TNPSC Group 2 2025
General Tamil Questions 1 to 25
1. பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
- A. அவள் அல்லள்
- B. மரம் அன்று
- C. அவை அல்ல
- D. அவன் அல்ல
2. சரியான தொடரைத் தேர்வு செய்க.
- A. மாடுகள் மேய்ந்தது
- B. பறவைகள் பறந்தது
- C. மரம் வளர்ந்தன
- D. செடி கொடிகள் காற்றில் அசைந்தன
3. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- A. ஆடூஉ வந்தாள்
- B. மகடூ வந்தான்
- C. மகடூ வந்தாள்
- D. சாத்தி வந்தான்
4. பொருத்துக:
அடி தாவரம்
(a) தட்டு 1. வேம்பு
(b) கழி 2. மூங்கில்
(c) கழை 3. சோளம்
(d) அடி 4. கரும்பு
- A. 3 4 2 1
- B. 3 2 4 1
- C. 4 3 1 2
- D. 2 3 4 1
5. யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
- A. அலப்பும்
- B. பிளிறும்
- C. எக்காளமிடும்
- D. கதறும்
6. 'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
- A. மந்தை
- B. நிரை
- C. கணம்
- D. கூட்டம்
7. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
- A. சகோதரி
- B. நண்பர்
- C. உறவினர்
- D. பகைவர்
8. ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
(a) க 1. உறுதி
(b) கா 2. கொள்ளுகை
(c) தே 3. பறவை
(d) நி 4. தராசு
- A. 4 3 2 1
- B. 4 1 3 2
- C. 3 4 1 2
- D. 3 4 2 1
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
- A. செற்றார்
- B. உற்றார்
- C. நண்ணார்
- D. ஒன்னார்
10. அகரவரிசைப்படி சொற்களை அமைக்க:
- A. கருவூலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
- B. கவரிமான், கருவூலம், களத்துமேடு, கலம்பூச்சு
- C. கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
- D. கலம்பூச்சு, கவரிமான், கருவூலம், களத்துமேடு
11. 'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
- A. வேர்குறு
- B. வேர்க்குறு
- C. வேர்வை
- D. வியர்வை
12. காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
- A. புட்டில்
- B. புட்டி
- C. புட்டம்
- D. புட்டகம்
13. அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.
- A. புண்கணீர்
- B. புங்கணீர்
- C. புயங்கணீர்
- D. புன்கணீர்
14. வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
- A. விறல்
- B. வென்றி
- C. விரல்
- D. வறம்
15. பிரித்து எழுதுக:
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
- A. வேணன் + மை
- B. வேண் + அன்மை
- C. வேண் + நன்மை
- D. வேள் + நன்மை
16. சேர்த்து எழுதுக:
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
- A. அதுவன்று
- B. அதுஅன்று
- C. அதினன்று
- D. அதான்று
17. சேர்த்து எழுதுக:
உள் + மனம்
- A. உன்மனம்
- B. உண்மனம்
- C. உள்மனம்
- D. உம்மனம்
18. பொருத்துக:
(a) அநுராகம் 1. பாவம்
(b) அனுராகம் 2. மான்
(c) ஏணம் 3. ஒத்தகாதல்
(d) ஏனம் 4. மிக்க ஆசை
- A. 4 3 2 1
- B. 4 1 2 3
- C. 4 2 3 1
- D. 4 1 3 2
19. "அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
- A. அடப்பாவி
- B. அற்பாவி
- C. அற்ப பாவி
- D. அற்ப ஆவி
20. கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
- A. கூற்று சரி; காரணம் தவறு
- B. கூற்று சரி; காரணம் சரி
- C. கூற்று தவறு; காரணம் சரி
- D. கூற்று தவறு; காரணம் தவறு
21. பொருத்துக :
சொற்கள் இலக்கணம்
(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை
(b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை
(d) தங்கை 4. உயர்திணைப் பன்மை
- A. 3 4 1 2
- B. 3 1 2 4
- C. 2 3 4 1
- D. 4 2 3 1
22. 'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
- A. டச்சு
- B. பிரெஞ்சு
- C. போர்ச்சுகீசியம்
- D. தமிழ்
23. சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
- A. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
- B. உலகத் தமிழ் மன்றம்
- C. உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
- D. உலகத் தமிழ்ச் சங்கம்
24. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
- A. சாவி
- B. பொத்தான்
- C. சோப்பு
- D. பிண்டம்
25. ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- A. வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- B. வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- C. வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- D. வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.