TNPSC Group 4 2022
General Tamil Questions 1 to 25
1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல'
- A. வெளிப்படைத் தன்மை
- B. வெளிப்படையற்ற தன்மை
- C. மறைத்து வைத்தல்
- D. தன்னலமின்மை
2. ‘சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- A. தெளிவாகத் தெரியாது
- B. தெளிவாகத் தெரியும்
- C. நிலைத்து நிற்கும்
- D. நிலைத்து நிற்காது
3. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
- A. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- B. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- C. ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
- D. ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
4. மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
- A. செய் வினை
- B. செயப்பாட்டு வினை
- C. தன் வினை
- D. பிற வினை
5. இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
- A. இடைச்சொல் தொடர்
- B. விளித் தொடர்
- C. எழுவாய்த் தொடர்
- D. உரிச்சொல் தொடர்
6. பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
- A. 4 3 1 2
- B. 3 4 2 1
- C. 4 3 2 1
- D. 2 3 1 4
7. பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் - செம்மை
(b) சினைப்பெயர் - கண்
(c) பண்புப்பெயர் - ஆண்டு
(d) தொழிற்பெயர் - ஆடுதல்
- A. (a), (c)
- B. (a), (b)
- C. (c), (d)
- D. (a), (d)
8. 'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
- A. கேட்டு
- B. கேட்ட
- C. கேட்டல்
- D. கேட்டான்
9. 'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- A. தணி
- B. தணிந்த
- C. தணிந்து
- D. தனி
10. 'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
- A. தந்த
- B. தரு
- C. தா
- D. தந்து
11. 'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- A. அரசன்
- B. வறுமை
- C. மதில்
- D. நோய்
12. 'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- A. பெரிய
- B. சிறிய
- C. குறைய
- D. நிரம்ப
13. 'பரவை'- இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- A. மலை
- B. கடல்
- C. ஆறு
- D. உயிர்வகை
14. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
- A. கூகை கூவும்
- B. கூகை குனுகும்
- C. கூகை குழறும்
- D. கூகை அலறும்
15. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- A. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- B. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- C. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- D. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
16. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
- A. சார்பு
- B. மருந்து
- C. கஃசு
- D. பசு
17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- A. மோனை
- B. எதுகை
- C. இசைவு
- D. இயைபு
18. பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
- A. 1 3 4 2
- B. 3 4 1 2
- C. 2 3 4 1
- D. 4 1 2 3
19. பொருத்துக.
(a) 8 7 6 1. ௩ ௬ ௯
(b) 5 4 3 2. ௩ உ க
(c) 3 2 1 3. ௫ ச ௩
(d) 3 6 9 4. அ எ ௬
- A. 2 4 1 3
- B. 4 1 3 2
- C. 4 3 2 1
- D. 3 2 1 4
20. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
- A. ஆழ்வார்கள்
- B. சித்தர்கள்
- C. நாயன்மார்கள்
- D. புலவர்கள்
21. 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
- A. தாலாட்டுப்பாட்டு
- B. கும்மிப் பாட்டு
- C. பள்ளுப்பாட்டு
- D. வில்லுப் பாட்டு
22. ‘வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
- A. நல்லாதனார்
- B. ஒட்டக்கூத்தர்
- C. காளமேகப் புலவர்
- D. குமரகுருபரர்
23. 'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
- A. பாரதிதாசன்
- B. அழகிய சொக்கநாதப் புலவர்
- C. காளமேகப்புலவர்
- D. புதுமைப்பித்தன்
24. 'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
- A. அர்ச்சுனன்
- B. தருமன்
- C. சகாதேவன்
- D. நகுலன்
25. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
- A. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- B. உ.வே.சாமிநாதனார்
- C. திரு.வி. கலியாண சுந்தரனார்
- D. ஆறுமுக நாவலர்