GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024 – General Tamil Questions 26 to 50

1. "வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்

  • A. அகநானூறு
  • B. புறநானூறு
  • C. ஐங்குறுநூறு
  • D. குறுந்தொகை
Answer: B. புறநானூறு

2. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்

  • A. டாக்டர். கால்டுவெல்
  • B. ஜி.யு. போப்
  • C. பெர்சிவல் பாதிரியார்
  • D. ஜார்ஜ் எல். ஹார்ட்
Answer: D. ஜார்ஜ் எல். ஹார்ட்

3. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

  • A. அருளப்பன்
  • B. யோவான்
  • C. சந்தாசாகிப்
  • D. சன்னியாசி
Answer: A. அருளப்பன்

4. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • A. இயேசு
  • B. மரியாள்
  • C. யூதாஸ்
  • D. வளன்
Answer: D. வளன்

5. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு

  • A. தொண்டை நாடு
  • B. சேர நாடு
  • C. பாண்டிய நாடு
  • D. சோழ நாடு
Answer: D. சோழ நாடு

6. "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்

  • A. தூது
  • B. குறவஞ்சி
  • C. கலம்பகம்
  • D. பள்ளு
Answer: D. பள்ளு

7. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது

  • A. பள்ளு
  • B. தூது
  • C. குறவஞ்சி
  • D. கலம்பகம்
Answer: B. தூது

8. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • A. குடக்கூத்து
  • B. தெருக்கூத்து
  • C. சக்திக்கரகம்
  • D. உடுக்கை ஆட்டம்
Answer: A. குடக்கூத்து

9. 'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்

  • A. அகத்தியர்
  • B. திருமூலர்
  • C. கடுவெளிச் சித்தர்
  • D. பாரதியார்
Answer: B. திருமூலர்

10. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்

  • A. பாம்பாட்டிச் சித்தர்
  • B. குதம்பைச் சித்தர்
  • C. அழுகுணிச் சித்தர்
  • D. கடுவெளிச் சித்தர்
Answer: D. கடுவெளிச் சித்தர்

11. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.

  • A. உ.வே.சாமிநாதர்
  • B. மு.வரதராசனார்
  • C. வ.சுப. மாணிக்கனார்
  • D. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Answer: A. உ.வே.சாமிநாதர்

12. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.

  • A. மு.வரதராசனார்
  • B. ம.பொ .சிவஞானம்
  • C. திரு.வி. கலியாணசுந்தரனார்
  • D. சி.என். அண்ணாதுரை
Answer: C. திரு.வி. கலியாணசுந்தரனார்

13. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்

  • A. அகத்தியலிங்கம்
  • B. ஹோக்கன்
  • C. கால்டுவெல்
  • D. பிரான்ஸிஸ் எல்லிஸ்
Answer: C. கால்டுவெல்

14. 'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

  • A. 1965
  • B. 1969
  • C. 1990
  • D. 1996
Answer: B. 1969

15. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்

  • A. சங்கரதாசு சுவாமிகள்
  • B. ந.முத்துசாமி
  • C. பம்மல் சம்பந்த முதலியார்
  • D. கோமல் சுவாமிநாதன்
Answer: B. ந.முத்துசாமி

16. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது

  • A. அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • B. திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
  • C. கன்னிமாரா நூலகம்
  • D. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
Answer: D. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

17. மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி

  • A. கீழ்க்காய்நெல்லி
  • B. கீழாநெல்லி
  • C. கீழ்வாய்நெல்லி
  • D. இவை மூன்றும்
Answer: D. இவை மூன்றும்

18. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.

  • A. அலைவாய்க் கரையில்
  • B. கரிப்பு மணிகள்
  • C. ஒரு கடலோர கிராமம்
  • D. சேற்றில் மனிதர்கள்
Answer: B. கரிப்பு மணிகள்

19. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்

  • A. மா. இராமலிங்கம்
  • B. ப. சிங்காரம்
  • C. ஜெயகாந்தன்
  • D. பிச்சாமூர்த்தி
Answer: B. ப. சிங்காரம்

20. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?

  • A. ப. ஜீவானந்தம்
  • B. திரு. வி. கலியாணசுந்தரனார்
  • C. காமராசர்
  • D. அறிஞர். அண்ணா
Answer: B. திரு. வி. கலியாணசுந்தரனார்

21. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்

  • A. விளக்கப்படம்
  • B. கருத்துப்படம்
  • C. செய்திப்படம்
  • D. பிரசாரப்படம்
Answer: C. செய்திப்படம்

22. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்

  • A. பி.எஸ்.ராமையா
  • B. கு.ப.ராஜகோபாலன்
  • C. கல்கி
  • D. புதுமைப்பித்தன்
Answer: D. புதுமைப்பித்தன்

23. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்

  • A. ந.முத்துசாமி
  • B. கலாப்ரியா
  • C. சுரதா
  • D. பாவாணர்
Answer: A. ந.முத்துசாமி

24. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?

  • A. பகவத் கீதை
  • B. அன்பு உள்ளம்
  • C. அரிச்சந்திர நாடகம்
  • D. சிரவண பிதுர்பத்தி
Answer: D. சிரவண பிதுர்பத்தி

25. பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்

  • A. 1 3 4 2
  • B. 1 4 2 3
  • C. 1 3 2 4
  • D. 2 4 1 3
Answer: A. 1 3 4 2
;