GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025

General Studies Questions 26 to 50

1. நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ._______ ஆகும்.

  • A. 1.00 லட்சம்
  • B. 2.00 லட்சம்
  • C. 2.50 லட்சம்
  • D. 3.00 லட்சம்
Answer: B. 2.00 லட்சம்

2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்

  • A. சேப்பாக்கம்
  • B. மைசூர்
  • C. கிளாம்பாக்கம்
  • D. பெரும்பாக்கம்
Answer: D. பெரும்பாக்கம்

3. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
(ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
(iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

  • A. (i) மட்டும்
  • B. (ii) மற்றும் (iii) மட்டுமே
  • C. (i) மற்றும் (ii) மட்டுமே
  • D. (i) மற்றும் (iii) மட்டுமே
Answer: C. (i) மற்றும் (ii) மட்டுமே

4. பொருத்துக:
(a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை
(b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை
(c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை
(d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர்

  • A. 3 4 1 2
  • B. 2 4 1 3
  • C. 4 2 1 3
  • D. 1 4 3 2
Answer: B. 2 4 1 3

5. கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) அலாவுதின் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லிம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
(ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
(iii) "அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".

  • A. (i) மட்டும்
  • B. (i) மற்றும் (ii) மட்டும்
  • C. (i) மற்றும் (iii) மட்டும்
  • D. (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: C. (i) மற்றும் (iii) மட்டும்

6. பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) கோபால நாயக் - திண்டுக்கல்
(ii) தூண்டாஜி வாக் - மதுரை
(iii) மருதுபாண்டியர்கள் - எட்டயபுரம்
(iv) புலித்தேவன் - நெற்கட்டாஞ்செவல்

  • A. (i) மற்றும் (ii) மட்டும்
  • B. (ii) மற்றும் (iii) மட்டும்
  • C. (iii) மற்றும் (iv) மட்டும்
  • D. (iv) மட்டும்
Answer: B. (ii) மற்றும் (iii) மட்டும்

7. பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி முறைப்படுத்துக.
(1) சட்ட மறுப்பு இயக்கம்
(2) சிப்பாய் கலகம்
(3) வேலூர் கலகம்
(4) தென்னிந்தியப் புரட்சி

  • A. (2), (3), (1), (4)
  • B. (1), (2), (4), (3)
  • C. (4), (2), (3), (1)
  • D. (4), (3), (2), (1)
Answer: D. (4), (3), (2), (1)

8. திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?

  • A. ஆடவர்
  • B. மகளிர்
  • C. குடிமக்கள்
  • D. அரசன்
Answer: B. மகளிர்

9. புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்தவும்:
(a) திருக்குறள் உரைவளம் 1. வ.செ. குழந்தை சாமி
(b) திருக்குறள் நுண்பொருள் மாலை 2. கி.வா. ஜெகந்நாதன்
(c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 3. காரிரத்தினக் கவிராயர்
(d) வாழும் வள்ளுவம் 4. தண்டபாணி தேசிகர்

  • A. 4 3 2 1
  • B. 1 2 3 4
  • C. 4 2 1 3
  • D. 1 3 4 2
Answer: A. 4 3 2 1

10. உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?

  • A. ஊக்கம் உடையோர்
  • B. வீரம் உடையோர்
  • C. செல்வம் உடையோர்
  • D. கல்வி உடையோர்
Answer: A. ஊக்கம் உடையோர்

11. காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து:
1. சிம்மவிஷ்ணு - 555 லிருந்து 590 СЕ
2. மகேந்திரவர்மன் I - 590 லிருந்து 630 СЕ
3. நரசிம்மவர்மன் I - 630 லிருந்து 668 СЕ
4. ராஜசிம்மா - 695 லிருந்து 728 СЕ

  • A. 1, 2, 3, 4
  • B. 3, 1, 2, 4
  • C. 4, 2, 3, 1
  • D. 2, 4, 1, 3
Answer: A. 1, 2, 3, 4

12. பொருத்துக:
(a) தலைச் சங்கப் புலவனார் தம்முள் 1. கம்பர்
(b) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் 2. சேக்கிழார்
(c) கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழ் 3. திருஞானசம்பந்தர்
(d) மதுரைத் தொகையாக்கினான் 4. மாணிக்கவாசகர்

  • A. 2 3 1 4
  • B. 3 4 2 1
  • C. 1 3 4 2
  • D. 2 1 4 3
Answer: D. 2 1 4 3

13. சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே'- என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?

  • A. ஒக்கூர் மாசாத்தியார்
  • B. காவல் பெண்டு
  • C. வெள்ளிவீதியார்
  • D. ஔவையார்
Answer: B. காவல் பெண்டு

14. உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?
(1) இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
(2) இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
(3) இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.

