GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Tamil Questions 1 to 25

1.  ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
A.   கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
B.   கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
C.   கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
D.   கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
Answer: B.  கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
2.  கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
A.   தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் — கவிக்கோ
B.   மண்புழுவல்ல மானிடனே — பாரதி
C.   கன்று குரல் கேட்ட பசு — தாராபாரதி
D.   தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் — ஆலந்தூரார்
Answer: A.  தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் — கவிக்கோ
3.  புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
A.   எட்வர்டு மைபிரிட்சு
B.   ஈஸ்ட்மன்
C.   தாமஸ் ஆல்வா எடிசன்
D.   பிரான்சிஸ் சென்கின்சு
Answer: D.  பிரான்சிஸ் சென்கின்சு
4.  தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
A.   பாரதியார்
B.   தந்தை பெரியார்
C.   காந்தியார்
D.   அண்ணாதுரையார்
Answer: B.  தந்தை பெரியார்
5.  பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
A.   ஜார்ஜ் எல். ஹார்ட்
B.   வால்ட்விட்மன்
C.   லிண்ட் ஹோம்
D.   ஹால் சிப்மேன்
Answer: B.  வால்ட்விட்மன்
6.  நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a) இசை நாவல்கள் 1. நான்கு
(b) புதினங்கள் 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து
A.   4 3 1 2
B.   3 4 2 1
C.   2 4 1 3
D.   3 1 4 2
Answer: B.  3 4 2 1
7.  எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
A.   இங்கிலாந்து
B.   சிங்கப்பூர்
C.   உருசியா
D.   இந்தியா
Answer: C.  உருசியா
8.  மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
A.   மதங்க சூளாமணி
B.   மத்தவிலாசம்
C.   சாகுந்தலம்
D.   மனோன்மணீயம்
Answer: C.  சாகுந்தலம்
9.  "உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
A.   பாரதியார்
B.   பாரதிதாசன்
C.   வில்லிப்புத்தூரார்
D.   கம்பர்
Answer: D.  கம்பர்
10.  "சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
A.   திரு.வி.க.
B.   மறைமலையடிகள்
C.   உ.வே.சா.
D.   கவிமணி
Answer: C.  உ.வே.சா.
11.  "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்."என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
A.   தமிழ்த் தென்றல் திரு.வி.க
B.   பெரியார்
C.   பாவேந்தர் பாரதிதாசன்
D.   தாரா பாரதி
Answer: B.  பெரியார்
12.  குமராகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
A.   முப்பத்து மூன்று
B.   ஐம்பது
C.   ஐம்பத்தொன்று
D.   ஐம்பத்து மூன்று
Answer: C.  ஐம்பத்தொன்று
13.  தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
A.   பிள்ளையார்பட்டி
B.   கழுகு மலை
C.   திருப்பரங்குன்றம்
D.   ஆனைமலை
Answer: A.  பிள்ளையார்பட்டி
14.  தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
A.   பாவேந்தர் பாரதிதாசன்
B.   இரசூல் கம்ச தோவ்
C.   உமர் கய்யாம்
D.   க.வைரமுத்து
Answer: B.  இரசூல் கம்ச தோவ்
15.  'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
A.   உ.வே.சாமிநாதர்
B.   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
C.   பரிதிமாற்கலைஞர்
D.   மறைமலை அடிகளார்
Answer: B.  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
16.  "அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
A.   பெரியபுராணம்
B.   திருவிளையாடற்புராணம்
C.   சிலப்பதிகாரம்
D.   சீறாப்புராணம்
Answer: A.  பெரியபுராணம்
17.  'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
A.   கிரேக்கம்
B.   இலத்தீன்
C.   போர்ச்சுகீசியம்
D.   வடமொழி
Answer: A.  கிரேக்கம்
18.  பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
A.   கலிங்கத்துப்பரணி
B.   திருக்குறள்
C.   கம்பராமாயணம்
D.   பரிபாடல்
Answer: A.  கலிங்கத்துப்பரணி
19.  "தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
A.   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
B.   ஜி.யு. போப்
C.   டாக்டர் கிரௌல்
D.   கால்டுவெல்
Answer: C.  டாக்டர் கிரௌல்
20.  மன்னிப்பு - எம்மொழிச் சொல்
A.   தமிழ்
B.   தெலுங்கு
C.   மலையாளம்
D.   உருது
Answer: D.  உருது
21.  திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
A.   இராமலிங்க அடிகளார்
B.   தாயுமானவர்
C.   குமரகுருபரர்
D.   வில்லிபுத்தூரார்
Answer: C.  குமரகுருபரர்
22.  மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
A.   சுவாமிநாத தேசிகர்
B.   வீரமாமுனிவர்
C.   சி. இலக்குவனார்
D.   மீனாட்சி சுந்தரனார்
Answer: A.  சுவாமிநாத தேசிகர்
23.  "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
- இத் திருமந்தரப் பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
A.   ஆறாம் தந்திரம்
B.   இரண்டாம் தந்திரம்
C.   மூன்றாம் தந்திரம்
D.   எட்டாம் தந்திரம்
Answer: C.  மூன்றாம் தந்திரம்
24.  "அங்கவியல்" திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
A.   அறத்துப்பால்
B.   பொருட்பால்
C.   காமத்துப்பால்
D.   எதுவுமில்லை
Answer: B.  பொருட்பால்
25.  ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
- இக்குறளில் "ஏமாப்பு" என்பதன் பொருள் யாது?
A.   பெருமை
B.   ஏமாற்றம்
C.   பாதுகாப்பு
D.   பொறுமை
Answer: C.  பாதுகாப்பு
;