TNPSC Group 4 2011
General Tamil Questions 76 to 100
1.
'உறுபடை' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.
வேற்றுமைத்தொடர்
B.
பெயரெச்சத் தொடர்
C.
வினையெச்சத் தொடர்
D.
உரிச்சொற்றொடர்.
Answer:
D.
உரிச்சொற்றொடர்.
2.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"அழகன் குழல் ஊதினான்"
"அழகன் குழல் ஊதினான்"
A.
அழகன் எதை ஊதினான் ?
B.
அழகன் ஊதிய பொருள் எது ?
C.
குழலின் பயன்பாடு யாது ?
D.
அழகன் இசைத்தது எது ?
Answer:
A.
அழகன் எதை ஊதினான் ?
3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
A.
சேரமான் இரும்பொறையின் நண்பர் யார் ?
B.
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
C.
இரும்பொறை எந்த நாட்டை ஆண்ட மன்னன் ?
D.
பொய்கையார் யார் ?
Answer:
B.
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
4.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“உள்ளம் என்பது மனம்"
“உள்ளம் என்பது மனம்"
A.
உள்ளம் என்பது எது ?
B.
மனமே உள்ளம் என்பது சரியா ?
C.
உள்ளத்தின் சிறப்பு யாது ?
D.
உள்ளம் மனம் இரண்டும் ஒன்றா ?
Answer:
A.
உள்ளம் என்பது எது ?
5.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
A.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை ?
B.
குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா ?
C.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
D.
குண்டலகேசி பெருங்காப்பியமா ?
Answer:
C.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
6.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
A.
கலம்பகம் சிற்றிலக்கியமா ?
B.
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை ?
C.
பல்லவ மன்னன் யார் ?
D.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
Answer:
D.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
7.
"புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
செய்தி வாக்கியம்
B.
அயற்கூற்று வாக்கியம்
C.
நேர்க்கூற்று வாக்கியம்
D.
தொடர்வாக்கியம்.
Answer:
C.
நேர்க்கூற்று வாக்கியம்
8.
"மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
நேர்க்கூற்று
B.
கலவை வாக்கியம்
C.
செய்தி வாக்கியம்
D.
அயற்கூற்று வாக்கியம்.
Answer:
D.
அயற்கூற்று வாக்கியம்.
9.
"செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
செய்வினை வாக்கியம்
B.
உடன்பாட்டு வாக்கியம்
C.
எதிர்மறை வாக்கியம்
D.
செயப்பாட்டு வினை வாக்கியம்.
Answer:
D.
செயப்பாட்டு வினை வாக்கியம்.
10.
"தூய்மையுடன் இரு. தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக..
A.
செய்திவாக்கியம்
B.
உடன்பாட்டு வாக்கியம்
C.
எதிர்மறை வாக்கியம்
D.
விழைவு வாக்கியம்.
Answer:
D.
விழைவு வாக்கியம்.
11.
"ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
செய்தி வாக்கியம்
B.
எதிர்மறை வாக்கியம்
C.
செயப்பாட்டு வினைவாக்கியம்
D.
செய்வினை வாக்கியம்.
Answer:
D.
செய்வினை வாக்கியம்.
12.
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.
கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
B.
கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது
C.
கம்பர் இராமாயணத்தை இயற்றுவித்தார்
D.
இராமாயணம் கம்பர் இயற்றியது.
Answer:
A.
கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
13.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.
மாதவி நடனம் கற்பித்தாள்
B.
மாதவி நடனம் கற்றாள்
C.
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது
D.
நடனத்தை மாதவி கற்றாள்.
Answer:
A.
மாதவி நடனம் கற்பித்தாள்
14.
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக :
A.
நாடகம் மக்கள் பார்த்தது
B.
மக்கள் நாடகம் பார்த்தனர்
C.
மக்களால் நாடகம் பார்க்கப்பட்டது
D.
நாடகத்தை மக்களால் பார்க்கப்பட்டது.
Answer:
B.
மக்கள் நாடகம் பார்த்தனர்
15.
செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக
A.
ஆசிரியர் என்னைப் பாராட்டினார்
B.
நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
C.
ஆசிரியர் பாராட்டினார் என்னை
D.
என்னை ஆசிரியர் பாராட்டினார்.
Answer:
B.
நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
16.
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.
சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது
B.
இயற்றினார் சீறாப்புராணத்தை உமறுப்புலவர்
C.
உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
D.
சீறாப்புராணம் உமறுப்புலவர் இயற்றுவித்தார்.
Answer:
C.
உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
17.
“பசுத்தோல் போர்த்திய புலி போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான
பொருளைத் தேர்ந்தெடுக்க :
இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான
பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.
போற்றுதல்
B.
ஏமாற்றுதல்
C.
வணங்குதல்
D.
அஞ்சுதல்.
Answer:
B.
ஏமாற்றுதல்
18.
"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.
நம்பகத்தன்மை
B.
அவசியமாக்குதல்
C.
கொடூரத்தன்மை
D.
அவசரமாக்குதல்.
Answer:
C.
கொடூரத்தன்மை
19.
"வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.
அதிக இன்பம்
B.
மேலும் மேலும் துன்பம்
C.
மகிழ்ச்சி
D.
வெறுப்பு.
Answer:
B.
மேலும் மேலும் துன்பம்
20.
“இருதலைக் கொள்ளி எறும்பைப் போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
A.
சலிப்பு
B.
தவிப்பு
C.
இழப்பு
D.
மறுப்பு.
Answer:
B.
தவிப்பு
21.
“அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.
நகைச்சுவை
B.
ஏமாற்றம்
C.
நம்பிக்கை
D.
வெற்றி.
Answer:
B.
ஏமாற்றம்
22.
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
A.
தேவரும் -- தெய்வ
B.
தேவரும் -- பிழைத்திலர்
C.
ஏவரும் -- அறமும்
D.
தேவரும் -- ஏவரும்
Answer:
D.
தேவரும் -- ஏவரும்
23.
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
A.
கள்ளாமை -- கடிய
B.
கள்ளாமை -- வேண்டும்
C.
கள்ளாமை -- வருதலால்
D.
வேண்டும் -- வருதலால்.
Answer:
A.
கள்ளாமை -- கடிய
24.
ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) - சீர்மோனையை எடுத்தெழுதுக.
A.
ஆதிரை -- ஆங்கது
B.
ஆதிரை -- நல்லாள்
C.
நல்லாள் -- தான் கேட்டு
D.
ஆதிரை -- தான் கேட்டு.
Answer:
A.
ஆதிரை -- ஆங்கது
25.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
A.
சினமென்னும் -- சேர்ந்தாரைக்
B.
சினமென்னும் -- கொல்லி
C.
சினமென்னும் -- இனமென்னும்
D.
சேர்ந்தாரைக் -- கொல்லி.
Answer:
C.
சினமென்னும் -- இனமென்னும்