TNPSC Group 4 2024
General Tamil Questions 1 to 25
1.
'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
A.
வந்தாள்
B.
வந்த
C.
வந்து
D.
வந்தவர்
Answer:
A.
வந்தாள்
2.
இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
A.
வினைமுற்றுத் தொடர்
B.
எழுவாய்த் தொடர்
C.
பெயரெச்சத் தொடர்
D.
வினையெச்சத் தொடர்
Answer:
B.
எழுவாய்த் தொடர்
3.
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.
A.
கூழை எதுகை
B.
கீழ்க்கதுவாய் எதுகை
C.
ஒரூஉ எதுகை
D.
மேற்கதுவாய் எதுகை
Answer:
D.
மேற்கதுவாய் எதுகை
4.
இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
நனந்தலை உலகம்
A.
அகன்ற உலகம்
B.
நீர் சூழ் உலகம்
C.
மலை சூழ் உலகம்
D.
மழை தரும் உலகம்
Answer:
A.
அகன்ற உலகம்
5.
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
மரத்தை இலை காக்கும்
A.
மானத்தை மழை காக்கும்
B.
பயிரை குணம் காக்கும்
C.
மானத்தைப் பணம் காக்கும்
D.
உயிரைச் சொல் காக்கும்
Answer:
C.
மானத்தைப் பணம் காக்கும்
6.
மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
A.
கண் - பண்ணோடு
B.
நந்தவனம் - நற்றமிழ்
C.
பண்ணோடு - வந்தாயோ
D.
திறந்து - நற்றமிழ்
Answer:
B.
நந்தவனம் - நற்றமிழ்
7.
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
A.
பயனற்ற செயல்
B.
தற்செயல் நிகழ்வு
C.
தடையின்றி மிகுதியாக
D.
ஒற்றுமையின்மை
Answer:
D.
ஒற்றுமையின்மை
8.
விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
A.
தல புராணங்கள் என்றால் என்ன?
B.
தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
C.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
D.
தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
Answer:
D.
தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
9.
செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
A.
ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
B.
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C.
பண்புத் தொகை
D.
வினைத் தொகை
Answer:
C.
பண்புத் தொகை
10.
'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
A.
மாறனலங்காரம்
B.
தண்டியலங்காரம்
C.
திவாகர நிகண்டு
D.
பிங்கல நிகண்டு
Answer:
B.
தண்டியலங்காரம்
11.
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
A.
வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
B.
இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
C.
இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
D.
வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
Answer:
B.
இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
12.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
A.
கூரை வேய்ந்தனர்
B.
கூரை முடைந்தனர்
C.
கூரை செய்தனர்
D.
கூரை வனைந்தார்
Answer:
A.
கூரை வேய்ந்தனர்
13.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A.
செப்பல் ஓசை
B.
துள்ளல் ஓசை
C.
அகவல் ஓசை
D.
ஓங்கல் ஓசை
Answer:
D.
ஓங்கல் ஓசை
14.
எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்
ஊக்கம்
A.
ஆர்வம்
B.
உற்சாகம்
C.
சோர்வு
D.
தெளிவு
Answer:
C.
சோர்வு
15.
பிரித்து எழுதுக :
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
A.
நீளு + உழைப்பு
B.
நீண் + உழைப்பு
C.
நீண்ட + உழைப்பு
D.
நீள் + உழைப்பு
Answer:
D.
நீள் + உழைப்பு
16.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
A.
இணை மோனை
B.
ஒரூஉ மோனை
C.
பொழிப்பு மோனை
D.
கூழை மோனை
Answer:
C.
பொழிப்பு மோனை
17.
எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
பூக்களைப் பறிக்காதீர்
A.
செய்தி வாக்கியம்
B.
கட்டளை வாக்கியம்
C.
வினா வாக்கியம்
D.
பிறவினை வாக்கியம்
Answer:
B.
கட்டளை வாக்கியம்
18.
இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
A.
பண்புத் தொகை
B.
வினைத் தொகை
C.
வினையாலணையும் பெயர்
D.
வினைமுற்று
Answer:
B.
வினைத் தொகை
19.
மல்லிகை சூடினாள் என்பது
A.
பண்பாகு பெயர்
B.
தொழிலாகு பெயர்
C.
பொருளாகு பெயர்
D.
காலவாகு பெயர்
Answer:
C.
பொருளாகு பெயர்
20.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
A.
வலிமையற்றவர்
B.
கல்லாதவர்
C.
ஒழுக்கமற்றவர்
D.
அன்பில்லாதவர்
Answer:
B.
கல்லாதவர்
21.
திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
A.
தீக்காயம் பட்டவர்
B.
தீயினால் சுட்டவர்
C.
பொருளைக் காக்காதவர்
D.
நாவைக் காக்காதவர்
Answer:
D.
நாவைக் காக்காதவர்
22.
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
A.
உவமையணி
B.
பிறிதுமொழிதல் அணி
C.
வேற்றுமையணி
D.
தன்மையணி
Answer:
A.
உவமையணி
23.
கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
A.
வெற்றி வேற்கை
B.
அருங்கலச்செப்பு
C.
நன்னெறி
D.
ஞானக்குறள்
Answer:
D.
ஞானக்குறள்
24.
கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
A.
ஆறாம் வேற்றுமை தொகை
B.
இரண்டாம் வேற்றுமை தொகை
C.
உவமைத் தொகை
D.
பண்புத் தொகை
Answer:
B.
இரண்டாம் வேற்றுமை தொகை
25.
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
A.
திரு. கால்டுவெல்
B.
திரு. ஜி.யு. போப்
C.
திரு. வீரமாமுனிவர்
D.
திரு. சீகன்பால்கு
Answer:
B.
திரு. ஜி.யு. போப்