TNPSC Group 4 2022
General Tamil Questions 51 to 75
1.
மோனைத் தொடை _____ வகைப்படும்.
A.
ஆறு
B.
எட்டு
C.
ஐந்து
D.
மூன்று
Answer:
B.
எட்டு
2.
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
A.
வாழ்வு, வேண்டில்
B.
புனிதமுற்று, புத்தகசாலை
C.
நாட்டில், யாண்டும்
D.
மக்கள், புதுவாழ்வு
Answer:
B.
புனிதமுற்று, புத்தகசாலை
3.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
A.
உடன்பாட்டு வாக்கியம்
B.
எதிர்மறை வாக்கியம்
C.
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
D.
கலவை வாக்கியம்
Answer:
C.
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
4.
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
A.
அண்ணனோடு போ
B.
கூடு கட்டு
C.
தமிழ்ப்படி
D.
அரசு ஆணை பிறப்பித்தது
Answer:
D.
அரசு ஆணை பிறப்பித்தது
5.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
A.
எத்தனை மாடுகள் மேய்ந்தன?
B.
எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
C.
மாடுகள் மேய்ந்தனவா?
D.
ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
Answer:
A.
எத்தனை மாடுகள் மேய்ந்தன?
6.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
A.
நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
B.
நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
C.
இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
D.
இங்கு நகரப்பேருந்து வருமா?
Answer:
C.
இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
7.
சரியான தொடரைக் கண்டறிக.
A.
உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
B.
தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
C.
தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
D.
உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
Answer:
C.
தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
8.
சரியான தொடரைக் கண்டறிக.
A.
தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
B.
என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
C.
நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
D.
"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்
Answer:
D.
"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்
9.
சரியான அகரவரிசையைத் தேர்க.
A.
மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
B.
கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
C.
முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
D.
மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
Answer:
B.
கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
10.
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
A.
கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
B.
ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
C.
தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
D.
ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
Answer:
B.
ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
11.
'தேடு' - வினைமுற்று சொல்
A.
தேடிய
B.
தேடினார்
C.
தேடி
D.
தேடுதல்
Answer:
B.
தேடினார்
12.
பொருத்துக.
| (a) வெண்பா | 1. துள்ளல் ஓசை |
| (b) ஆசிரியப்பா | 2. தூங்கல் ஓசை |
| (c) கலிப்பா | 3. செப்பல் ஓசை |
| (d) வஞ்சிப்பா | 4. அகவல் ஓசை |
A.
3 1 2 4
B.
4 3 2 1
C.
2 4 1 3
D.
3 4 1 2
Answer:
D.
3 4 1 2
13.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
'கோல்டு பிஸ்கட்'
A.
வைரக்கட்டி
B.
அலுமினியக்கட்டி
C.
தங்கக்கட்டி
D.
தாமிரக்கட்டி
Answer:
C.
தங்கக்கட்டி
14.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
| (a) Vowel | 1. மெய்யெழுத்து |
| (b) Consonant | 2. ஒரு மொழி |
| (c) Homograph | 3. உயிரெழுத்து |
| (d) Monolingual | 4. ஒப்பெழுத்து |
A.
1 3 2 4
B.
3 4 1 2
C.
2 4 3 1
D.
3 1 4 2
Answer:
D.
3 1 4 2
15.
‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
A.
அகன்ற உலகம்
B.
மேலான உலகம்
C.
சிறிய உலகம்
D.
கீழான உலகம்
Answer:
C.
சிறிய உலகம்
16.
எடுப்பு - எதிர்ச்சொல் தருக.
A.
தொடங்குதல்
B.
முடித்தல்
C.
நிற்றல்
D.
ஏற்றல்
Answer:
B.
முடித்தல்
17.
‘தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
A.
தண் + அளிர் + பதம்
B.
தன்மை + தளிர் + பதம்
C.
தண்மை + தளிர் + பதம்
D.
தண்டளிர் + பதம்
Answer:
C.
தண்மை + தளிர் + பதம்
18.
கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
A.
கலம் + அகம்
B.
கலம் + பகம்
C.
கலம்பு + அகம்
D.
கல் + அம்பகம்
Answer:
B.
கலம் + பகம்
19.
'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
A.
கலித்தொகை
B.
பரிபாடல்
C.
அகநானூறு
D.
புறநானூறு
Answer:
C.
அகநானூறு
20.
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
A.
நெடுந்தொகை
B.
திருக்குறள்
C.
முத்தொள்ளாயிரம்
D.
கம்பராமாயணம்
Answer:
B.
திருக்குறள்
21.
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
A.
I, III, IV மட்டும் சரி
B.
I, II மட்டும் சரி
C.
I, II, III மட்டும் சரி
D.
அனைத்தும் சரி
Answer:
D.
அனைத்தும் சரி
22.
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
A.
கம்பர்
B.
குலசேகரர்
C.
ஆண்டாள்
D.
பெரியாழ்வார்
Answer:
B.
குலசேகரர்
23.
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
A.
சுந்தரர்
B.
திருஞானசம்பந்தர்
C.
அப்பர்
D.
மாணிக்கவாசகர்
Answer:
B.
திருஞானசம்பந்தர்
24.
தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
A.
தேவர்கள்
B.
அரசர்கள்
C.
சித்தர்கள்
D.
புலவர்கள்
Answer:
C.
சித்தர்கள்
25.
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
A.
தூது
B.
பள்ளு
C.
கலம்பகம்
D.
குறவஞ்சி
Answer:
A.
தூது