GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025

General Tamil Questions 51 to 75

1. சரியான திருக்குறளைக் கண்டறிக.

  • A. சொல்லுக சொல்லில் சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன்இலாச் சொல்
  • B. சொல்லில் சொல்லுக சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன்இலாச் சொல்
  • C. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லில் சொல்லற்க பயன்இலாச் சொல்
  • D. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்
Answer: D. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

2. செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.

  • A. குமரன் பாடம் பயின்றான்
  • B. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார்
  • C. கபிலர் குறிஞ்சிப்பாட்டு இயற்றினார்
  • D. தை கொண்டாடப் பெற்றது
Answer: D. தை கொண்டாடப் பெற்றது

3. குமணன் நடந்தான் - இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக.

  • A. தன்வினை
  • B. பிறவினை
  • C. பொதுவினை
  • D. எதிர்மறை வினை
Answer: A. தன்வினை

4. சரியான தொடரைக் கண்டறிக.

  • A. கிளைகள் முறிந்து விழுந்தது.
  • B. மரம் வேகமாக வளர்ந்தன.
  • C. குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
  • D. யானைகள் குட்டிகளுடன் சென்றது.
Answer: C. குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.

5. பொருத்தமான காலத்தைச் சுட்டுக :
"கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்".

  • A. இறந்தகாலம்
  • B. நிகழ்காலம்
  • C. எதிர்காலம்
  • D. கூதிர்காலம்
Answer: B. நிகழ்காலம்

6. புல்வாய், நவ்வி, உழை ஆகியவற்றின் பெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.

  • A. பிணை
  • B. நாகு
  • C. அளகு
  • D. பெட்டை
Answer: A. பிணை

7. உறுதிக் கூற்று: ஆ, ஓ, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம்: ஏனெனில் இவை வினாச்சொற்கள்.

  • A. உறுதிக்கூற்று சரி காரணம் சரி
  • B. உறுதிக்கூற்று சரியன்று காரணம் சரி
  • C. உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
  • D. உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
Answer: A. உறுதிக்கூற்று சரி காரணம் சரி

8. பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?

  • A. விடுகுறி
  • B. உடுக்குறி
  • C. மேற்கோள் குறி
  • D. பகர அடைப்புக் குறி
Answer: D. பகர அடைப்புக் குறி

9. தேவநேயப்பாவாணர் 'கூட்டுக்கிளவியப் புணர் வாக்கியம்' என்று எதனைக் கூறுகிறார்?

  • A. மாறுபட்ட நிலைகளை
  • B. ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிதலை
  • C. சொற்பொருள் கூறுமிடத்து
  • D. ஒப்புமைப்படுத்துதலை
Answer: D. ஒப்புமைப்படுத்துதலை

10. 'அடவி' என்ற சொல்லின் பொருள்

  • A. ஆறு
  • B. பக்கம்
  • C. காடு
  • D. நிலம்
Answer: C. காடு

11. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் "மிகுதி" என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.

  • A. பரியது
  • B. கூர்
  • C. கோட்ட
  • D. யானை
Answer: B. கூர்

12. திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது - இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.

  • A. திருமால் குன்றம்
  • B. உயர்ந்து ஓங்கிய
  • C. ஓங்கி நிற்கும்
  • D. குன்றம் உயர்ந்து
Answer: B. உயர்ந்து ஓங்கிய

13. இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக:
(a) கறுத்து 1. கொல்லல், கோளிழைத்தல்
(b) கிராய் 2. கோபித்து, சினந்து
(c) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு
(d) உறையல் 4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு

  • A. 3 1 2 4
  • B. 3 4 1 2
  • C. 2 1 4 3
  • D. 2 4 1 3
Answer: D. 2 4 1 3

14. உதகை - என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.

  • A. ஒரு கை மண்டலம்
  • B. உதக மண்டலம்
  • C. ஊத்துக் கோட்டை
  • D. மலைநாடு
Answer: B. உதக மண்டலம்

15. பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.

  • A. அது
  • B. அஃது
  • C. இது
  • D. இஃது
Answer: B. அஃது

16. இவனுக்கு வீடு ஒன்று _________ இரண்டு இருக்கிறது.

  • A. மற்றும்
  • B. இல்லை
  • C. அல்லது
  • D. தான்
Answer: C. அல்லது

17. பொருத்துக:
(a) கடற்கரைச் சாலை 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்
(b) புதுமனைப் புகுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை
(c) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(d) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

  • A. 3 2 4 1
  • B. 3 4 1 2
  • C. 3 1 4 2
  • D. 4 3 1 2
Answer: C. 3 1 4 2

18. பொருள் கண்டறிக:
ம, மா

  • A. வண்டு, ஆகாயம்
  • B. இயமன், இளமை
  • C. மண், மான்
  • D. இயமன், வண்டு
Answer: D. இயமன், வண்டு

19. னகர ணகர நகர வேறுபாட்டில் - பொருத்துக.
(a) அன்னாள் 1. முற்காலத்தில்
(b) உன்னல் 2. என்று சொல்லாள்
(c) முன்னாள் 3. நினைத்தல்
(d) என்னாள் 4. அவள்

  • A. 3 4 1 2
  • B. 3 1 2 4
  • C. 4 1 3 2
  • D. 4 3 1 2
Answer: D. 4 3 1 2

20. _______ நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்
(பழமொழி நானூறு - 4)
இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?

  • A. நாடு இல்லை
  • B. தமவே ஆம்
  • C. ஆற்றுணா
  • D. வேண்டுவது
Answer: D. வேண்டுவது

21. உறுதிக் கூற்று: சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.

  • A. உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
  • B. இரண்டும் தவறு
  • C. உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
  • D. இரண்டும் சரி
Answer: D. இரண்டும் சரி

22. தொல்காப்பியர் குறிப்பிடும் உவன், உவள், உவர், உது, உவை என்பன ________

  • A. அண்மைச் சுட்டு
  • B. இடைநிலைச் சுட்டு
  • C. சேய்மைச் சுட்டு
  • D. சுட்டுத் திரிபு
Answer: B. இடைநிலைச் சுட்டு

23. 'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.

  • A. சொல்லாமை
  • B. சொல்லா
  • C. சொல்லிய
  • D. சொல்லுகின்ற
Answer: A. சொல்லாமை

24. "அறியாத பையன்" - என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?

  • A. இறந்தகாலப் பெயரெச்சம்
  • B. எதிர்காலப் பெயரெச்சம்
  • C. குறிப்புப் பெயரெச்சம்
  • D. தெரிநிலைப் பெயரெச்சம்
Answer: D. தெரிநிலைப் பெயரெச்சம்

25. 'சிறிய கடிதம்' - இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.

  • A. இறந்தகாலப் பெயரெச்சம்
  • B. நிகழ்காலப் பெயரெச்சம்
  • C. குறிப்புப் பெயரெச்சம்
  • D. எதிர்காலப் பெயரெச்சம்
Answer: C. குறிப்புப் பெயரெச்சம்
;