TNPSC Group 4 2022
General Tamil Questions 76 to 100
1. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
- A. பத்து
- B. ஆறு
- C. ஏழு
- D. ஐந்து
2. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
- A. கலம்பகம்
- B. பள்ளு
- C. குறவஞ்சி
- D. உலா
3. அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
- A. இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- B. மதி பெற்ற மைனர்
- C. முப்பெண்மணிகள் வரலாறு
- D. நான் கண்ட பாரதம்
4. பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
- A. சேர நாடு
- B. சோழ நாடு
- C. பாண்டிய நாடு
- D. கலிங்க நாடு
5. “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
- A. கரிசலாங்கண்ணி
- B. தூதுவளை
- C. குப்பைமேனி
- D. சோற்றுக்கற்றாழை
6. புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
- A. உ.வே.சா.
- B. ஜி.யு. போப்
- C. சீகன் பால்கு ஐயர்
- D. வீரமாமுனிவர்
7. "மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
- A. குறுந்தொகை
- B. ஐங்குறுநூறு
- C. அகநானூறு
- D. நற்றிணை
8. சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
- A. (a) மற்றும் (b) சரி
- B. (b) மற்றும் (c) சரி
- C. (c) மற்றும் (d) சரி
- D. (d) மற்றும் (a) சரி
9. பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
- A. 3 4 1 2
- B. 3 1 4 2
- C. 2 3 1 4
- D. 4 1 2 3
10. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
- A. பாரதியார்
- B. சுரதா
- C. பாரதிதாசன்
- D. வாணிதாசன்
11. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
- A. 1832
- B. 1812
- C. 1842
- D. 1852
12. திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
- A. கம்பர், இளங்கோ
- B. கம்பர், திருவள்ளுவர்
- C. திருவள்ளுவர், இளங்கோ
- D. இளங்கோ, பாரதியார்
13. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
- A. சாரதா அம்மாள்
- B. மூவலூர் இராமாமிர்தம்
- C. முத்துலெட்சுமி
- D. பண்டித ரமாபாய்
14. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
- A. கி.பி 1730
- B. கி.பி 1880
- C. கி.பி 1865
- D. கி.பி 1800
15. தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
- A. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- B. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- C. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- D. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
16. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
- A. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
- B. மொரிசியசு, இலங்கை, கனடா
- C. பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
- D. கனடா, அந்தமான், மலேசியா
17. நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. ஆழ்வார்திருநகர்
- B. ஆழ்வார்திருநகரி
- C. ஆழ்வார்பேட்டை
- D. திருநகரம்
18. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்.
- A. மெய்யப்பர்
- B. உ.வே. சாமிநாதனார்
- C. இலக்குவனார்
- D. மீனாட்சி சுந்தரனார்
19. டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
- A. உரைநடைக்கோவை
- B. தமிழிலக்கிய வரலாறு
- C. கதையும் கற்பனையும்
- D. ஊரும் பேரும்
20. தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
- A. மறைமலையடிகள்
- B. சங்கரதாசு சுவாமிகள்
- C. பரிதிமாற் கலைஞர்
- D. பம்மல் சம்பந்தனார்
21. தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
- A. மதுரை
- B. கரூர்
- C. தூத்துக்குடி
- D. கன்னியாக்குமரி
22. ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
- A. 1929 நவம்பர் 18 - சென்னை, 27.06.1980 - அமெரிக்க பாராளுமன்றம்
- B. 1943 செப்டம்பர் 5 - சென்னை, 30.06.1970 - ரசியா செனட் சபை
- C. 1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
- D. 1928 டிசம்பர் 3 - சென்னை, 30.06.1975 - இங்கிலாந்து பாராளுமன்றம்
23. நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
- A. பாலசரஸ்வதி
- B. வைஜெயந்திமாலா
- C. தஞ்சை கிட்டப்பா
- D. நர்த்தகி நடராஜ்
24. பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
- A. தினத்தந்தி
- B. காஞ்சி
- C. முரசொலி
- D. தினமணி
25. கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
- A. கண்ணீர்ப்பூக்கள்
- B. ஊர்வலம்
- C. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- D. சோழநிலா