GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2022

General Tamil Questions 76 to 100

1.  ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
A.   பத்து
B.   ஆறு
C.   ஏழு
D.   ஐந்து
Answer: C.  ஏழு
2.  உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
A.   கலம்பகம்
B.   பள்ளு
C.   குறவஞ்சி
D.   உலா
Answer: B.  பள்ளு
3.  அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
A.   இராமலிங்க சுவாமிகள் சரிதம்
B.   மதி பெற்ற மைனர்
C.   முப்பெண்மணிகள் வரலாறு
D.   நான் கண்ட பாரதம்
Answer: D.  நான் கண்ட பாரதம்
4.  பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
A.   சேர நாடு
B.   சோழ நாடு
C.   பாண்டிய நாடு
D.   கலிங்க நாடு
Answer: B.  சோழ நாடு
5.  “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
A.   கரிசலாங்கண்ணி
B.   தூதுவளை
C.   குப்பைமேனி
D.   சோற்றுக்கற்றாழை
Answer: D.  சோற்றுக்கற்றாழை
6.  புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
A.   உ.வே.சா.
B.   ஜி.யு. போப்
C.   சீகன் பால்கு ஐயர்
D.   வீரமாமுனிவர்
Answer: A.  உ.வே.சா.
7.  "மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
A.   குறுந்தொகை
B.   ஐங்குறுநூறு
C.   அகநானூறு
D.   நற்றிணை
Answer: B.  ஐங்குறுநூறு
8.  சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
A.   (a) மற்றும் (b) சரி
B.   (b) மற்றும் (c) சரி
C.   (c) மற்றும் (d) சரி
D.   (d) மற்றும் (a) சரி
Answer: C.  (c) மற்றும் (d) சரி
9.  பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
A.   3 4 1 2
B.   3 1 4 2
C.   2 3 1 4
D.   4 1 2 3
Answer: A.  3 4 1 2
10.  “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
A.   பாரதியார்
B.   சுரதா
C.   பாரதிதாசன்
D.   வாணிதாசன்
Answer: C.  பாரதிதாசன்
11.  திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
A.   1832
B.   1812
C.   1842
D.   1852
Answer: B.  1812
12.  திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
A.   கம்பர், இளங்கோ
B.   கம்பர், திருவள்ளுவர்
C.   திருவள்ளுவர், இளங்கோ
D.   இளங்கோ, பாரதியார்
Answer: B.  கம்பர், திருவள்ளுவர்
13.  எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
A.   சாரதா அம்மாள்
B.   மூவலூர் இராமாமிர்தம்
C.   முத்துலெட்சுமி
D.   பண்டித ரமாபாய்
Answer: B.  மூவலூர் இராமாமிர்தம்
14.  ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
A.   கி.பி 1730
B.   கி.பி 1880
C.   கி.பி 1865
D.   கி.பி 1800
Answer: A.  கி.பி 1730
15.  தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
A.   உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
B.   உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
C.   உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
D.   உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
Answer: B.  உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
16.  தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
A.   இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
B.   மொரிசியசு, இலங்கை, கனடா
C.   பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
D.   கனடா, அந்தமான், மலேசியா
Answer: A.  இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
17.  நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.   ஆழ்வார்திருநகர்
B.   ஆழ்வார்திருநகரி
C.   ஆழ்வார்பேட்டை
D.   திருநகரம்
Answer: B.  ஆழ்வார்திருநகரி
18.  பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்.
A.   மெய்யப்பர்
B.   உ.வே. சாமிநாதனார்
C.   இலக்குவனார்
D.   மீனாட்சி சுந்தரனார்
Answer: B.  உ.வே. சாமிநாதனார்
19.  டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
A.   உரைநடைக்கோவை
B.   தமிழிலக்கிய வரலாறு
C.   கதையும் கற்பனையும்
D.   ஊரும் பேரும்
Answer: D.  ஊரும் பேரும்
20.  தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
A.   மறைமலையடிகள்
B.   சங்கரதாசு சுவாமிகள்
C.   பரிதிமாற் கலைஞர்
D.   பம்மல் சம்பந்தனார்
Answer: C.  பரிதிமாற் கலைஞர்
21.  தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
A.   மதுரை
B.   கரூர்
C.   தூத்துக்குடி
D.   கன்னியாக்குமரி
Answer: C.  தூத்துக்குடி
22.  ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
A.   1929 நவம்பர் 18 - சென்னை, 27.06.1980 - அமெரிக்க பாராளுமன்றம்
B.   1943 செப்டம்பர் 5 - சென்னை, 30.06.1970 - ரசியா செனட் சபை
C.   1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
D.   1928 டிசம்பர் 3 - சென்னை, 30.06.1975 - இங்கிலாந்து பாராளுமன்றம்
Answer: C.  1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
23.  நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
A.   பாலசரஸ்வதி
B.   வைஜெயந்திமாலா
C.   தஞ்சை கிட்டப்பா
D.   நர்த்தகி நடராஜ்
Answer: D.  நர்த்தகி நடராஜ்
24.  பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
A.   தினத்தந்தி
B.   காஞ்சி
C.   முரசொலி
D.   தினமணி
Answer: B.  காஞ்சி
25.  கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
A.   கண்ணீர்ப்பூக்கள்
B.   ஊர்வலம்
C.   ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D.   சோழநிலா
Answer: C.  ஆகாயத்துக்கு அடுத்த வீடு
;