GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' - யார் கூற்று?
Answer: B.   பாரதிதாசன்
27.  கூடுகட்டி வாழும் பாம்பு எது?
Answer: B.   இராஜ நாகம்
28.  மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
Answer: D.   காயசண்டிகை
29.  'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்
Answer: A.   மதுரை
30.  ‘சதகம்' என்பது ____________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
Answer: B.   நூறு
31.  “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...”
- இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
Answer: D.   சொல்லின் செல்வன்
32.  'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?
Answer: B.   விவேகானந்தர்
33.  'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்' - இவ்வடியைப் பாடியவர்
Answer: B.   பாரதிதாசன்
34.  பொருத்தமான விடையை எழுதுக: 'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்' -
Answer: B.   இராமச்சந்திர கவிராயர்
35.  'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்
Answer: B.   பொன்முடியார்
36.  அழுது அடியடைந்த அன்பர் ____________
Answer: A.   மாணிக்கவாசகர்
37.  மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
Answer: A.   ஞானக் கடல்
38.  'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
Answer: A.   சி.சு. செல்லப்பா
39.  திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
Answer: B.   உரைநடை
40.  'தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்
Answer: A.   யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
41.  'முத்தொள்ளாயிரம்' - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
Answer: A.   சேர, சோழ, பாண்டியர்
42.  பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
Answer: C.   3 2 4 1
43.  'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?
Answer: B.   பாரதிதாசன்
44.  1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்
Answer: B.   வெ. சாமிநாத சர்மா
45.  'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்
Answer: D.   க. சச்சிதானந்தன்
46.  அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Answer: C.   3 4 2 1
47.  பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
Answer: C.   3 4 1 2
48.  வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ____________
Answer: C.   குலசேகராழ்வார்
49.  'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
Answer: B.   சிலப்பதிகாரம்
50.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
Answer: B.   மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
;