GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

General Studies Questions 151 to 174

151.  பின்வருவனவற்றில் தவறானவை எவை?
Answer: C.   இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது
152.  'டாமின்-இ-கோஹ்' என்னும் நிலம் ஆங்கிலேயர்களால் ______________-க்கு வழங்கப்பட்டது.
Answer: A.   சந்தால் பழங்குடியினர்
153.  அமில மழை எதனால் உருவாகிறது
Answer: A.   படிம எரிபொருளை எரிப்பதால் வெளிவரும் அதிகப்படியான NO2 மற்றும் SO2 மூலம்
154.  இமயமலைப் பகுதிகளில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
Answer: A.   பாறை அடுக்குைகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியுள்ளது
155.  கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
கூற்று [A] : கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்குப் பரவுவதாகும்.
காரணம் [R] : கலாச்சார நிலத்தோற்றம் என்பது "இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளைக் குறிக்கும் கலாச்சார பண்புகள்" என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது.
Answer: B.   கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A] காரணம் [R]-க்கான சரியான விளக்கமல்ல
156.  அஸ்தாமுடி என்ற முக்கிய காயல் ______________ கடற்கரையில் காணப்படுகின்றது.
Answer: A.   மலபார் கடற்கரை
157.  இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
(i) பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.
(ii) பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.
(iii) 1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் மேற்கண்ட மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.
Answer: C.   (i) மற்றும் (ii) மட்டும்
158.  சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
1. கிசார் கான் - ஒரிசா
2. துர்காவதி - கோண்ட்வானா
3. ராணா உதய்சிங் - மேவார்
4. கன்வர் மான்சிங் - அஜ்மீர்
Answer: B.   2 மற்றும் 3 சரியானவை
159.  கி.பி. 1894 இல் காசி நகரி பிரச்சாரினி சபா ______________-ல் நிறுவப்பட்டது
Answer: C.   மெட்ராஸ்
160.  பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?
Answer: A.   முகம்மது இக்பால்
161.  கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.
காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக்கொள்கின்றன.
Answer: B.   [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
162.  கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் பௌத்த மதம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க.
1. பெளத்தம் வேதங்களின் ஆதிக்கத்தை மறுக்கிறது
2. பௌத்த போதனைகள் மறுபிறப்பு, மோட்சம், கர்மா ஆகிய பிராமணக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது .
3. பௌத்தம் நடைமுறை மற்றும் நெறிமுறையற்றது
4. பெளத்தம் கடவுளைப் படைப்பவராக ஏற்றுக் கொள்கிறது
Answer: B.   1 மற்றும் 2 சரி
163.  கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமுதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்
2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது
3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது
4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது
Answer: D.   1, 2 மற்றும் 4 சரி
164.  முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?
Answer: C.   அவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்
165.  பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?
(1) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மற்றும் தனிநபரின் கடமை – விதி 48A
(2) அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி – விதி 45
(3) மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நிதித்துறை – விதி 39
(4) தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு – விதி 44
Answer: D.   (3) மற்றும் (4) மட்டும்
166.  கூற்று [A]: சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்.
காரணம் [R]: சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.
Answer: D.   [A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல
167.  'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்
Answer: B.   இது சட்ட அமைப்பின் கருவி அல்ல
168.  'மாநில ஆளுநர்' பற்றி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது/ எவை தவறானது?
Answer: B.   மாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்
169.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு
(a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் 1. 1979
(b) ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2. 1976
(c) சம ஊதியம் 3. 1970
(d) புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல் 4. 1966
Answer: B.   4 3 2 1
170.  சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச்சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்.
Answer: B.   M.N. ராய்
171.  ஒரு நவீன மக்களாட்சி நாட்டில், குடியுரிமை என்பது
Answer: C.   நாடாளுமன்றச் சட்ட உரிமை
172.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) பிட்இந்தியச் சட்டம், 1784 1. கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல்
(b) சாசனச்சட்டம், 1813 2. முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது
(c) சாசனச்சட்டம், 1833 3. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல்
(d) இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 4. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல்
Answer: B.   3 4 2 1
173.  கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?
(i) சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்
(ii) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்
(iii) சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்
(iv) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்
Answer: B.   (ii) மட்டும்
174.  சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?
Answer: C.   லார்ட் ஹிவார்டு
;