GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025

General Tamil Questions 1 to 25

1. பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.

  • A. அவள் அல்லள்
  • B. மரம் அன்று
  • C. அவை அல்ல
  • D. அவன் அல்ல
Answer: C. அவை அல்ல

2. சரியான தொடரைத் தேர்வு செய்க.

  • A. மாடுகள் மேய்ந்தது
  • B. பறவைகள் பறந்தது
  • C. மரம் வளர்ந்தன
  • D. செடி கொடிகள் காற்றில் அசைந்தன
Answer: D. செடி கொடிகள் காற்றில் அசைந்தன

3. பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  • A. ஆடூஉ வந்தாள்
  • B. மகடூ வந்தான்
  • C. மகடூ வந்தாள்
  • D. சாத்தி வந்தான்
Answer: C. மகடூ வந்தாள்

4. பொருத்துக:
அடி தாவரம்
(a) தட்டு 1. வேம்பு
(b) கழி 2. மூங்கில்
(c) கழை 3. சோளம்
(d) அடி 4. கரும்பு

  • A. 3 4 2 1
  • B. 3 2 4 1
  • C. 4 3 1 2
  • D. 2 3 4 1
Answer: A. 3 4 2 1

5. யானையின் ஒலி மரபைக் கண்டறிக.

  • A. அலப்பும்
  • B. பிளிறும்
  • C. எக்காளமிடும்
  • D. கதறும்
Answer: B. பிளிறும்

6. 'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.

  • A. மந்தை
  • B. நிரை
  • C. கணம்
  • D. கூட்டம்
Answer: C. கணம்

7. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.

  • A. சகோதரி
  • B. நண்பர்
  • C. உறவினர்
  • D. பகைவர்
Answer: D. பகைவர்

8. ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
(a) க 1. உறுதி
(b) கா 2. கொள்ளுகை
(c) தே 3. பறவை
(d) நி 4. தராசு

  • A. 4 3 2 1
  • B. 4 1 3 2
  • C. 3 4 1 2
  • D. 3 4 2 1
Answer: D. 3 4 2 1

9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

  • A. செற்றார்
  • B. உற்றார்
  • C. நண்ணார்
  • D. ஒன்னார்
Answer: B. உற்றார்

10. அகரவரிசைப்படி சொற்களை அமைக்க:

  • A. கருவூலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
  • B. கவரிமான், கருவூலம், களத்துமேடு, கலம்பூச்சு
  • C. கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
  • D. கலம்பூச்சு, கவரிமான், கருவூலம், களத்துமேடு
Answer: C. கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு

11. 'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு

  • A. வேர்குறு
  • B. வேர்க்குறு
  • C. வேர்வை
  • D. வியர்வை
Answer: A. வேர்குறு

12. காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்

  • A. புட்டில்
  • B. புட்டி
  • C. புட்டம்
  • D. புட்டகம்
Answer: C. புட்டம்

13. அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.

  • A. புண்கணீர்
  • B. புங்கணீர்
  • C. புயங்கணீர்
  • D. புன்கணீர்
Answer: D. புன்கணீர்

14. வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்

  • A. விறல்
  • B. வென்றி
  • C. விரல்
  • D. வறம்
Answer: A. விறல்

15. பிரித்து எழுதுக:
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

  • A. வேணன் + மை
  • B. வேண் + அன்மை
  • C. வேண் + நன்மை
  • D. வேள் + நன்மை
Answer: D. வேள் + நன்மை

16. சேர்த்து எழுதுக:
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.

  • A. அதுவன்று
  • B. அதுஅன்று
  • C. அதினன்று
  • D. அதான்று
Answer: D. அதான்று

17. சேர்த்து எழுதுக:
உள் + மனம்

  • A. உன்மனம்
  • B. உண்மனம்
  • C. உள்மனம்
  • D. உம்மனம்
Answer: B. உண்மனம்

18. பொருத்துக:
(a) அநுராகம் 1. பாவம்
(b) அனுராகம் 2. மான்
(c) ஏணம் 3. ஒத்தகாதல்
(d) ஏனம் 4. மிக்க ஆசை

  • A. 4 3 2 1
  • B. 4 1 2 3
  • C. 4 2 3 1
  • D. 4 1 3 2
Answer: A. 4 3 2 1

19. "அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.

  • A. அடப்பாவி
  • B. அற்பாவி
  • C. அற்ப பாவி
  • D. அற்ப ஆவி
Answer: D. அற்ப ஆவி

20. கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.

  • A. கூற்று சரி; காரணம் தவறு
  • B. கூற்று சரி; காரணம் சரி
  • C. கூற்று தவறு; காரணம் சரி
  • D. கூற்று தவறு; காரணம் தவறு
Answer: D. கூற்று தவறு; காரணம் தவறு

21. பொருத்துக :
சொற்கள் இலக்கணம்
(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை
(b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை
(d) தங்கை 4. உயர்திணைப் பன்மை

  • A. 3 4 1 2
  • B. 3 1 2 4
  • C. 2 3 4 1
  • D. 4 2 3 1
Answer: A. 3 4 1 2

22. 'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.

  • A. டச்சு
  • B. பிரெஞ்சு
  • C. போர்ச்சுகீசியம்
  • D. தமிழ்
Answer: C. போர்ச்சுகீசியம்

23. சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்

  • A. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
  • B. உலகத் தமிழ் மன்றம்
  • C. உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
  • D. உலகத் தமிழ்ச் சங்கம்
Answer: A. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

24. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

  • A. சாவி
  • B. பொத்தான்
  • C. சோப்பு
  • D. பிண்டம்
Answer: D. பிண்டம்

25. ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.

  • A. வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
  • B. வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
  • C. வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
  • D. வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
Answer: D. வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
;