TNPSC Group 4 2022
General Tamil Questions 26 to 50
1. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்
- A. அனைத்தும் சரி
- B. (a),(b) சரி
- C. (a), (c), (d) சரி
- D. அனைத்தும் தவறு
2. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
- A. கூற்று 1 மட்டும் சரி
- B. கூற்று 2 மட்டும் சரி
- C. கூற்று இரண்டும் சரி
- D. கூற்று இரண்டும் தவறு
3. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்” - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
- A. ஏற்றுமதி
- B. ஏமாற்றுதல்
- C. நேர்மை
- D. முயற்சியின்மை
4. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
- A. கூற்று 1 மட்டும் சரி
- B. கூற்று 2 மட்டும் சரி
- C. கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- D. கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
5. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
- A. வாணிதாசன்
- B. பாரதிதாசன்
- C. சுரதா
- D. பாரதியார்
6. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
- A. ஆத்திச்சூடி
- B. கொன்றைவேந்தன்
- C. நல்வழி
- D. மூதுரை
7. பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்
- A. 3 4 2 1
- B. 2 4 1 3
- C. 2 3 1 4
- D. 1 2 3 4
8. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
- A. ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
- B. ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
- C. ஆகஸ்டு ஒன்றாம் நாள்
- D. டிசம்பர் பதினைந்தாம் நாள்
9. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ________ நூலாகும்.
- A. இரட்டைமணிமாலை
- B. மும்மணிக்கோவை
- C. தெய்வமணிமாலை
- D. மனுமுறைகண்டவாசகம்
10. 'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது ?
- A. சிங்கவல்லி
- B. கீழாநெல்லி
- C. குப்பைமேனி
- D. வல்லாரை
11. ‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
- A. தொல்காப்பியம்
- B. மதுரைக்காஞ்சி
- C. பட்டினப்பாலை
- D. பதிற்றுப்பத்து
12. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
- A. பட்டினப்பாலை
- B. தொல்காப்பியம்
- C. குறிஞ்சிப்பாட்டு
- D. திருக்குறள்
13. ஆற்றூர் பேச்சு வழக்கில் _________ என மருவியுள்ளது.
- A. ஆம்பூர்
- B. அரூர்
- C. அரசூர்
- D. ஆத்தூர்
14. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
- A. எம்.ஜி. இராமச்சந்திரன்
- B. மூதறிஞர் இராஜாஜி
- C. பெருந்தலைவர் காமராசர்
- D. கலைஞர் கருணாநிதி
15. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
- A. வீரமாமுனிவர்
- B. கால்டுவெல்
- C. ஜி.யு. போப்
- D. தேவநேயப்பாவாணர்
16. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
- A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- B. தேவநேய பாவாணர்
- C. பரிதிமாற்கலைஞர்
- D. இளங்கோவடிகள்
17. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
- A. ரா.பி. சேதுப்பிள்ளை
- B. சோமசுந்தர பாரதியார்
- C. குன்றக்குடி அடிகளார்
- D. வீரமாமுனிவர்
18. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
- A. பல்லவர்கள்
- B. பாண்டியர்கள்
- C. சோழர்கள்
- D. நாயக்கர்கள்
19. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- A. ஓவிய எழினி
- B. சிற்பக்கலை
- C. மெய்க்கீர்த்தி
- D. பைஞ்சுதை
20. பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
சரியான விடையைத் தெரிவு செய்க.
- A. 3 1 4 2
- B. 4 3 2 1
- C. 4 2 1 3
- D. 2 1 4 3
21. சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
- A. 1ம் மற்றும் 2ம் சரி
- B. 2ம் மற்றும் 3ம் சரி
- C. 1ம் மற்றும் 3ம் சரி
- D. 2ம் மற்றும் 4ம் சரி
22. முடியரசன் இயற்றாத நூல் எது?
- A. பூங்கொடி
- B. நீலமேகம்
- C. வீரகாவியம்
- D. காவியப்பாவை
23. 'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்
- A. பாரதியார்
- B. பசுவய்யா
- C. பாரதிதாசன்
- D. நாமக்கல் கவிஞர்
24. 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
- A. நாமக்கல் கவிஞர்
- B. சுரதா
- C. பாரதிதாசன்
- D. பாரதியார்
25. கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
- A. தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
- B. நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
- C. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- D. தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
26. மோனைத் தொடை _____ வகைப்படும்.
- A. ஆறு
- B. எட்டு
- C. ஐந்து
- D. மூன்று