TNPSC Group 4 2025
General Tamil Questions 1 to 25
1. பிழையான தொடரைக் கண்டறிக.
- A. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
- B. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
- C. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
- D. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
2. வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
(a) அழிந்தது தீமை 1. சினைப்பெயர் கொண்டது
(b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது
(c) நல்லது கை 3. குணப்பெயர் கொண்டது
(d) குளிர்ந்தது நிலம் 4. தொழிற்பெயர் கொண்டது
- A. 3 1 4 2
- B. 3 4 1 2
- C. 4 3 2 1
- D. 4 1 2 3
3. 'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
- A. பகை
- B. வண்மை
- C. வன்மை
- D. கேண்மை
4. 'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
- A. நிகழ்காலப் பெயரெச்சம்
- B. இறந்தகாலப் பெயரெச்சம்
- C. எதிர்காலப் பெயரெச்சம்
- D. குறிப்புப் பெயரெச்சம்
5. 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- A. நடந்தது
- B. நடப்பது
- C. நடப்பவை
- D. நடந்தவன்
6. “வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
- A. வைத்த
- B. வைத்து
- C. வைத்தது
- D. வைத்தாள்
7. கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
- A. கூற்று - சரி; காரணம் – தவறு
- B. கூற்று - தவறு; காரணம் - சரி
- C. கூற்று - சரி; காரணம் - சரி
- D. கூற்று – தவறு; காரணம் - தவறு
8. கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
- A. கூற்று – சரி; காரணம் - தவறு
- B. கூற்று - தவறு; காரணம் - சரி
- C. கூற்று - சரி; காரணம் - சரி
- D. கூற்று, காரணம் இரண்டும் தவறு
9. பொருந்தாத இணையைக் கண்டறிக.
- A. ஏ - எ
- B. த - ந
- C. ஐ - அ
- D. ற - ன
10. குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் - காணம்
- A. கூட்டம், பொன்
- B. பொன், கூட்டம்
- C. கூட்டம், காடு
- D. காடு, தோட்டம்
11. சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : 'இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
- A. கூற்று - சரி; காரணம் - தவறு
- B. கூற்று – தவறு; காரணம் – சரி
- C. கூற்று - சரி; காரணம் - சரி
- D. கூற்று - தவறு; காரணம் – தவறு
12. பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- A. அங்குக்கேட்டேன்
- B. அங்கு கேட்டேன்
- C. இங்கு பேசாதே
- D. எங்கு சென்றாய்
13. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
- A. அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
- B. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
- C. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
- D. அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
14. பிழை திருத்துக :
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் “ஓர்” பயன்படுத்த வேண்டும்.
- A. கூற்று – சரி; காரணம் - தவறு
- B. கூற்று - தவறு; காரணம் – சரி
- C. காரணம், கூற்று - இரண்டும் சரி
- D. கூற்று, காரணம் - இரண்டும் தவறு
15. ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :
(a) தேவகோட்டை 1. கோவை
(b) கோவன்புத்தூர் 2. சோணாடு
(c) பூந்தமல்லி 3. தேவோட்டை
(d) சோழநாடு 4. பூனமல்லி
- A. 1 2 3 4
- B. 3 1 4 2
- C. 2 1 4 3
- D. 4 3 2 1
16. இரு பொருள் தருக : 'தாரணி'
- A. சூரியன், உலகம்
- B. கதிரவன், மதி
- C. கடல், பூமி
- D. பூமி, உலகம்
17. ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
- A. பக்கப்பகுதி
- B. கீழ்ப்பகுதி
- C. நடுப்பகுதி
- D. மேல்பகுதி
18. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்
- A. முரல்
- B. வகுலி
- C. வாளை
- D. வியாளம்
19. நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
- A. 42
- B. 40
- C. 82
- D. 70
20. _______ ________உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
- A. மடவம் × மடந்தை
- B. உரவோர் ஆயின் X உரவோர் ஆக
- C. உரவோர் X மடந்தை
- D. உரவோர் X மடவம்
21. ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
- A. காற்புள்ளி
- B. அரைப்புள்ளி
- C. முக்காற்புள்ளி
- D. முற்றுப்புள்ளி
22. பொருத்துக :
(a) சாந்து 1. இழிதல்
(b) குருவி 2. குடை
(c) சுனை 3. ஓப்பு
(d) அருவி 4. அரை
- A. 4 3 2 1
- B. 4 1 3 2
- C. 2 4 1 3
- D. 4 2 1 3
23. ஒலி மரபைக் கண்டறிக.
புள்
- A. நரலும்
- B. கருவும்
- C. சிமிழ்க்கும்
- D. சீறும்
24. பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
- A. கண்ணன் நேற்று வருவான்
- B. அன்பு நாளை வந்தான்
- C. கவின்மொழி வருவாள்
- D. பூமி சுழல்கிறது
25. கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- A. கூற்று - சரி; காரணம் - சரி
- B. கூற்று - தவறு; காரணம் - சரி
- C. கூற்று - சரி; காரணம் - தவறு
- D. கூற்று - தவறு; காரணம் – தவறு