  • A. (1) மட்டும் சரி
  • B. (2) மட்டும் சரி
  • C. (3) மட்டும் சரி
  • D. (1), (2) மற்றும் (3)
Answer: D. (1), (2) மற்றும் (3)

15. இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
(1) டவுனின் குறைபாட்டு நோய் - 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
(2) ஹீமோபிலியா - பால் இணைந்த தலைமுறை
(3) கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் - XO நிலை
(4) டர்னரின் குறைபாட்டு நோய் - வளர்ச்சி பின்னடைந்த மகளிர்

  • A. (3) மட்டும்
  • B. (1) மற்றும் (3) மட்டும்
  • C. (2) மட்டும்
  • D. (1) மற்றும் (2) மட்டும்
Answer: A. (3) மட்டும்

16. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்

  • A. I மட்டும் சரி
  • B. II மற்றும் III சரி
  • C. II, III மற்றும் IV சரி
  • D. I, II மற்றும் IV சரி
Answer: D. I, II மற்றும் IV சரி

17. கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) நிலையான வளர்ச்சி இலக்கு - 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள்
(b) நிலையான வளர்ச்சி இலக்கு - 11 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
(c) நிலையான வளர்ச்சி இலக்கு - 14 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(d) நிலையான வளர்ச்சி இலக்கு - 15 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்

  • A. 3 4 1 2
  • B. 4 3 2 1
  • C. 1 3 4 2
  • D. 3 4 2 1
Answer: D. 3 4 2 1

18. மண் பற்றிய கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு:
(1) வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
(2) கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது.
(3) தக்காணப் பீடபூமியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.

  • A. (1) மட்டும் சரியானது
  • B. (1) மற்றும் (3) சரியானது
  • C. (2) மற்றும் (3) சரியானது
  • D. (1) மற்றும் (2) சரியானது
Answer: B. (1) மற்றும் (3) சரியானது

19. கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?

  • A. தீன்- இலாஹியை பின்பற்றியவர்கள் அதிகம்
  • B. இது ஒரு அரசு மதம்
  • C. முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்
  • D. பிரதேசங்களை விரிவுபடுத்துவதற்கும் சுதந்திர நாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும்
Answer: C. முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்

20. சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம் _________

  • A. அன்பில் பட்டயம்
  • B. திருவாலங்காடு பட்டயம்
  • C. பாகூர் பட்டயம்
  • D. வேள்விக்குடி பட்டயம்
Answer: B. திருவாலங்காடு பட்டயம்

21. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்திடுக:
(1) நிரந்தர நிலவரித் திட்டம் - கர்சன் பிரபு
(2) வங்கப் பிரிவினை - காரன்வாலிஸ்
(3) இரயத்துவாரி முறை - மன்றோ
(4) இருப்புப்பாதை இணைப்பு - டல்ஹௌசி

  • A. (1) மற்றும் (3) சரி
  • B. (1) மற்றும் (2) சரி
  • C. (2) மற்றும் (3) சரி
  • D. (3) மற்றும் (4) சரி
Answer: D. (3) மற்றும் (4) சரி

22. பொருத்துக:
(a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு.
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி

  • A. 3 2 1 4
  • B. 4 3 1 2
  • C. 3 4 1 2
  • D. 2 3 4 1
Answer: C. 3 4 1 2

23. சரியான காலவரிசையில் அமைத்திடுக:
(1) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(2) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(3) இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்
(4) சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்

  • A. (4), (2), (1), (3)
  • B. (2), (1), (3), (4)
  • C. (3), (2), (4), (1)
  • D. (1), (2), (3), (4)
Answer: C. (3), (2), (4), (1)

24. கீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக:
வரிசை (A) வரிசை (B)
கருப்பொருள் ஆண்டு
(a) நீதித்துறை செயற்பாடு 1. 1976
(b) ஆளுமையில் அறநெறி (SARC) 2. 1997
(c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை 3. 1947
(d) நிர்வாகத் தீர்ப்பாயம் 4. 2007

  • A. 2 1 4 3
  • B. 3 4 2 1
  • C. 1 2 3 4
  • D. 4 3 1 2
Answer: B. 3 4 2 1

25. அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியானக் கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு:
(1) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.
(2) இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
(3) நம்முடைய பாரம்பரியங்களையும், பன்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.
(4) தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.

  • A. (1) மற்றும் (2) மட்டும்
  • B. (2) மற்றும் (3) மட்டும்
  • C. (1), (2) மற்றும் (3) மட்டும்
  • D. (2), (3) மற்றும் (4) மட்டும்
Answer: C. (1), (2) மற்றும் (3) மட்டும்
;