GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
Answer: B.   பொறுமை
52.  தொடரமைக்க:
விரிந்தது - விரித்தது
Answer: D.   மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
53.  கூற்று: 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Answer: A.   கூற்று - சரி; காரணம் - சரி
54.  தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
Answer: D.   உடுக்கை
55.  திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
(a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34
(b) தெலுங்கு மொழி 2. 486
(c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06
(d) ஆங்கில மொழி 4. 411
Answer: C.   3 1 4 2
56.  பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக:
(a) நிகழ்காலப் பெயரெச்சம் 1. இல்லாத பொருள்
(b) உடன்பாட்டுப் பெயரெச்சம் 2. அறிந்த பையன்
(c) குறிப்புப் பெயரெச்சம் 3. ஓடுகிற குதிரை
(d) ஈறுகெடாத பெயரெச்சம் 4. அறியாத குழந்தை
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
57.  “ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
Answer: A.   ஓல்
58.  பொருத்துக:
(a) அணிகம் 1. காமன்
(b) அநிகம் 2. சிவிகை
(c) அனிகம் 3. படையில் ஓர் அளவு
(d) அநங்கு 4. ஊர்தி
Answer: A.   4 3 2 1
59.  கூற்று: வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும்.எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம்: இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
Answer: D.   கூற்று - சரி, காரணம் - சரி
60.  கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
Answer: C.   கூற்று - சரி; காரணம் – சரி
61.  பொருத்துக:
(a) மருப்பு 1. வழிவந்தோன்
(b) விரகு 2. தந்திரம்
(c) மருகன் 3. சிறிய அடி
(d) சீறடி 4. யானைத் தந்தம்
Answer: C.   4 2 1 3
62.  பொருத்துக:
(a) மாணி 1. பொன்
(b) மானி 2. குள்ளன்
(c) கணகம் 3. படை
(d) கனகம் 4. மாமன்
Answer: B.   2 4 3 1
63.  சேர்த்து எழுதுக.
பலா + அருமை
Answer: C.   பலாவருமை
64.  பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer: D.   கங்கா + ஓகம்
65.  "கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
Answer: D.   அடுதல்
66.  பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
Answer: B.   வீ
67.  நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் _________ என்ற பெயரால் அழைப்பர்.
Answer: D.   நீரவர்
68.  குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி ஏற்கப்பட்ட விடைத் தேர்வுகள்: A/B/C.
69.  எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Answer: A.   எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
70.  பொருத்தமானதைத் தேர்வு செய்க:
மலை
Answer: A.   வெற்பு, சிலம்பு, பொருப்பு
71.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
கலி, கழி
Answer: A.   போர், மிகுதி
72.  அரைப்புள்ளி அமையும் இடங்கள்:
கூற்று: கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்: கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
Answer: D.   கூற்று, காரணம் இரண்டும் சரி
73.  ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
Answer: A.   ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
74.  பொருத்துக:
விலங்குகள் இளமைப்பெயர்
(a) நவ்வி 1. சினை
(b) முதலை 2. ஓந்தி
(c) உடும்பு 3. பார்ப்பு
(d) மீன், கெண்டை 4. மறி
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
75.  புல்லின் உறுப்பைக் கண்டறிக.
Answer: D.   ஓலை
;