TNPSC Group 4 2019
General Tamil Questions 76 to 100
1.
பொருந்தாத இணை எது?
A.
மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
B.
கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
C.
வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
D.
தென்கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
Answer:
C.
வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
2.
அகர வரிசைப்படுத்துக
A.
மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
B.
முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
C.
மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
D.
மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
Answer:
C.
மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
3.
தென்னாட்டைக் கன்னந்தனியே ஆண்ட பெண்ணாசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
A.
இராணி மங்கம்மாள்
B.
ஜான்சி ராணி
C.
தில்லையாடி வள்ளியம்மை
D.
வேலுநாச்சியார்
Answer:
A.
இராணி மங்கம்மாள்
4.
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
A.
ஆட்டையாம்பட்டி
B.
வேப்பனேரி
C.
புளியம்பட்டி
D.
புளியங்குடி
Answer:
A.
ஆட்டையாம்பட்டி
5.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
A.
அம்பேத்கர்
B.
இராஜாஜி
C.
அண்ணா
D.
காமராசர்
Answer:
A.
அம்பேத்கர்
6.
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
A.
2005
B.
2004
C.
2003
D.
2006
Answer:
A.
2005
7.
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
A.
ஜி.யு. போப்
B.
வீரமாமுனிவர்
C.
H.A. கிருஷ்ணப்பிள்ளை
D.
ரா.பி. சேதுபிள்ளை
Answer:
B.
வீரமாமுனிவர்
8.
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
A.
மராட்டிய மாநிலம்
B.
குஜராத் மாநிலம்
C.
தமிழ்நாடு
D.
கர்நாடகம்
Answer:
A.
மராட்டிய மாநிலம்
9.
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
A.
மறைமலையடிகள்
B.
உ.வே. சாமிநாத ஐயர்
C.
வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
D.
வையாபுரிப்பிள்ளை
Answer:
C.
வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
10.
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
A.
கமில்சுவலபில்
B.
மாக்சு முல்லர்
C.
முனைவா எமினோ
D.
வில்லியம் ஜோன்ஸ்
Answer:
B.
மாக்சு முல்லர்
11.
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
A.
மாக்சு முல்லர்
B.
கால்டுவெல்
C.
கெல்லட்
D.
எமினோ
Answer:
D.
எமினோ
12.
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
A.
போட்டி
B.
பொழுதுபோக்கு
C.
உடற்பயிற்சி
D.
உற்சாகம்
Answer:
A.
போட்டி
13.
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
A.
எட்வார்டு மை பிரிட்சு
B.
வால்ட் விட்மன்
C.
எடிசன்
D.
கீட்ஸ்
Answer:
C.
எடிசன்
14.
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
A.
சிற்பி
B.
சி.சு. செல்லப்பா
C.
ந. பிச்சமூர்த்தி
D.
மு. மேத்தா
Answer:
B.
சி.சு. செல்லப்பா
15.
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
A.
அப்துல் ரகுமான்
B.
சிற்பி
C.
ந. பிச்சமூர்த்தி
D.
இரா. மீனாட்சி
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
16.
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
A.
மு. மேத்தா
B.
பசுவய்யா
C.
ந. பிச்சமூர்த்தி
D.
ஈரோடு தமிழன்பன்
Answer:
D.
ஈரோடு தமிழன்பன்
17.
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
A.
பாரதிதாசன்
B.
நாமக்கல் கவிஞர்
C.
வாணிதாசன்
D.
முடியரசன்
Answer:
C.
வாணிதாசன்
18.
“வாழ்வினிற்கோ செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
A.
தமிழ்நாடு அரசு
B.
புதுவை அரசு
C.
பிரெஞ்சு அரசு
D.
ஆங்கில அரசு
Answer:
B.
புதுவை அரசு
19.
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
A.
நாதகுத்தனார்
B.
தோலா மொழித்தேவர்
C.
திருத்தக்க தேவர்
D.
சீத்தலைச் சாத்தனார்
Answer:
D.
சீத்தலைச் சாத்தனார்
20.
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
A.
திருநாவுக்கரசர்
B.
சுந்தரர்
C.
திருஞானசம்பந்தர்
D.
மாணிக்கவாசகர்
Answer:
A.
திருநாவுக்கரசர்
21.
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A.
பட்டினத்தார்
B.
மருதகாசி
C.
உடுமலை நாராயணகவி
D.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Answer:
B.
மருதகாசி
22.
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் _________
A.
பாரதியார்
B.
சென்னி குளம் அண்ணாமலையார்
C.
அருணகிரியார்
D.
விளம்பி நாகனார்
Answer:
B.
சென்னி குளம் அண்ணாமலையார்
23.
கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
A.
596
B.
599
C.
593
D.
597
Answer:
B.
599
24.
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
A.
வங்கத்துப் பரணி
B.
திராவிடத்துப் பரணி
C.
கலிங்கத்துப்பரணி
D.
தக்கயாகப் பரணி
Answer:
C.
கலிங்கத்துப்பரணி
25.
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
A.
பதிற்றுப்பத்து
B.
பரிபாடல்
C.
புறநானூறு
D.
ஆத்திச்சூடி
Answer:
C.
புறநானூறு