GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
Answer: B.   மணிமேகலை
52.  "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Answer: C.   மணிமேகலை
53.  குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?
Answer: D.   அகவற்பா
54.  துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
Answer: D.   குகன்
55.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Answer: D.   ஏலாதி
56.  பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
Answer: C.   நாலடியார்
57.  கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள _____________ ஆகும்.
Answer: D.   நல்லெண்ணங்கள்
58.  பொருட்பாலின் இயல்கள்
Answer: B.   அரசியல், அங்கவியல், ஒழிபியல்
59.  வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
Answer: C.   மூங்கில் போன்ற தோள்
60.  பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: D.   எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
61.  தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
Answer: A.   அயற்கூற்று வாக்கியம்
62.  பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
Answer: C.   பிறவினை வாக்கியம்
63.  அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
Answer: C.   காலப் பெயர்
64.  வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
Answer: B.   மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
65.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Answer: C.   நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
66.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
Answer: C.   கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
67.  சொல்லுக்கேற்ற பொருளறிக:
Answer: A.   வலிமை - திண்மை
68.  சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை - மறை
Answer: A.   மான் - வேதம்
69.  ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
Answer: A.   ஒளி நகல்
70.  "மா" ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
Answer: A.   பெரிய
71.  பாகற்காய் - பிரித்தெழுதுக
Answer: A.   பாகு + அல் + காய்
72.  பைந்நிணம் - பிரித்தெழுதுக
Answer: C.   பசுமை + நிணம்
73.  “திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
Answer: D.   பெரியபுராணம்
74.  மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Answer: A.   ஐங்குறுநூறு
75.  தவறான இணை எது?
Answer: C.   அகத்திக் கீரை - கண்நோய்
;