GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2022

General Tamil Questions 1 to 25

1.  உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல'
A.   வெளிப்படைத் தன்மை
B.   வெளிப்படையற்ற தன்மை
C.   மறைத்து வைத்தல்
D.   தன்னலமின்மை
Answer: A.  வெளிப்படைத் தன்மை
2.  ‘சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A.   தெளிவாகத் தெரியாது
B.   தெளிவாகத் தெரியும்
C.   நிலைத்து நிற்கும்
D.   நிலைத்து நிற்காது
Answer: C.  நிலைத்து நிற்கும்
3.  ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
A.   ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
B.   ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
C.   ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
D.   ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
Answer: C.  ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
4.  மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
A.   செய் வினை
B.   செயப்பாட்டு வினை
C.   தன் வினை
D.   பிற வினை
Answer: A.  செய் வினை
5.  இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
A.   இடைச்சொல் தொடர்
B.   விளித் தொடர்
C.   எழுவாய்த் தொடர்
D.   உரிச்சொல் தொடர்
Answer: D.  உரிச்சொல் தொடர்
6.  பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
A.   4 3 1 2
B.   3 4 2 1
C.   4 3 2 1
D.   2 3 1 4
Answer: A.  4 3 1 2
7.  பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் - செம்மை
(b) சினைப்பெயர் - கண்
(c) பண்புப்பெயர் - ஆண்டு
(d) தொழிற்பெயர் - ஆடுதல்
A.   (a), (c)
B.   (a), (b)
C.   (c), (d)
D.   (a), (d)
Answer: A.  (a), (c)
8.  'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A.   கேட்டு
B.   கேட்ட
C.   கேட்டல்
D.   கேட்டான்
Answer: A.  கேட்டு
9.  'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
A.   தணி
B.   தணிந்த
C.   தணிந்து
D.   தனி
Answer: A.  தணி
10.  'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
A.   தந்த
B.   தரு
C.   தா
D.   தந்து
Answer: C.  தா
11.  'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A.   அரசன்
B.   வறுமை
C.   மதில்
D.   நோய்
Answer: C.  மதில்
12.  'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A.   பெரிய
B.   சிறிய
C.   குறைய
D.   நிரம்ப
Answer: A.  பெரிய
13.  'பரவை'- இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A.   மலை
B.   கடல்
C.   ஆறு
D.   உயிர்வகை
Answer: B.  கடல்
14.  மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
A.   கூகை கூவும்
B.   கூகை குனுகும்
C.   கூகை குழறும்
D.   கூகை அலறும்
Answer: C.  கூகை குழறும்
15.  சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
B.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
C.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
D.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
Answer: D.  வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
16.  குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
A.   சார்பு
B.   மருந்து
C.   கஃசு
D.   பசு
Answer: D.  பசு
17.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A.   மோனை
B.   எதுகை
C.   இசைவு
D.   இயைபு
Answer: C.  இசைவு
18.  பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
A.   1 3 4 2
B.   3 4 1 2
C.   2 3 4 1
D.   4 1 2 3
Answer: C.  2 3 4 1
19.  பொருத்துக.
(a) 8 7 6 1. ௩ ௬ ௯
(b) 5 4 3 2. ௩ உ க
(c) 3 2 1 3. ௫ ச ௩
(d) 3 6 9 4. அ எ ௬
A.   2 4 1 3
B.   4 1 3 2
C.   4 3 2 1
D.   3 2 1 4
Answer: C.  4 3 2 1
20.  பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
A.   ஆழ்வார்கள்
B.   சித்தர்கள்
C.   நாயன்மார்கள்
D.   புலவர்கள்
Answer: B.  சித்தர்கள்
21.  'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
A.   தாலாட்டுப்பாட்டு
B.   கும்மிப் பாட்டு
C.   பள்ளுப்பாட்டு
D.   வில்லுப் பாட்டு
Answer: C.  பள்ளுப்பாட்டு
22.  ‘வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A.   நல்லாதனார்
B.   ஒட்டக்கூத்தர்
C.   காளமேகப் புலவர்
D.   குமரகுருபரர்
Answer: C.  காளமேகப் புலவர்
23.  'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
A.   பாரதிதாசன்
B.   அழகிய சொக்கநாதப் புலவர்
C.   காளமேகப்புலவர்
D.   புதுமைப்பித்தன்
Answer: B.  அழகிய சொக்கநாதப் புலவர்
24.  'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
A.   அர்ச்சுனன்
B.   தருமன்
C.   சகாதேவன்
D.   நகுலன்
Answer: A.  அர்ச்சுனன்
25.  “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
A.   மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
B.   உ.வே.சாமிநாதனார்
C.   திரு.வி. கலியாண சுந்தரனார்
D.   ஆறுமுக நாவலர்
Answer: C.  திரு.வி. கலியாண சுந்தரனார்
;