TNPSC Group 4 2025
General Tamil Questions 51 to 75
1. அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
- A. பெருமை
- B. பொறுமை
- C. கல்வி
- D. பண்பு
2. தொடரமைக்க :
விரிந்தது - விரித்தது
- A. மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- B. மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- C. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- D. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
3. கூற்று : 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
- A. கூற்று - சரி; காரணம் - சரி
- B. கூற்று - சரி; காரணம் - தவறு
- C. கூற்று – தவறு; காரணம் - சரி
- D. கூற்று - தவறு; காரணம் - தவறு
4. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
- A. காதி
- B. சாவடி
- C. சாம்பார்
- D. உடுக்கை
5. திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :
(a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34
(b) தெலுங்கு மொழி 2. 486
(c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06
(d) ஆங்கில மொழி 4. 411
- A. 4 1 2 3
- B. 4 3 2 1
- C. 3 1 4 2
- D. 3 4 1 2
6. பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :
(a) நிகழ்காலப் பெயரெச்சம் 1. இல்லாத பொருள்
(b) உடன்பாட்டுப் பெயரெச்சம் 2. அறிந்த பையன்
(c) குறிப்புப் பெயரெச்சம் 3. ஓடுகிற குதிரை
(d) ஈறுகெடாத பெயரெச்சம் 4. அறியாத குழந்தை
- A. 3 2 4 1
- B. 4 1 2 3
- C. 1 2 4 3
- D. 4 2 1 3
7. “ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
- A. ஓல்
- B. ஓலம்
- C. ஓலகம்
- D. ஒட்டோலக்கம்
8. பொருத்துக :
(a) அணிகம் 1. காமன்
(b) அநிகம் 2. சிவிகை
(c) அனிகம் 3. படையில் ஓர் அளவு
(d) அநங்கு 4. ஊர்தி
- A. 4 3 2 1
- B. 4 2 3 1
- C. 4 1 2 3
- D. 3 2 4 1
9. கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும்.எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
- A. கூற்று - சரி, காரணம் - தவறு
- B. கூற்று - தவறு, காரணம் - சரி
- C. கூற்று – தவறு, காரணம் - தவறு
- D. கூற்று - சரி, காரணம் - சரி
10. கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- A. கூற்று - சரி; காரணம் - தவறு
- B. கூற்று - தவறு; காரணம் - சரி
- C. கூற்று - சரி; காரணம் – சரி
- D. கூற்று - தவறு; காரணம் - தவறு
11. பொருத்துக :
(a) மருப்பு 1. வழிவந்தோன்
(b) விரகு 2. தந்திரம்
(c) மருகன் 3. சிறிய அடி
(d) சீறடி 4. யானைத் தந்தம்
- A. 1 4 3 2
- B. 1 2 4 3
- C. 4 2 1 3
- D. 2 1 4 3
12. பொருத்துக :
(a) மாணி 1. பொன்
(b) மானி 2. குள்ளன்
(c) கணகம் 3. படை
(d) கனகம் 4. மாமன்
- A. 1 2 3 4
- B. 2 4 3 1
- C. 4 3 2 1
- D. 3 1 4 2
13. சேர்த்து எழுதுக.
பலா + அருமை
- A. பலாஅருமை
- B. பலஅருமை
- C. பலாவருமை
- D. பலாப்பழம் அருமை
14. பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
- A. கங் + கௌகம்
- B. கங்கு + ஒகம்
- C. கங்க + ஓகம்
- D. கங்கா + ஓகம்
15. "கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
- A. ஆடல்
- B. அரவு
- C. ஆடு
- D. அடுதல்
16. பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
- A. கா
- B. வீ
- C. பூ
- D. மா
17. நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் _________ என்ற பெயரால் அழைப்பர்.
- A. மறவி
- B. நீறவர்
- C. மறதி
- D. நீரவர்
18. குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
- A. படிதல்
- B. குடியமர்தல்
- C. ஒழுங்காதல்
- D. சீராதல்
19. எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- A. எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- B. எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- C. எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- D. இவை எதுவும் இல்லை
20. பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை
- A. வெற்பு, சிலம்பு, பொருப்பு
- B. பொழிவு, எழில், வனப்பு
- C. அருள், பரிவு, கருணை
- D. ஆதவன், பகலவன், ஞாயிறு
21. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி
- A. போர், மிகுதி
- B. கலித்தல், கழித்தல்
- C. மகிழ்ச்சி, களித்தல்
- D. கலித்தொகை, மாவு களி
22. அரைப்புள்ளி அமையும் இடங்கள்:
கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
- A. கூற்று சரி; காரணம் சரியன்று
- B. கூற்று சரியன்று; காரணம் சரி
- C. கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
- D. கூற்று, காரணம் இரண்டும் சரி
23. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
- A. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
- B. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
- C. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
- D. ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
24. பொருத்துக:
விலங்குகள் இளமைப்பெயர்
(a) நவ்வி 1. சினை
(b) முதலை 2. ஓந்தி
(c) உடும்பு 3. பார்ப்பு
(d) மீன், கெண்டை 4. மறி
- A. 4 3 2 1
- B. 4 1 2 3
- C. 4 2 1 3
- D. 1 4 3 2
25. புல்லின் உறுப்பைக் கண்டறிக.
- A. தளிர்
- B. முறி
- C. குழை
- D. ஓலை