றும் (3) சரி
D.   (3) மற்றும் (4) சரி
Answer: D.  (3) மற்றும் (4) சரி
22.  பொருத்துக:
(a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி
A.   3 2 1 4
B.   4 3 1 2
C.   3 4 1 2
D.   2 3 4 1
Answer: C.  3 4 1 2
23.  சரியான காலவரிசையில் அமைத்திடுக:
(1) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(2) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(3) இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்
(4) சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்
A.   (4), (2), (1), (3)
B.   (2), (1), (3), (4)
C.   (3), (2), (4), (1)
D.   (1), (2), (3), (4)
Answer: C.  (3), (2), (4), (1)
24.  கீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக:
வரிசை (A) வரிசை (B)
கருப்பொருள் ஆண்டு
(a) நீதித்துறை செயற்பாடு 1. 1976
(b) ஆளுமையில் அறநெறி (SARC) 2. 1997
(c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை 3. 1947
(d) நிர்வாகத் தீர்ப்பாயம் 4. 2007
A.   2 1 4 3
B.   3 4 2 1
C.   1 2 3 4
D.   4 3 1 2
Answer: B.  3 4 2 1
25.  அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியானக் கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு:
(1) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.
(2) இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
(3) நம்முடைய பாரம்பரியங்களையும், பன்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.
(4) தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.
A.   (1) மற்றும் (2) மட்டும்
B.   (2) மற்றும் (3) மட்டும்
C.   (1), (2) மற்றும் (3) மட்டும்
D.   (2), (3) மற்றும் (4) மட்டும்
Answer: C.  (1), (2) மற்றும் (3) மட்டும்
;