GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024

General Tamil Questions 26 to 50

1.  "வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
A.   அகநானூறு
B.   புறநானூறு
C.   ஐங்குறுநூறு
D.   குறுந்தொகை
Answer: B.  புறநானூறு
2.  புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
A.   டாக்டர். கால்டுவெல்
B.   ஜி.யு. போப்
C.   பெர்சிவல் பாதிரியார்
D.   ஜார்ஜ் எல். ஹார்ட்
Answer: D.  ஜார்ஜ் எல். ஹார்ட்
3.  கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
A.   அருளப்பன்
B.   யோவான்
C.   சந்தாசாகிப்
D.   சன்னியாசி
Answer: A.  அருளப்பன்
4.  தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
A.   இயேசு
B.   மரியாள்
C.   யூதாஸ்
D.   வளன்
Answer: D.  வளன்
5.  முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
A.   தொண்டை நாடு
B.   சேர நாடு
C.   பாண்டிய நாடு
D.   சோழ நாடு
Answer: D.  சோழ நாடு
6.  "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
A.   தூது
B.   குறவஞ்சி
C.   கலம்பகம்
D.   பள்ளு
Answer: D.  பள்ளு
7.  சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
A.   பள்ளு
B.   தூது
C.   குறவஞ்சி
D.   கலம்பகம்
Answer: B.  தூது
8.  சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.   குடக்கூத்து
B.   தெருக்கூத்து
C.   சக்திக்கரகம்
D.   உடுக்கை ஆட்டம்
Answer: A.  குடக்கூத்து
9.  'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்
A.   அகத்தியர்
B.   திருமூலர்
C.   கடுவெளிச் சித்தர்
D.   பாரதியார்
Answer: B.  திருமூலர்
10.  வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
A.   பாம்பாட்டிச் சித்தர்
B.   குதம்பைச் சித்தர்
C.   அழுகுணிச் சித்தர்
D.   கடுவெளிச் சித்தர்
Answer: D.  கடுவெளிச் சித்தர்
11.  'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
A.   உ.வே.சாமிநாதர்
B.   மு.வரதராசனார்
C.   வ.சுப. மாணிக்கனார்
D.   தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Answer: A.  உ.வே.சாமிநாதர்
12.  காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
A.   மு.வரதராசனார்
B.   ம.பொ .சிவஞானம்
C.   திரு.வி. கலியாணசுந்தரனார்
D.   சி.என். அண்ணாதுரை
Answer: C.  திரு.வி. கலியாணசுந்தரனார்
13.  தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
A.   அகத்தியலிங்கம்
B.   ஹோக்கன்
C.   கால்டுவெல்
D.   பிரான்ஸிஸ் எல்லிஸ்
Answer: C.  கால்டுவெல்
14.  'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A.   1965
B.   1969
C.   1990
D.   1996
Answer: B.  1969
15.  "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
A.   சங்கரதாசு சுவாமிகள்
B.   ந.முத்துசாமி
C.   பம்மல் சம்பந்த முதலியார்
D.   கோமல் சுவாமிநாதன்
Answer: B.  ந.முத்துசாமி
16.  ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
A.   அண்ணா நூற்றாண்டு நூலகம்
B.   திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
C.   கன்னிமாரா நூலகம்
D.   தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
Answer: D.  தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
17.  மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
A.   கீழ்க்காய்நெல்லி
B.   கீழாநெல்லி
C.   கீழ்வாய்நெல்லி
D.   இவை மூன்றும்
Answer: D.  இவை மூன்றும்
18.  உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
A.   அலைவாய்க் கரையில்
B.   கரிப்பு மணிகள்
C.   ஒரு கடலோர கிராமம்
D.   சேற்றில் மனிதர்கள்
Answer: B.  கரிப்பு மணிகள்
19.  'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
A.   மா. இராமலிங்கம்
B.   ப. சிங்காரம்
C.   ஜெயகாந்தன்
D.   பிச்சாமூர்த்தி
Answer: B.  ப. சிங்காரம்
20.  முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
A.   ப. ஜீவானந்தம்
B.   திரு. வி. கலியாணசுந்தரனார்
C.   காமராசர்
D.   அறிஞர். அண்ணா
Answer: B.  திரு. வி. கலியாணசுந்தரனார்
21.  உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
A.   விளக்கப்படம்
B.   கருத்துப்படம்
C.   செய்திப்படம்
D.   பிரசாரப்படம்
Answer: C.  செய்திப்படம்
22.  தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
A.   பி.எஸ்.ராமையா
B.   கு.ப.ராஜகோபாலன்
C.   கல்கி
D.   புதுமைப்பித்தன்
Answer: D.  புதுமைப்பித்தன்
23.  தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
A.   ந.முத்துசாமி
B.   கலாப்ரியா
C.   சுரதா
D.   பாவாணர்
Answer: A.  ந.முத்துசாமி
24.  காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
A.   பகவத் கீதை
B.   அன்பு உள்ளம்
C.   அரிச்சந்திர நாடகம்
D.   சிரவண பிதுர்பத்தி
Answer: D.  சிரவண பிதுர்பத்தி
25.  பொருத்துக:
(a) அலெக்சாண்டர் பெயின் 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்
A.   1 3 4 2
B.   1 4 2 3
C.   1 3 2 4
D.   2 4 1 3
Answer: A.  1 3 4 2
;