GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Tamil Questions 51 to 75

1.  வெற்பு, சிலம்பு, பொருப்பு ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
A.   நிலம்
B.   மலை
C.   காடு
D.   நாடு
Answer: B.  மலை
2.  'நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
A.   இரட்டுற மொழிதல்
B.   வட்டப் பலகை
C.   கட்டுச் சோறு
D.   காட்டுக் கோழி
Answer: D.  காட்டுக் கோழி
3.  'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' – இதில் மகடூஉ என்பது ____________
A.   மகள்
B.   மகன்
C.   பெண்
D.   ஆண்
Answer: C.  பெண்
4.  தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
A.   40
B.   35
C.   25
D.   45
Answer: B.  35
5.  கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
A.   தொகா, தொகை நிலைத் தொடர் 7
B.   தொகை, தொகா நிலைத் தொடர் 9
C.   தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
D.   தொகை நிலைத் தொடர் 9; தொகா நிலைத் தொடர் 6
Answer: C.  தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
6.  ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
A.   அளபெடை
B.   எழுத்துப்பேறு
C.   இதழ்குவி எழுத்து
D.   சந்தியக்கரம்
Answer: D.  சந்தியக்கரம்
7.  முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
A.   மாடு
B.   மூக்கு
C.   கதவு
D.   மார்பு
Answer: C.  கதவு
8.  கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.
A.   மீமிசை ஞாயிறு
B.   உயர்ந்த கட்டடம்
C.   மேல் பகுதி
D.   மையப் பகுதி
Answer: A.  மீமிசை ஞாயிறு
9.  'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
A.   பெற்றான்
B.   பெறுவான்
C.   பெறுகிறான்
D.   பெறுபவன்
Answer: D.  பெறுபவன்
10.  பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1. புறநகர்
(b) மங்கலம் 2. கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3. இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்
A.   2 3 1 4
B.   4 3 1 2
C.   1 2 3 4
D.   3 4 1 2
Answer: B.  4 3 1 2
11.  அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது - எவ்வகைப் பொருள்கோள்?
A.   அடிமறி மாற்றுப் பொருள்கோள்
B.   அளைமறிபாப்புப் பொருள்கோள்
C.   கொண்டு கூட்டுப் பொருள்கோள்
D.   மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer: D.  மொழிமாற்றுப் பொருள்கோள்
12.  பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
A.   வாயைப் பிளத்தல்
B.   அங்கம் காப்பு
C.   அகம் காத்தல்
D.   வாயைத் திறத்தல்
Answer: D.  வாயைத் திறத்தல்
13.  வினைமுற்றை தேர்க
A.   படி
B.   படித்த
C.   படித்து
D.   படித்தான்
Answer: D.  படித்தான்
14.  தவறான ஒன்றை தேர்க
A.   கிறு
B.   கிண்று
C.   ஆநின்று
D.   இல
Answer: D.  இல
15.  'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
A.   பாரதியார்
B.   சுரதா
C.   பாரதிதாசன்
D.   வாணிதாசன்
Answer: C.  பாரதிதாசன்
16.  இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
A.   உத்திரமேரூர்க் கல்வெட்டு
B.   ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
C.   அரியாங்குப்பம் கல்வெட்டு
D.   திருநாதர் குன்றம் கல்வெட்டு
Answer: D.  திருநாதர் குன்றம் கல்வெட்டு
17.  காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.
A.   சர்ச்சில்
B.   முசோலினி
C.   ஹிட்லர்
D.   ஸ்மட்ஸ்
Answer: A.  சர்ச்சில்
18.  'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன' இதனை பாடிய கவிஞர் யார்?
A.   ந.பிச்சமூர்த்தி
B.   வல்லிக்கண்ணன்
C.   புதுமைப்பித்தன்
D.   சி.சு.செல்லப்பா
Answer: B.  வல்லிக்கண்ணன்
19.  'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
A.   இரட்டையர்
B.   சமணர்
C.   பரணர்
D.   பௌத்தர்
Answer: A.  இரட்டையர்
20.  'இந்திய அரசியலில் சாணக்கியர்' ____________
A.   ஜவஹர்லால் நேரு
B.   வல்லபாய் படேல்
C.   இராஜகோபாலாச்சாரியார்
D.   இராதா கிருட்டிணன்
Answer: C.  இராஜகோபாலாச்சாரியார்
21.  ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
A.   இரட்சணிய யாத்திரிகம்
B.   இரட்சணிய மனோகரம்
C.   இரட்சணிய குறள்
D.   இரட்சணிய சரிதம்
Answer: A.  இரட்சணிய யாத்திரிகம்
22.  "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
A.   கல்யாண சுந்தரம்.
B.   பாரதிதாசன்
C.   முடியரசன்
D.   தமிழ்ஒளி
Answer: B.  பாரதிதாசன்
23.  "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
A.   பரிதிமாற் கலைஞர்
B.   நாமக்கல் கவிஞர்
C.   பாரதியார்
D.   பாரதிதாசன்
Answer: A.  பரிதிமாற் கலைஞர்
24.  ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
A.   சைவரால் இயற்றப்பட்டன
B.   வைணவரால் இயற்றப்பட்டன
C.   சமணரால் இயற்றப்பட்டன
D.   கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
Answer: C.  சமணரால் இயற்றப்பட்டன
25.  பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
A.   வேத நாயகம் பிள்ளை
B.   வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
C.   பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
D.   ஆறுமுக நாவலர்
Answer: D.  ஆறுமுக நாவலர்
;