TNPSC Group 4 2024
General Tamil Questions 1 to 25
1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
- A. வந்தாள்
- B. வந்த
- C. வந்து
- D. வந்தவர்
2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
- A. வினைமுற்றுத் தொடர்
- B. எழுவாய்த் தொடர்
- C. பெயரெச்சத் தொடர்
- D. வினையெச்சத் தொடர்
3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.
- A. கூழை எதுகை
- B. கீழ்க்கதுவாய் எதுகை
- C. ஒரூஉ எதுகை
- D. மேற்கதுவாய் எதுகை
4. இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
- A. அகன்ற உலகம்
- B. நீர் சூழ் உலகம்
- C. மலை சூழ் உலகம்
- D. மழை தரும் உலகம்
5. பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
- A. மானத்தை மழை காக்கும்
- B. பயிரை குணம் காக்கும்
- C. மானத்தைப் பணம் காக்கும்
- D. உயிரைச் சொல் காக்கும்
6. மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
- A. கண் - பண்ணோடு
- B. நந்தவனம் - நற்றமிழ்
- C. பண்ணோடு - வந்தாயோ
- D. திறந்து - நற்றமிழ்
7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
- A. பயனற்ற செயல்
- B. தற்செயல் நிகழ்வு
- C. தடையின்றி மிகுதியாக
- D. ஒற்றுமையின்மை
8. விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
- A. தல புராணங்கள் என்றால் என்ன?
- B. தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
- C. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
- D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
9. செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
- A. ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
- B. இரண்டாம் வேற்றுமைத் தொகை
- C. பண்புத் தொகை
- D. வினைத் தொகை
10. 'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
- A. மாறனலங்காரம்
- B. தண்டியலங்காரம்
- C. திவாகர நிகண்டு
- D. பிங்கல நிகண்டு
11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
- A. வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
- B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
- C. இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
- D. வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
- A. கூரை வேய்ந்தனர்
- B. கூரை முடைந்தனர்
- C. கூரை செய்தனர்
- D. கூரை வனைந்தார்
13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- A. செப்பல் ஓசை
- B. துள்ளல் ஓசை
- C. அகவல் ஓசை
- D. ஓங்கல் ஓசை
14. எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்
- A. ஆர்வம்
- B. உற்சாகம்
- C. சோர்வு
- D. தெளிவு
15. பிரித்து எழுதுக :
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
- A. நீளு + உழைப்பு
- B. நீண் + உழைப்பு
- C. நீண்ட + உழைப்பு
- D. நீள் + உழைப்பு
16. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
- A. இணை மோனை
- B. ஒரூஉ மோனை
- C. பொழிப்பு மோனை
- D. கூழை மோனை
17. எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
- A. செய்தி வாக்கியம்
- B. கட்டளை வாக்கியம்
- C. வினா வாக்கியம்
- D. பிறவினை வாக்கியம்
18. இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
- A. பண்புத் தொகை
- B. வினைத் தொகை
- C. வினையாலணையும் பெயர்
- D. வினைமுற்று
19. மல்லிகை சூடினாள் என்பது
- A. பண்பாகு பெயர்
- B. தொழிலாகு பெயர்
- C. பொருளாகு பெயர்
- D. காலவாகு பெயர்
20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
- A. வலிமையற்றவர்
- B. கல்லாதவர்
- C. ஒழுக்கமற்றவர்
- D. அன்பில்லாதவர்
21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
- A. தீக்காயம் பட்டவர்
- B. தீயினால் சுட்டவர்
- C. பொருளைக் காக்காதவர்
- D. நாவைக் காக்காதவர்
22. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
- A. உவமையணி
- B. பிறிதுமொழிதல் அணி
- C. வேற்றுமையணி
- D. தன்மையணி
23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
- A. வெற்றி வேற்கை
- B. அருங்கலச்செப்பு
- C. நன்னெறி
- D. ஞானக்குறள்
24. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
- A. ஆறாம் வேற்றுமை தொகை
- B. இரண்டாம் வேற்றுமை தொகை
- C. உவமைத் தொகை
- D. பண்புத் தொகை
25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. திரு. கால்டுவெல்
- B. திரு. ஜி.யு. போப்
- C. திரு. வீரமாமுனிவர்
- D. திரு. சீகன்பால்கு