GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  பிரித்தெழுதுக வெஞ்சுடர்
Answer: B.   வெம்மை + சுடர்
27.  ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?
Answer: C.   கொத்துப்பூ
28.  'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
Answer: D.   தொழிற்பெயர்
29.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   காஞ்சி, காதை கார், கானல்
30.  பொருத்துக:
(a) யாரும் 1. எண்ணும்மை
(b) குருகும் 2. முற்றும்மை
(c) சேர சோழர் 3. இழிவு சிறப்பும்மை
(d) அன்பும் அறனும் 4. உம்மைத்தொகை
Answer: C.   2 3 4 1
31.  "குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும்"
ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக.
Answer: A.   ஓசை
32.  மல்லிகை மாலை - என்பது எப்பெயர்?
Answer: B.   பண்பாகு பெயர்
33.  அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க.
Answer: D.   யாக்கை, யாழ், யாளி, யானை
34.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: D.   பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பௌவம்
35.  கீழ்வரும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்சொல் இல்லை?
"நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
Answer: B.   கைக்கிளை × ஒருதலைக்காமம்
36.  இலக்கணக் குறிப்பக்குப் பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக:
'உம்மைத்தொகை'
Answer: D.   நீர்க்குடம்
37.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
'பண்டத்தொகை'
Answer: C.   சேர்தேவி
38.  சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க:
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
Answer: A.   1 மற்றும் 3
39.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"பயவாக் களரனையர் கல்லாதவர்”
Answer: D.   கல்லாதவர் எதைப் போன்றவர்?
40.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
Answer: B.   உயிர் கொடுத்தோர் யார்?
41.  குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
Answer: B.   அகத்தியர்
42.  Pirate என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:
Answer: B.   கடற்கொள்ளையர்
43.  பொருத்துக:
(a) Supperless 1. துணைநிறைவு
(b) Supplant 2. தொய்வுடைய
(c) Supple 3. குப்புறத்தள்ளு
(d) Supplement 4. இரவுணவற்ற
Answer: B.   4 3 2 1
44.  'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி'
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ளபடி மிகச்சரியான விடை எது?
Answer: D.   மோனை இயைபு எதுகை மூன்றும் வந்துள்ளது
45.  ‘ஒருமை-பன்மை' பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
3. விழாவில் மக்கள் கிடையாது
4. விழாவில் மக்கள் இல்லை
Answer: C.   2 மற்றும் 4
46.  விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
Answer: C.   பண்பாகுபெயர்
47.  நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்துக
I-நூல் II-நூலாசிரியர்
(a) பாவை 1. கொத்தமங்கலம் சுப்பு
(b) தில்லானா மோகனாம்பாள் 2. மு.வ.
(c) திகம்பர சாமியார் 3. கல்கி
(d) பார்த்திபன் கனவு 4. வடுவூர் துரைசாமி ஐயங்கார்
Answer: A.   2 1 4 3
48.  பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
Answer: B.   இனிமை + அருமை + பொழில்
49.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"முந்நீர் வழக்கம் மகடூஉவே டில்லை"
Answer: A.   கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
50.  "கூடற்தமிழ்" என அடைமொழி பெற்ற நூல் எது?
Answer: B.   மதுரைக்காஞ்சி
;