TNPSC Group 2 2017 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
Answer:
B.
தமிழ், வடமொழி, இந்துத்தானி
27.
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்
Answer:
D.
வள்ளலார்
28.
"இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer:
C.
மணிமேகலை
29.
"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
Answer:
B.
திருநாவுக்கரசர்
30.
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
Answer:
C.
திருமந்திரம்
31.
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே'- என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
Answer:
A.
மதுரைக் கணக்காயனார் மகனர் நக்கீரனார்
32.
உலகம் முழுவதையும் ஆளக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
Answer:
B.
காலம் வரும் வரை
33.
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
Answer:
A.
உமறுப்புலவர்
34.
பொருத்துக:
| (a) காகம் | 1. கூவும் |
| (b) குதிரை | 2. கரையும் |
| (c) சிங்கம் | 3. கனைக்கும் |
| (d) குயில் | 4. முழங்கும் |
Answer:
D.
2 3 4 1
35.
'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்
Answer:
A.
திருமூலர்
36.
"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" எனக் கூறியவர் யார்?
Answer:
C.
பெரியார்
37.
இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச் சாலை' என்று கூறியவர்
Answer:
C.
ச.அகத்தியலிங்கம்
38.
'நவ்வி' - இச்சொல்லின் பொருளை எழுதுக.
Answer:
A.
மான்
39.
"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை” எனக் கூறியவர்
Answer:
C.
பசும்பொன் முத்துராமலிங்கர்
40.
குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது
Answer:
C.
குளோரோஃபுளுரோ கார்பன்
41.
'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்' - எனக் கூறியவர்
Answer:
B.
கால்டுவெல்
42.
'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' இக்கடிதப் பகுதி யாருடையது?
Answer:
B.
மு. வரதராசனார்
43.
"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்".
Answer:
C.
முத்துராமலிங்கர்
44.
காமராசரின் அரசியல் குரு
Answer:
D.
சத்திய மூர்த்தி
45.
"பாவலரேறு பெருஞ்சித்திரனார்" எழுதாத நூல் எது?
Answer:
D.
குறிஞ்சித் திட்டு
46.
தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
Answer:
B.
கெல்லட்
47.
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்” - எனக் கூறியவர்
Answer:
A.
இராணி மங்கம்மாள்
48.
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?
Answer:
C.
மு. வரதராசனார்
49.
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer:
B.
மணிமேகலை
50.
பொருத்துக:
| (a) திருவரங்கம் | 1. சிதம்பரம் |
| (b) திருச்சிற்றம்பலம் | 2. ஸ்ரீரங்கம் |
| (c) திருமறைக்காடு | 3. மீனாட்சி |
| (d) அங்கயற்கண்ணி | 4. வேதாரணியம் |
Answer:
B.
2 1 4 3