TNPSC Group 4 2025
General Tamil Questions 51 to 75
1.
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
“தகுதியான் வென்று விடல்”
A.
பெருமை
B.
பொறுமை
C.
கல்வி
D.
பண்பு
Answer:
B.
பொறுமை
2.
தொடரமைக்க :
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
A.
மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
B.
மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
C.
மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
D.
மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Answer:
D.
மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
3.
கூற்று : 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
A.
கூற்று - சரி; காரணம் - சரி
B.
கூற்று - சரி; காரணம் - தவறு
C.
கூற்று – தவறு; காரணம் - சரி
D.
கூற்று - தவறு; காரணம் - தவறு
Answer:
A.
கூற்று - சரி; காரணம் - சரி
4.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
A.
காதி
B.
சாவடி
C.
சாம்பார்
D.
உடுக்கை
Answer:
D.
உடுக்கை
5.
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
| (a) போர்ச்சுக்கீசிய மொழி | 1. 34 |
| (b) தெலுங்கு மொழி | 2. 486 |
| (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி | 3. 06 |
| (d) ஆங்கில மொழி | 4. 411 |
A.
4 1 2 3
B.
4 3 2 1
C.
3 1 4 2
D.
3 4 1 2
Answer:
C.
3 1 4 2
6.
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக:
| (a) நிகழ்காலப் பெயரெச்சம் | 1. இல்லாத பொருள் |
| (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் | 2. அறிந்த பையன் |
| (c) குறிப்புப் பெயரெச்சம் | 3. ஓடுகிற குதிரை |
| (d) ஈறுகெடாத பெயரெச்சம் | 4. அறியாத குழந்தை |
A.
3 2 4 1
B.
4 1 2 3
C.
1 2 4 3
D.
4 2 1 3
Answer:
A.
3 2 4 1
7.
“ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
A.
ஓல்
B.
ஓலம்
C.
ஓலகம்
D.
ஒட்டோலக்கம்
Answer:
A.
ஓல்
8.
பொருத்துக:
| (a) அணிகம் | 1. காமன் |
| (b) அநிகம் | 2. சிவிகை |
| (c) அனிகம் | 3. படையில் ஓர் அளவு |
| (d) அநங்கு | 4. ஊர்தி |
A.
4 3 2 1
B.
4 2 3 1
C.
4 1 2 3
D.
3 2 4 1
Answer:
A.
4 3 2 1
9.
கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும்.எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
A.
கூற்று - சரி, காரணம் - தவறு
B.
கூற்று - தவறு, காரணம் - சரி
C.
கூற்று – தவறு, காரணம் - தவறு
D.
கூற்று - சரி, காரணம் - சரி
Answer:
D.
கூற்று - சரி, காரணம் - சரி
10.
கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
A.
கூற்று - சரி; காரணம் - தவறு
B.
கூற்று - தவறு; காரணம் - சரி
C.
கூற்று - சரி; காரணம் – சரி
D.
கூற்று - தவறு; காரணம் - தவறு
Answer:
C.
கூற்று - சரி; காரணம் – சரி
11.
பொருத்துக :
(a) மருப்பு 1. வழிவந்தோன்
(b) விரகு 2. தந்திரம்
(c) மருகன் 3. சிறிய அடி
(d) சீறடி 4. யானைத் தந்தம்
(a) மருப்பு 1. வழிவந்தோன்
(b) விரகு 2. தந்திரம்
(c) மருகன் 3. சிறிய அடி
(d) சீறடி 4. யானைத் தந்தம்
A.
1 4 3 2
B.
1 2 4 3
C.
4 2 1 3
D.
2 1 4 3
Answer:
C.
4 2 1 3
12.
பொருத்துக :
(a) மாணி 1. பொன்
(b) மானி 2. குள்ளன்
(c) கணகம் 3. படை
(d) கனகம் 4. மாமன்
(a) மாணி 1. பொன்
(b) மானி 2. குள்ளன்
(c) கணகம் 3. படை
(d) கனகம் 4. மாமன்
A.
1 2 3 4
B.
2 4 3 1
C.
4 3 2 1
D.
3 1 4 2
Answer:
B.
2 4 3 1
13.
சேர்த்து எழுதுக.
பலா + அருமை
பலா + அருமை
A.
பலாஅருமை
B.
பலஅருமை
C.
பலாவருமை
D.
பலாப்பழம் அருமை
Answer:
C.
பலாவருமை
14.
பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
A.
கங் + கௌகம்
B.
கங்கு + ஒகம்
C.
கங்க + ஓகம்
D.
கங்கா + ஓகம்
Answer:
D.
கங்கா + ஓகம்
15.
"கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
A.
ஆடல்
B.
அரவு
C.
ஆடு
D.
அடுதல்
Answer:
B.
அரவு
16.
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
A.
கா
B.
வீ
C.
பூ
D.
மா
Answer:
B.
வீ
17.
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் _________ என்ற பெயரால் அழைப்பர்.
A.
மறவி
B.
நீறவர்
C.
மறதி
D.
நீரவர்
Answer:
D.
நீரவர்
18.
குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
A.
படிதல்
B.
குடியமர்தல்
C.
ஒழுங்காதல்
D.
சீராதல்
Answer:
A.
படிதல்
19.
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
A.
எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
B.
எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
C.
எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
D.
இவை எதுவும் இல்லை
Answer:
A.
எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
20.
பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை
மலை
A.
வெற்பு, சிலம்பு, பொருப்பு
B.
பொழிவு, எழில், வனப்பு
C.
அருள், பரிவு, கருணை
D.
ஆதவன், பகலவன், ஞாயிறு
Answer:
A.
வெற்பு, சிலம்பு, பொருப்பு
21.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி
கலி, கழி
A.
போர், மிகுதி
B.
கலித்தல், கழித்தல்
C.
மகிழ்ச்சி, களித்தல்
D.
கலித்தொகை, மாவு களி
Answer:
A.
போர், மிகுதி
22.
அரைப்புள்ளி அமையும் இடங்கள்:
கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
A.
கூற்று சரி; காரணம் சரியன்று
B.
கூற்று சரியன்று; காரணம் சரி
C.
கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
D.
கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer:
D.
கூற்று, காரணம் இரண்டும் சரி
23.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
A.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
B.
ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
C.
ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
D.
ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
Answer:
A.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
24.
பொருத்துக:
| விலங்குகள் | இளமைப்பெயர் |
|---|---|
| (a) நவ்வி | 1. சினை |
| (b) முதலை | 2. ஓந்தி |
| (c) உடும்பு | 3. பார்ப்பு |
| (d) மீன், கெண்டை | 4. மறி |
A.
4 3 2 1
B.
4 1 2 3
C.
4 2 1 3
D.
1 4 3 2
Answer:
A.
4 3 2 1
25.
புல்லின் உறுப்பைக் கண்டறிக.
A.
தளிர்
B.
முறி
C.
குழை
D.
ஓலை
Answer:
D.
ஓலை