GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Tamil Questions 26 to 50

1.  'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' யார் கூற்று?
A.   பாரதியார்
B.   பாரதிதாசன்
C.   கண்ணதாசன்
D.   முடியரசன்
Answer: B.  பாரதிதாசன்
2.  கூடுகட்டி வாழும் பாம்பு எது?
A.   நல்ல பாம்பு
B.   இராஜ நாகம்
C.   பச்சைப் பாம்பு
D.   எதுவுமில்லை
Answer: B.  இராஜ நாகம்
3.  மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
A.   சுதமதி
B.   மணிமேகலை
C.   ஆதிரை
D.   காயசண்டிகை
Answer: D.  காயசண்டிகை
4.  'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்
A.   மதுரை
B.   ஊட்டி
C.   கொடைக்கானல்
D.   ஏற்காடு
Answer: A.  மதுரை
5.  ‘சதகம்' என்பது ____________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
A.   ஐம்பது
B.   நூறு
C.   ஆயிரம்
D.   பத்தாயிரம்
Answer: B.  நூறு
6.  “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...”
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
A.   சொல்லின் நாயகன்
B.   சொல்லின் தலைவன்
C.   சொல்லின் புலவன்
D.   சொல்லின் செல்வன்
Answer: D.  சொல்லின் செல்வன்
7.  'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?–
A.   பாரதிதாசன்
B.   விவேகானந்தர்
C.   சுபாஷ் சந்திர போஸ்
D.   திலகர்
Answer: B.  விவேகானந்தர்
8.  'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்' - இவ்வடியைப் பாடியவர்
A.   பாரதியார்
B.   பாரதிதாசன்
C.   கவிமணி
D.   சுரதா
Answer: B.  பாரதிதாசன்
9.  பொருத்தமான விடையை எழுதுக : 'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்' -
A.   அந்தகக் கவி
B.   இராமச்சந்திர கவிராயர்
C.   திருவள்ளுவர்
D.   உடுமலை நாராயணக் கவி
Answer: B.  இராமச்சந்திர கவிராயர்
10.  'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்
A.   ஒக்கூர் மாசாத்தியார்
B.   பொன்முடியார்
C.   காவற்பெண்டு
D.   ஔவையார்
Answer: B.  பொன்முடியார்
11.  அழுது அடியடைந்த அன்பர் ____________
A.   மாணிக்கவாசகர்
B.   வாகீசர்
C.   சரபேசர்
D.   மதுரேசர்
Answer: A.  மாணிக்கவாசகர்
12.  மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
A.   ஞானக் கடல்
B.   அறிவுக் கடல்
C.   அறிவு சாகரம்
D.   நாணக் கடல்
Answer: A.  ஞானக் கடல்
13.  'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
A.   சி.சு. செல்லப்பா
B.   பி.எஸ். ராமையா
C.   திரு.வி.க.
D.   வ. வே. சு. ஐயர்
Answer: A.  சி.சு. செல்லப்பா
14.  திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
A.   செய்யுள்
B.   உரைநடை
C.   இலக்கணம்
D.   நாடகம்
Answer: B.  உரைநடை
15.  'தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்
A.   யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
B.   சி.வை. தாமோதரம் பிள்ளை
C.   விபுலானந்த அடிகள்
D.   கனகசபைப் புலவர்
Answer: A.  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
16.  'முத்தொள்ளாயிரம்' - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
A.   சேர, சோழ, பாண்டியர்
B.   பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
C.   முகமதியர், ஆங்கிலேயர், மராட்டியர்
D.   குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
Answer: A.  சேர, சோழ, பாண்டியர்
17.  பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
A.   4 3 2 1
B.   2 4 3 1
C.   3 2 4 1
D.   1 2 3 4
Answer: C.  3 2 4 1
18.  'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?
A.   பாரதியார்
B.   பாரதிதாசன்
C.   திரு.வி.க.
D.   கவிமணி
Answer: B.  பாரதிதாசன்
19.  1942 -ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்
A.   வைத்தியநாத சர்மா
B.   வெ. சாமிநாத சர்மா
C.   தேவன்
D.   அநுத்தமா
Answer: B.  வெ. சாமிநாத சர்மா
20.  'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்
A.   வைரமுத்து
B.   தமிழன்பன்
C.   புதுமைப் பித்தன்
D.   க. சச்சிதானந்தன்
Answer: D.  க. சச்சிதானந்தன்
21.  அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
A.   2 4 1 3
B.   1 3 4 2
C.   3 4 2 1
D.   4 3 2 1
Answer: C.  3 4 2 1
22.  பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
A.   2 1 4 3
B.   1 2 3 4
C.   3 4 1 2
D.   4 3 2 1
Answer: C.  3 4 1 2
23.  வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ____________
A.   திருமங்கையாழ்வார்
B.   திருமழிசையாழ்வார்
C.   குலசேகராழ்வார்
D.   நம்மாழ்வார்
Answer: C.  குலசேகராழ்வார்
24.  'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
A.   மணிமேகலை
B.   சிலப்பதிகாரம்
C.   சீவகசிந்தாமணி
D.   பெரியபுராணம்
Answer: B.  சிலப்பதிகாரம்
25.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
A.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B.   மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
C.   சிவப்பிரகாசம்
D.   மணிவாசகர்
Answer: B.  மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
;