GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Studies Questions 1 to 25

1.  லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?
A.   2 மீ, குழி
B.   2 மீ, குவி
C.   50 செமீ, குழி
D.   50 செமீ, குவி
Answer: A.  2 மீ, குழி
2.  வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி:

வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது ஒரு செயலில்
A.   கடத்தல்
B.   சலனம்
C.   உட்கவர்தல்
D.   கதிர்வீசல்
Answer: C.  உட்கவர்தல்
3.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க
(b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
(c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு
(d) பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக
A.   3 4 2 1
B.   2 3 4 1
C.   2 1 4 3
D.   3 4 1 2
Answer: C.  2 1 4 3
4.  சரியான கூற்றை தேர்வு செய்க:
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.
A.   I தவறு II சரி
B.   I சரி II தவறு
C.   I மற்றும் II தவறு
D.   I மற்றும் II சரி
Answer: D.  I மற்றும் II சரி
5.  சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
A.   Dr. அயன் வில்மட்
B.   Dr. கொரானா
C.   Dr. சந்திரசேகர்
D.   Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
Answer: D.  Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
6.  பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக:
(i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
(ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
(iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
(iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
A.   (ii) and (iv)
B.   (i) and (ii)
C.   (i) and (iii)
D.   (iii) and (iv)
Answer: D.  (iii) and (iv)
7.  எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?
A.   DNA
B.   RNA
C.   குரோமோசோம்
D.   ஜீன்
Answer: B.  RNA
8.  உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
A.   மாநிலத் தேர்தல் ஆணையம்
B.   மத்திய தேர்தல் ஆணையம்
C.   மாவட்ட தேர்தல் வாரியம்
D.   பார்வையாளர்கள்
Answer: A.  மாநிலத் தேர்தல் ஆணையம்
9.  எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
A.   ஜவஹர்லால் நேரு
B.   இந்திரா காந்தி
C.   ஐ.கே.குஜ்ரால்
D.   ராஜீவ் காந்தி
Answer: C.  ஐ.கே.குஜ்ரால்
10.  பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
A.   2002-2007
B.   2007-2012
C.   1997-2002
D.   1992-1997
Answer: A.  2002-2007
11.  இந்திய அரசியலமைப்பின் ____________ சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.
A.   விதி 22
B.   விதி 23
C.   விதி 24
D.   விதி 25
Answer: A.  விதி 22
12.  அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
A.   பகுதி II
B.   பகுதி III
C.   பகுதி I
D.   பகுதி IV
Answer: B.  பகுதி III
13.  'உலக வரலாற்றின் சுருக்கங்கள்' என்ற நூலை எழுதியவர்
A.   மகாத்மா காந்தி
B.   இந்திரா காந்தி
C.   ஜவஹர்லால் நேரு
D.   ராஜீவ் காந்தி
Answer: C.  ஜவஹர்லால் நேரு
14.  42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A.   1947
B.   1976
C.   1967
D.   1958
Answer: B.  1976
15.  நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.   1965
B.   1968
C.   1970
D.   1971
Answer: B.  1968
16.  எப்.இ.ஆர்.எ. என்பது ____________ பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.
A.   அயல்நாட்டு
B.   காடு
C.   நிதி
D.   முதலீடு
Answer: A.  அயல்நாட்டு
17.  இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A.   1947
B.   1951
C.   1956
D.   1961
Answer: B.  1951
18.  கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது:
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது.
A.   I மட்டும்
B.   II மட்டும்
C.   III மட்டும்
D.   III மற்றும் IV
Answer: A.  I மட்டும்
19.  மக்கட்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள்
A.   நிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
B.   அதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
C.   நிலத்தோற்றம், காலநிலை
D.   வேலைவாய்ப்பு, சத்துணவு
Answer: C.  நிலத்தோற்றம், காலநிலை
20.  சரியான விடையை தேர்ந்தெடு:
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை "மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியை பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
A.   I மற்றும் III
B.   II மற்றும் III
C.   I மற்றும் II
D.   III மட்டும்
Answer: C.  I மற்றும் II
21.  "இந்தியக் கிளி" என அழைக்கப்பட்ட கவிஞர் ____________ ஆவார்.
A.   அல் பரூனி
B.   கைகுபாத்
C.   அமிர்குஸ்ரு
D.   பால்பன்
Answer: C.  அமிர்குஸ்ரு
22.  சிவாஜி பிறந்தது
A.   சதாரா
B.   பீஜப்பூர்
C.   ஷிவ்னேர்
D.   பூனா
Answer: C.  ஷிவ்னேர்
23.  மொழி என்பது ____________
A.   போக்குவரத்து
B.   நீர்ப்பாசனம்
C.   இணைப்புக்கருவி
D.   உணர்வுப்பூர்வமானது
Answer: C.  இணைப்புக்கருவி
24.  பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
I. குடவோலை முறை - சேரர்
II. வாரியபெருமக்கள் - பாண்டியர்
III. வாரிபொத்தகம் - சோழர்
IV. பூமிபுத்திரர் - களப்பிரர்
A.   I
B.   II
C.   III
D.   IV
Answer: C.  III
25.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A.   எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ்
B.   ஜாலியன் வாலாபாக் துயரம் - ஹண்டர் கமிட்டி
C.   சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
D.   மதுவிலக்கு - வ.உ. சிதம்பரனார்
Answer: C.  சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
;