GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Tamil Questions 76 to 100

1.  மறைமலையடிகளாரின் மகள்
A.   கமலாம்பிகை அம்மையார்
B.   கெசவல்லி அம்மையார்
C.   நீலாம்பிகை அம்மையார்
D.   ஞானாம்பிகை அம்மையார்
Answer: C.  நீலாம்பிகை அம்மையார்
2.  'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்றபாடலடி இடம்பெற்றுள்ள நூல்
A.   ஆத்திச்சூடி
B.   நாலடியார்
C.   புறநானூறு
D.   பழமொழி நானூறு
Answer: C.  புறநானூறு
3.  'போரை ஒழிமின்’- என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
A.   நெடுங்கிள்ளி
B.   நலங்கிள்ளி
C.   அதியமான்
D.   சேரமான்நெடுமான் அஞ்சி
Answer: A.  நெடுங்கிள்ளி
4.  பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
A.   தேவாரம்
B.   திருவாசகம்
C.   புறநானூறு
D.   பதிற்றுப்பத்து
Answer: B.  திருவாசகம்
5.  'தேம்பாவணி' என்பது
A.   கிறித்தவக் காப்பியம்
B.   இசுலாமியக் காப்பியம்
C.   வைணவக் காப்பியம்
D.   சைவக் காப்பியம்
Answer: A.  கிறித்தவக் காப்பியம்
6.  "தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.
A.   இளங்கோவடிகள்
B.   கம்பர்
C.   திருவள்ளுவர்
D.   சீத்தலைச்சாத்தனார்
Answer: D.  சீத்தலைச்சாத்தனார்
7.  திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
A.   ஜம்பத்து மூவர்
B.   எழுபத்தைவர்
C.   அறுபதின்மர்
D.   நூற்றுவர்
Answer: A.  ஜம்பத்து மூவர்
8.  '____________' எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
A.   உலகெலாம்
B.   ஒன்றுகொலாம்
C.   உலகம் யாவையும்
D.   திருமறையோர்
Answer: B.  ஒன்றுகொலாம்
9.  பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைத்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
A.   2 3 4 1
B.   1 2 3 4
C.   4 3 1 2
D.   3 1 2 4
Answer: A.  2 3 4 1
10.  'அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்'? - இது பயின்று வந்த நூல் எது?
A.   பழமொழி
B.   நாலடியார்
C.   திருக்குறள்
D.   ஆசாரக் கோவை
Answer: A.  பழமொழி
11.  தமிழெண்களைக் கூட்டுக:
ருஅ + ௬அ = ?
A.   ௬கஉ
B.   க௬உ
C.   கருக
D.   கஉ௬
Answer: D.  கஉ௬
12.  ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
A.   ஆற்று + ஈர்
B.   ஆறு + ஈர்
C.   ஆ+ இற்று+ ஈர்
D.   ஆற்று + ஆ + ஈர்
Answer: D.  ஆற்று + ஆ + ஈர்
13.  தமிழ் _________ ஓசை மொழி.
A.   செப்பல்
B.   தூங்கல்
C.   மெல்
D.   துள்ளல்
Answer: C.  மெல்
14.  "சான்றாண்மை" - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A.   சா+ ன்றா + ண்மை
B.   சான்+ றாண் + மை
C.   சான்+ றா + ண்மை
D.   சான்+ றாண்மை
Answer: B.  சான்+ றாண் + மை
15.  புறத்திணைகள் ______________ வகைப்படும்.
A.   பன்னிரெண்டு
B.   ஏழு
C.   ஐந்து
D.   ஒன்பது
Answer: A.  பன்னிரெண்டு
16.  நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
A.   கொண்டு, உடன்
B.   பொருட்டு, நிமித்தம்
C.   இருந்து, நின்று
D.   உடைய
Answer: B.  பொருட்டு, நிமித்தம்
17.  பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
A.   சோலை
B.   பாலைவனம்
C.   வயல்
D.   காடு
Answer: D.  காடு
18.  "நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A.   தொல்காப்பியம்
B.   நன்னூல்
C.   யாப்பருங்கலக் காரிகை
D.   அகத்தியம்
Answer: B.  நன்னூல்
19.  நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் 'ஐவர்' என்பதன் இலக்கணம் யாது?
A.   ஒன்றொழி பொதுச் சொல்
B.   இனங்குறித்தல்
C.   தொடர்மொழி
D.   பொதுமொழி
Answer: A.  ஒன்றொழி பொதுச் சொல்
20.  "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
A.   வேற்றுமையணி
B.   இல்பொருள் உவமையணி
C.   ஏகதேச உருவக அணி
D.   எடுத்துக்காட்டு உவமையணி
Answer: A.  வேற்றுமையணி
21.  “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
A.   நிலம் - வாழ்க்கை
B.   ஊன்றுகோல் - பெரியோர்சொல்
C.   ஊன்றுகோல் - நிலம்
D.   ஒழுக்கம் - வாய்ச்சொல்
Answer: B.  ஊன்றுகோல் - பெரியோர்சொல்
22.  "பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்"
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
A.   அடிமறிமாற்றுப் பொருள்கோள்
B.   கொண்டு கூட்டுப் பொருள்கோள்
C.   மொழிமாற்றுப் பொருள்கோள்
D.   விற்பூட்டுப் பொருள்கோள்
Answer: B.  கொண்டு கூட்டுப் பொருள்கோள்
23.  "அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்?
A.   ரழ வரும்
B.   தந வரும்
C.   றன வரும்
D.   யத் தோன்றும்
Answer: A.  ரழ வரும்
24.  னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
A.   னல முன் டணவும் ணள முன் றனவும்
B.   னல முன் றடவும் ணள முன் னணவும்
C.   னல முன்றனவும் ணளமுன் டணவும்
D.   னல முன்றணவும் ணளமுன் டனவும்
Answer: C.  னல முன்றனவும் ணளமுன் டணவும்
25.  "வித்தொடு சென்ற வட்டி"
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன்பொருள் என்ன?
A.   பனையோலைப் பெட்டி
B.   வயல்
C.   வட்ட வடிவு
D.   எல்லை
Answer: A.  பனையோலைப் பெட்டி
;