TNPSC Group 4 2024
General Tamil Questions 26 to 50
1. "வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
- A. அகநானூறு
- B. புறநானூறு
- C. ஐங்குறுநூறு
- D. குறுந்தொகை
2. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
- A. டாக்டர். கால்டுவெல்
- B. ஜி.யு. போப்
- C. பெர்சிவல் பாதிரியார்
- D. ஜார்ஜ் எல். ஹார்ட்
3. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
- A. அருளப்பன்
- B. யோவான்
- C. சந்தாசாகிப்
- D. சன்னியாசி
4. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
- A. இயேசு
- B. மரியாள்
- C. யூதாஸ்
- D. வளன்
5. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
- A. தொண்டை நாடு
- B. சேர நாடு
- C. பாண்டிய நாடு
- D. சோழ நாடு
6. "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
- A. தூது
- B. குறவஞ்சி
- C. கலம்பகம்
- D. பள்ளு
7. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
- A. பள்ளு
- B. தூது
- C. குறவஞ்சி
- D. கலம்பகம்
8. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. குடக்கூத்து
- B. தெருக்கூத்து
- C. சக்திக்கரகம்
- D. உடுக்கை ஆட்டம்
9. 'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்
- A. அகத்தியர்
- B. திருமூலர்
- C. கடுவெளிச் சித்தர்
- D. பாரதியார்
10. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
- A. பாம்பாட்டிச் சித்தர்
- B. குதம்பைச் சித்தர்
- C. அழுகுணிச் சித்தர்
- D. கடுவெளிச் சித்தர்
11. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
- A. உ.வே.சாமிநாதர்
- B. மு.வரதராசனார்
- C. வ.சுப. மாணிக்கனார்
- D. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
12. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
- A. மு.வரதராசனார்
- B. ம.பொ .சிவஞானம்
- C. திரு.வி. கலியாணசுந்தரனார்
- D. சி.என். அண்ணாதுரை
13. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
- A. அகத்தியலிங்கம்
- B. ஹோக்கன்
- C. கால்டுவெல்
- D. பிரான்ஸிஸ் எல்லிஸ்
14. 'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
- A. 1965
- B. 1969
- C. 1990
- D. 1996
15. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
- A. சங்கரதாசு சுவாமிகள்
- B. ந.முத்துசாமி
- C. பம்மல் சம்பந்த முதலியார்
- D. கோமல் சுவாமிநாதன்
16. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
- A. அண்ணா நூற்றாண்டு நூலகம்
- B. திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- C. கன்னிமாரா நூலகம்
- D. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
17. மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
- A. கீழ்க்காய்நெல்லி
- B. கீழாநெல்லி
- C. கீழ்வாய்நெல்லி
- D. இவை மூன்றும்
18. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
- A. அலைவாய்க் கரையில்
- B. கரிப்பு மணிகள்
- C. ஒரு கடலோர கிராமம்
- D. சேற்றில் மனிதர்கள்
19. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
- A. மா. இராமலிங்கம்
- B. ப. சிங்காரம்
- C. ஜெயகாந்தன்
- D. பிச்சாமூர்த்தி
20. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
- A. ப. ஜீவானந்தம்
- B. திரு. வி. கலியாணசுந்தரனார்
- C. காமராசர்
- D. அறிஞர். அண்ணா
21. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
- A. விளக்கப்படம்
- B. கருத்துப்படம்
- C. செய்திப்படம்
- D. பிரசாரப்படம்
22. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
- A. பி.எஸ்.ராமையா
- B. கு.ப.ராஜகோபாலன்
- C. கல்கி
- D. புதுமைப்பித்தன்
23. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
- A. ந.முத்துசாமி
- B. கலாப்ரியா
- C. சுரதா
- D. பாவாணர்
24. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
- A. பகவத் கீதை
- B. அன்பு உள்ளம்
- C. அரிச்சந்திர நாடகம்
- D. சிரவண பிதுர்பத்தி
25. பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்
- A. 1 3 4 2
- B. 1 4 2 3
- C. 1 3 2 4
- D. 2 4 1 3