TNPSC Group 4 2025
General Tamil Questions 26 to 50
1. பிறவினைத் தொடரைக் கண்டறிக.
- A. அன்பு பாடல் பாடினான்.
- B. கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
- C. அடிகள் மறை ஓதினார்.
- D. அரசன் மாலை அணிவித்தான்.
2. எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
- A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
- B. செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
- C. தன்வினை பிறவினையாக மாறும்போது
- D. பிறவினை தன்வினையாக மாறும்போது
3. வரலாற்றியலில் 'Whitehall' - என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
- A. வெள்ளை மாளிகை - அமெரிக்கா
- B. ரஷ்ய - மாளிகை
- C. வாடிகன் - மாளிகை
- D. பிரிட்டானிய அரசு அலுவலகம்
4. இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக :
(a) Dark Fiber 1. பின்னணி நிரல்
(b) Demon 2. அடர்த்தி
(c) Darkest 3. மிகு இருள்மை
(d) Density 4. இருட்டு இழை
- A. 4 2 3 1
- B. 4 1 3 2
- C. 1 3 4 2
- D. 2 4 1 3
5. புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- A. ஃபெல்ஸ்பார் கனிமவகை
- B. கடற்கரையியக்கம்
- C. பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- D. வியாழனின் துணைக்கோள்
6. பொருத்துக :
(a) Pre-censorship 1. உடைமை
(b) Possession 2. முன் தணிக்கை
(c) Prescription 3. முனைமம்
(d) Premium 4. நீடனுபோகம்
- A. 2 1 4 3
- B. 1 2 3 4
- C. 4 3 2 1
- D. 1 4 3 2
7. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran
- A. சோம்பல் உடையவர்
- B. திறனாளர்
- C. காலம் கடத்துபவர்
- D. முன்கோபி
8. கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier
- A. வெப்ப ஆறு
- B. செவுள் இழை
- C. செவுள் வலை
- D. பனியாறு
9. ‘தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
- A. ஆசையும் அழிவும்
- B. தீயவரைத் தண்டித்தல்
- C. பகையை நீக்குதல்
- D. நட்பைப் பெருக்குதல்
10. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.
- A. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- B. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே
- C. கிட்ட நெருங்க முட்டப்பகை
- D. குந்தித் தின்றால் குன்றும் மாளும்
11. மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
(a) அடரடி படரடி 1. சித்தி அடைதல்
(b) அகட விகடம் 2. உறுதியின்மை
(c) ஈரொட்டு 3. தந்திரம்
(d) கை கூடுதல் 4. பெருங்குழப்பம்
- A. 4 1 2 3
- B. 4 3 2 1
- C. 3 4 2 1
- D. 3 2 4 1
12. மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் _______,யானை ________
- A. அலறும், கத்தும்
- B. உறுமும், பிளிறும்
- C. முழங்கும், பிளிறும்
- D. உறுமும், கத்தும்
13. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல்
(b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல்
(c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி
(d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல்
- A. 3 4 2 1
- B. 3 1 4 2
- C. 4 3 2 1
- D. 4 1 3 2
14. உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
- A. கால்சுற்று
- B. கைச்சுற்று
- C. நகச்சுற்று
- D. திருமண்சுற்று
15. பொருத்துக :
(a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு
- A. 1 3 4 2
- B. 2 3 1 4
- C. 3 2 4 1
- D. 4 1 2 3
16. "Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
- A. முன்னேறுதல்
- B. ஒப்புக்கொடுத்தல்
- C. போற்றுதல்
- D. துணை நிற்றல்
17. தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
- A. ஜப்பான் மொழி
- B. சீன மொழி
- C. போர்த்துக்கீசிய மொழி
- D. பிரெஞ்சு மொழி
18. சரியான இணையைக் கண்டறிக :
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன் - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
- A. (2) - சரி
- B. (1) - சரி
- C. (4) - சரி
- D. (3) - சரி
19. ‘பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
- A. படுக்கை
- B. உடல்
- C. குறிக்கோள்
- D. மலை
20. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ___________
- A. இரா. இளங்குமரனார்
- B. க. அப்பாத்துரையார்
- C. தேவநேயப் பாவாணர்
- D. சி. இலக்குவனார்
21. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
- A. கோலாமி
- B. பர்ஜி
- C. கொண்டா
- D. கண்ணெழுத்துகள்
22. ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
(1) சுக்கு
(2) திப்பிலி
(3) கண்டங்கத்திரி
(4) சிறுநாவற்பூ
- A. (1) மட்டும்
- B. (2) மட்டும்
- C. (3) மட்டும்
- D. (4) மட்டும்
23. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
“தூற்றின் கண் தூவிய வித்து”
- A. பழமொழி நானூறு
- B. மூதுரை
- C. நாலடியார்
- D. திரிகடுகம்
24. கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
- A. [A] சரி [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி
- C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- D. [A] தவறு [R] சரி
25. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச்
சொல்ல வல்லவர் _________
- A. கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
- B. பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
- C. முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
- D. அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்