GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  சரியான திருக்குறளைக் கண்டறிக.
Answer: D.   சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்
52.  செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
Answer: D.   தை கொண்டாடப் பெற்றது
53.  குமணன் நடந்தான் - இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக.
Answer: A.   தன்வினை
54.  சரியான தொடரைக் கண்டறிக.
Answer: C.   குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
55.  பொருத்தமான காலத்தைச் சுட்டுக :
"கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்".
Answer: B.   நிகழ்காலம்
56.  புல்வாய், நவ்வி, உழை ஆகியவற்றின் பெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
Answer: A.   பிணை
57.  உறுதிக் கூற்று: ஆ, ஓ, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம்: ஏனெனில் இவை வினாச்சொற்கள்.
Answer: A.   உறுதிக்கூற்று சரி காரணம் சரி
58.  பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?
Answer: D.   பகர அடைப்புக் குறி
59.  தேவநேயப்பாவாணர் 'கூட்டுக்கிளவியப் புணர் வாக்கியம்' என்று எதனைக் கூறுகிறார்?
Answer: D.   ஒப்புமைப்படுத்துதலை
60.  'அடவி' என்ற சொல்லின் பொருள்
Answer: C.   காடு
61.  பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் "மிகுதி" என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.
Answer: B.   கூர்
62.  திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது - இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.
Answer: B.   உயர்ந்து ஓங்கிய
63.  இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக:
(a) கறுத்து 1. கொல்லல், கோளிழைத்தல்
(b) கிராய் 2. கோபித்து, சினந்து
(c) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு
(d) உறையல் 4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு
Answer: D.   2 4 1 3
64.  உதகை - என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.
Answer: B.   உதக மண்டலம்
65.  பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.
Answer: B.   அஃது
66.  இவனுக்கு வீடு ஒன்று _________ இரண்டு இருக்கிறது.
Answer: C.   அல்லது
67.  பொருத்துக:
(a) கடற்கரைச் சாலை 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்
(b) புதுமனைப் புகுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை
(c) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(d) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
Answer: C.   3 1 4 2
68.  பொருள் கண்டறிக:
ம, மா
Answer: D.   இயமன், வண்டு
69.  னகர ணகர நகர வேறுபாட்டில் - பொருத்துக.
(a) அன்னாள் 1. முற்காலத்தில்
(b) உன்னல் 2. என்று சொல்லாள்
(c) முன்னாள் 3. நினைத்தல்
(d) என்னாள் 4. அவள்
Answer: D.   4 3 1 2
70.  _______ நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்
(பழமொழி நானூறு - 4)
இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?
Answer: D.   வேண்டுவது
71.  உறுதிக் கூற்று: சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
Answer: D.   இரண்டும் சரி
72.  தொல்காப்பியர் குறிப்பிடும் உவன், உவள், உவர், உது, உவை என்பன ________
Answer: B.   இடைநிலைச் சுட்டு
73.  'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
Answer: A.   சொல்லாமை
74.  "அறியாத பையன்" - என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
Answer: D.   தெரிநிலைப் பெயரெச்சம்
75.  'சிறிய கடிதம்' - இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
Answer: C.   குறிப்புப் பெயரெச்சம்
;